அத்தியாயம்: 8, பாடம்: 1, ஹதீஸ் எண்: 1474

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ الْأَحْوَلِ ‏ ‏عَنْ ‏ ‏حَفْصَةَ بِنْتِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ عَطِيَّةَ ‏ ‏قَالَتْ ‏

‏كُنَّا نُؤْمَرُ بِالْخُرُوجِ فِي الْعِيدَيْنِ ‏ ‏وَالْمُخَبَّأَةُ ‏ ‏وَالْبِكْرُ قَالَتْ الْحُيَّضُ يَخْرُجْنَ فَيَكُنَّ خَلْفَ النَّاسِ يُكَبِّرْنَ مَعَ النَّاسِ

பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரையிட்டுக்கொள்ளும் பெண்களையும் கன்னிப் பெண்களையும் அழைத்துச் செல்ல வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்துகொண்டு மக்களுடன் சேர்ந்து “தக்பீர்” கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு அத்திய்யா (ரலி)

Share this Hadith:

Leave a Comment