அத்தியாயம்: 15, பாடம்: 31, ஹதீஸ் எண்: 2181

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَالِيَةِ ‏
‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏
‏صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الصُّبْحَ ‏ ‏بِذِي طَوًى ‏ ‏وَقَدِمَ لِأَرْبَعٍ مَضَيْنَ مِنْ ذِي الْحِجَّةِ وَأَمَرَ
أَصْحَابَهُ أَنْ يُحَوِّلُوا إِحْرَامَهُمْ بِعُمْرَةٍ إِلَّا مَنْ كَانَ مَعَهُ ‏ ‏الْهَدْيُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மக்காவிற்கு அருகிலுள்ள) ‘தூ தவா’ எனும்
பள்ளத்தாக்கில் ஸுப்ஹுத் தொழுகை தொழுதார்கள். துல்ஹஜ் நான்காவது நாள்
மக்காவிற்கு வந்து, தம் தோழர்களில் பலிப் பிராணியைத் தம்முடன்
கொண்டு வந்தவர்கள் தவிர மற்றவர்கள் தமது இஹ்ராமை உம்ராவாக
மாற்றிக் கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 31, ஹதீஸ் எண்: 2180

‏و حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْفَضْلِ السَّدُوسِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَيُّوبُ ‏
‏عَنْ ‏ ‏أَبِي الْعَالِيَةِ الْبَرَّاءِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏
‏قَدِمَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَصْحَابُهُ لِأَرْبَعٍ ‏ ‏خَلَوْنَ ‏ ‏مِنْ الْعَشْرِ وَهُمْ يُلَبُّونَ بِالْحَجِّ ‏ ‏فَأَمَرَهُمْ أَنْ
يَجْعَلُوهَا عُمْرَةً

நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (துல்ஹஜ் மாதம் முதல்)
பத்தின் நான்காவது நாளில் ஹஜ்ஜுக்காக தல்பியாச் சொன்னவர்களாக
(மக்காவிற்கு) வந்தார்கள். (தோழர்கள்) தமது இஹ்ராமை உம்ராவாக
ஆக்கிக் கொள்ளுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 31, ஹதீஸ் எண்: 2179

حَدَّثَنَا ‏ ‏نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْعَالِيَةِ
الْبَرَّاءِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَقُولُا ‏
‏أَهَلَّ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْحَجِّ فَقَدِمَ لِأَرْبَعٍ مَضَيْنَ مِنْ ذِي الْحِجَّةِ فَصَلَّى الصُّبْحَ وَقَالَ
لَمَّا صَلَّى الصُّبْحَ ‏ ‏مَنْ شَاءَ أَنْ يَجْعَلَهَا عُمْرَةً فَلْيَجْعَلْهَا عُمْرَةً ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو دَاوُدَ الْمُبَارَكِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو شِهَابٍ ‏
‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ كَثِيرٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏أَمَّا
‏ ‏رَوْحٌ ‏ ‏وَيَحْيَى بْنُ كَثِيرٍ ‏ ‏فَقَالَا كَمَا قَالَ ‏ ‏نَصْرٌ ‏ ‏أَهَلَّ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْحَجِّ ‏
‏وَأَمَّا ‏ ‏أَبُو شِهَابٍ ‏ ‏فَفِي رِوَايَتِهِ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نُهِلُّ ‏ ‏بِالْحَجِّ وَفِي
حَدِيثِهِمْ جَمِيعًا فَصَلَّى الصُّبْحَ ‏ ‏بِالْبَطْحَاءِ ‏ ‏خَلَا ‏ ‏الْجَهْضَمِيَّ ‏ ‏فَإِنَّهُ لَمْ يَقُلْهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ்ஜுக்காகத் தல்பியா கூறி, துல்ஹஜ் மாதம்
நான்காவது நாள் (காலை மக்காவிற்கு) வந்து, சுப்ஹுத் தொழுகை
தொழுவித்தார்கள். சுப்ஹுத் தொழுகையை முடித்ததும், “தமது இஹ்ராமை
உம்ராவாக ஆக்கிக்கொள்ள விரும்புபவர் அதை உம்ராவாக ஆக்கிக் கொள்ளட்டும்”
என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

ரவ்ஹு பின் உபாதா (ரஹ்), யஹ்யா பின் கஸீர் (ரஹ்) ஆகியோரின்
அறிவிப்புகளில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகத் தல்பியாக்
கூறினார்கள்” என்று நஸ்ரு பின் அலீ (ரஹ்) அவர்களது முந்தைய அறிவிப்பில்
இடம்பெற்றதைப் போன்றே உள்ளது.

அபூஷிஹாப் அப்து ரப்பிஹி பின் நாஃபிஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நாங்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்காகத் தல்பியாக் கூறினோம்”
என்று காணப்படுகிறது.

