அத்தியாயம்: 6, பாடம்: 45, ஹதீஸ் எண்: 1353

و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عَامِرِ بْنِ وَاثِلَةَ ‏ ‏أَنَّ ‏ ‏نَافِعَ بْنَ عَبْدِ الْحَارِثِ ‏ ‏لَقِيَ ‏ ‏عُمَرَ ‏ ‏بِعُسْفَانَ ‏ ‏وَكَانَ ‏ ‏عُمَرُ ‏ ‏يَسْتَعْمِلُهُ عَلَى ‏ ‏مَكَّةَ ‏ ‏فَقَالَ مَنْ اسْتَعْمَلْتَ عَلَى أَهْلِ الْوَادِي فَقَالَ ‏ ‏ابْنَ أَبْزَى ‏ ‏قَالَ وَمَنْ ‏ ‏ابْنُ أَبْزَى ‏ ‏قَالَ مَوْلًى مِنْ مَوَالِينَا قَالَ فَاسْتَخْلَفْتَ عَلَيْهِمْ مَوْلًى قَالَ إِنَّهُ قَارِئٌ لِكِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَإِنَّهُ عَالِمٌ بِالْفَرَائِضِ ‏
‏قَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏أَمَا إِنَّ نَبِيَّكُمْ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ قَالَ ‏ ‏إِنَّ اللَّهَ يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِهِ آخَرِينَ ‏
‏و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏أَبُو الْيَمَانِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعَيْبٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عَامِرُ بْنُ وَاثِلَةَ اللَّيْثِيُّ ‏ ‏أَنَّ ‏ ‏نَافِعَ بْنَ عَبْدِ الْحَارِثِ الْخُزَاعِيَّ ‏ ‏لَقِيَ ‏ ‏عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏ ‏بِعُسْفَانَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ

கலீஃபா உமர் (ரலி), நாஃபிஉ பின் அப்தில் ஹாரிஸ் (ரலி) அவர்களை மக்காவின் ஆளுநராக நியமித்திருந்த காலகட்டத்தில் நாஃபிஉ (ரலி), உமர் (ரலி) அவர்களை உஸ்ஃபான் எனுமிடத்தில் சந்தித்தார்கள். அப்போது உமர் (ரலி), “நீங்கள் இந்தப் பள்ளத்தாக்கு (மக்கா)வாசிகளுக்கு (தற்போது) எவரை ஆளுநராக நியமித்திருக்கின்றீர்?” என்று நாஃபிஉ (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நாஃபிஉ (ரலி), “(அப்துர் ரஹ்மான்) இப்னு அப்ஸா (ரலி) அவர்களை” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி), “இப்னு அப்ஸா என்பவர் யார்?” எனக் கேட்டார்கள். அதற்கு நாஃபிஉ (ரலி), “எங்களால் விடுதலை செய்யப்பட்ட எங்கள் (முன்னாள்) அடிமைகளில் ஒருவர்” என பதிலளித்தார்கள். அதற்கு உமர் (ரலி), “அவர்களுக்கு ஆட்சித் தலைவராக ஒரு முன்னாள் அடிமையையா நியமித்தீர்?” என்று வினவினார்கள். அதற்கு நாஃபிஉ (ரலி), “அவர் (இப்னு அப்ஸா) வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ்வின் வேதத்தை அறிந்தவர்; பாகப் பிரிவினைச் சட்டங்களின் தேர்ந்த அறிஞர்” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உமர் (ரலி), “அறிந்துகொள்க: ‘அல்லாஹ் இந்த வேதத்தின் மூலம் சிலரை உயர்த்துகிறான்; வேறு சிலரைத் தாழ்த்துகிறான்’ என்று உங்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு அப்ஸா வேத அறிவினால் மேன்மை பெற்றார்)” என்று அங்கீகரித்தார்கள்.

அறிவிப்பாளர் : நாஃபிஉ பின் அப்தில் ஹாரிஸ் (ரலி) வழியாக ஆமிர் பின் வாஸிலா (ரஹ்)

குறிப்பு :

அபுல் யமான் (ரஹ்) வழி அறிவிப்பில், “நாஃபிஉ பின் அல்ஹாரிஸ் அல்குஸாஈ (ரலி) அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களை உஸ்ஃபான் என்னுமிடத்தில் சந்தித்தார்கள்” என ஹதீஸ் தொடங்குகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 6, பாடம்: 45, ஹதீஸ் எண்: 1352

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏وَمُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ ‏ ‏يَقُولُا ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا فَسَلَّطَهُ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ وَرَجُلٌ آتَاهُ اللَّهُ حِكْمَةً فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا

“அல்லாஹ் ஒருவருக்குச் செல்வத்தை வழங்கி, அதை அறவழியில் செலவழிக்க அவரைத் தூண்டியவர்; அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப (செயல்பட்டு) தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக்கொடுப்பவராகவும் திகழ்கின்ற ஒருவர் ஆகிய இருவரின் (நல்லறச்) செயல்பாடுகளைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்ளக் கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 45, ஹதீஸ் எண்: 1351

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا حَسَدَ إِلَّا عَلَى اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ هَذَا الْكِتَابَ فَقَامَ بِهِ ‏ ‏آنَاءَ ‏ ‏اللَّيْلِ ‏ ‏وَآنَاءَ ‏ ‏النَّهَارِ وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا فَتَصَدَّقَ بِهِ ‏ ‏آنَاءَ ‏ ‏اللَّيْلِ ‏ ‏وَآنَاءَ ‏ ‏النَّهَارِ

“அல்லாஹ் ஒருவருக்கு வேத ஞானத்தை வழங்கி, அதன்படி அல்லும் பகலும் செயல்படுபவர்; அல்லாஹ் ஒருவருக்குச் செல்வத்தை வழங்கி, அதை அல்லும் பகலும் தானம் செய்பவர் ஆகிய இரு(வரின் நல்லறச்) செயல்பாடுகளைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்வது கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 6, பாடம்: 45, ஹதீஸ் எண்: 1350

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏
‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ الْقُرْآنَ فَهُوَ يَقُومُ بِهِ ‏ ‏آنَاءَ ‏ ‏اللَّيْلِ ‏ ‏وَآنَاءَ ‏ ‏النَّهَارِ وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا فَهُوَ يُنْفِقُهُ ‏ ‏آنَاءَ ‏ ‏اللَّيْلِ ‏ ‏وَآنَاءَ ‏ ‏النَّهَارِ

“அல்லாஹ் குர்ஆன் ஞானத்தை அருளி, அதன்படி அல்லும் பகலும் செயல்படும் ஒருவர்; அல்லாஹ் செல்வத்தை வழங்கி, அதை அல்லும் பகலும் தானம் செய்யும் ஒருவர் ஆகிய இரு(வரின் நல்லறச்) செயல்பாடுகளைத் தவிர வேறெதிலும் பொறாமை கொள்வது கூடாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)