அத்தியாயம்: 6, பாடம்: 08, ஹதீஸ் எண்: 1163

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ
‏ ‏سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصِ بْنِ عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ بُحَيْنَةَ ‏ ‏قَالَ ‏

أُقِيمَتْ صَلَاةُ الصُّبْحِ فَرَأَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَجُلًا ‏ ‏يُصَلِّي وَالْمُؤَذِّنُ يُقِيمُ فَقَالَ ‏ ‏أَتُصَلِّي الصُّبْحَ أَرْبَعًا

சுப்ஹுத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டபோது ஒருவர் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கண்டார்கள். முஅத்தின் இகாமத் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “சுப்ஹை நான்கு ரக்அத்களாகத் தொழப்போகிறீரா?” என்று அவரிடம் கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு புஹைனா (ரலி)

குறிப்பு :

இந்த அறிவிப்பில் இப்னு புஹைனா (ரலி) என அறியப்படுபவர், அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) ஆவார்.

Share this Hadith:

Leave a Comment