நஸ்ரு பின் அலீ (ரஹ்) அவர்களைத் தவிர மற்ற அனைவரின் அறிவிப்புகளிலும்
“அல்பத்ஹா எனுமிடத்தில் ஸுப்ஹுத் தொழுதார்கள்” எனும் குறிப்பு கூடுதலாக
இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 31, ஹதீஸ் எண்: 2178

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏
‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏
‏كَانُوا يَرَوْنَ أَنَّ الْعُمْرَةَ فِي أَشْهُرِ الْحَجِّ مِنْ أَفْجَرِ الْفُجُورِ فِي الْأَرْضِ وَيَجْعَلُونَ الْمُحَرَّمَ صَفَرًا وَيَقُولُونَ إِذَا
‏ ‏بَرَأَ ‏ ‏الدَّبَرْ وَعَفَا ‏ ‏الْأَثَرْ ‏ ‏وَانْسَلَخَ ‏ ‏صَفَرْ حَلَّتْ الْعُمْرَةُ لِمَنْ ‏ ‏اعْتَمَرْ فَقَدِمَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ ‏ ‏وَأَصْحَابُهُ صَبِيحَةَ رَابِعَةٍ ‏ ‏مُهِلِّينَ ‏ ‏بِالْحَجِّ ‏ ‏فَأَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً ‏ ‏فَتَعَاظَمَ ‏ ‏ذَلِكَ عِنْدَهُمْ
فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْحِلِّ قَالَ الْحِلُّ كُلُّهُ

அ(றியாமைக் காலத்த)வர்கள், ஹஜ்ஜுப் பருவ மாதங்களில் உம்ராச் செய்வது
பூமியில் நடக்கும் பாவங்களிலேயே மிகக் கொடிய பாவம் எனக் கருதியிருந்தனர்.
(துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள், போர் செய்யத் தடை
விதிக்கப்பட்ட புனித மாதங்களாக வழக்கில் இருந்ததால்) முஹர்ரம்
மாதத்திற்கான தடையை ஸஃபருக்கு மாற்றிக் கொள்வார்கள். (ஹஜ்
பயணத்திற்கான சுமையைச் சுமந்த ஒட்டகங்களின் முதுகில்) வடு மறைந்து,
காலடித் தடங்கள் அழிந்து, ஸஃபர் மாதம் கழிந்தால் உம்ராவை நாடியவர், உம்ராச் செய்யலாம் என்றும் அவர்கள் கூறிவந்தனர்.

நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காவது நாள்
காலை, ஹஜ்ஜுக்காக (மக்காவிற்கு) வந்தபோது, (தம் தோழர்களிடம்) அவர்களது
இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக் கொள்ளுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.
இது நபித்தோழர்களுக்கு மிகக் கடினமாகத் தெரிந்தது.

இதனால், “அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிலிருந்து விடுபடுவதால் எந்தச் செயல்கள் அனுமதிக்கப்படும்?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்), “எல்லாமும் அனுமதிக்கப்படும்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 30, ஹதீஸ் எண்: 2177

‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُسْلِمٌ الْقُرِّيُّ ‏ ‏سَمِعَ ‏ ‏ابْنَ عَبَّاسٍ
‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَقُولُا ‏

‏أَهَلَّ ‏ ‏النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِعُمْرَةٍ ‏ ‏وَأَهَلَّ ‏ ‏أَصْحَابُهُ بِحَجٍّ فَلَمْ يَحِلَّ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ ‏ ‏وَلَا مَنْ سَاقَ ‏ ‏الْهَدْيَ ‏ ‏مِنْ أَصْحَابِهِ وَحَلَّ بَقِيَّتُهُمْ فَكَانَ ‏ ‏طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ ‏ ‏فِيمَنْ سَاقَ ‏ ‏الْهَدْيَ
‏ ‏فَلَمْ يَحِلَّ ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ يَعْنِي ابْنَ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ
‏ ‏وَكَانَ مِمَّنْ لَمْ يَكُنْ مَعَهُ ‏ ‏الْهَدْيُ ‏ ‏طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ ‏ ‏وَرَجُلٌ آخَرُ فَأَحَلَّا

நபி (ஸல்) உம்ராவிற்காகத் தல்பியாச் சொன்னார்கள். அவர்களுடைய தோழர்கள்
ஹஜ்ஜுக்காகத் தல்பியாச் சொன்னார்கள். நபி (ஸல்) இஹ்ராமிலிருந்து
விடுபடவில்லை; அவர்களுடைய தோழர்களில் தம்முடன் பலிப் பிராணியைக்
கொண்டு வந்தவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. மற்றவர்கள்
இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். பலிப் பிராணியைக் கொண்டு வந்தவர்களுள்
தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களும் ஒருவராக இருந்ததால்
அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பில், “தம்மிடம் பலிப் பிராணி
இல்லாதவர்களுள் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களும்
மற்றொருவரும் இருந்தனர். எனவே, அவர்கள் இருவரும் இஹ்ராமிலிருந்து
விடுபட்டனர்” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 29, ஹதீஸ் எண்: 2175

‏و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْأَسْوَدِ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏مَوْلَى ‏ ‏أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏حَدَّثَهُ ‏
‏أَنَّهُ كَانَ ‏ ‏يَسْمَعُ ‏ ‏أَسْمَاءَ ‏ ‏كُلَّمَا مَرَّتْ ‏ ‏بِالْحَجُونِ ‏ ‏تَقُولُ صَلَّى اللَّهُ عَلَى رَسُولِهِ وَسَلَّمَ لَقَدْ نَزَلْنَا مَعَهُ هَاهُنَا وَنَحْنُ يَوْمَئِذٍ خِفَافُ الْحَقَائِبِ قَلِيلٌ ‏ ‏ظَهْرُنَا ‏ ‏قَلِيلَةٌ ‏ ‏أَزْوَادُنَا ‏ ‏فَاعْتَمَرْتُ أَنَا وَأُخْتِي ‏ ‏عَائِشَةُ ‏ ‏وَالزُّبَيْرُ ‏ ‏وَفُلَانٌ وَفُلَانٌ فَلَمَّا مَسَحْنَا ‏ ‏الْبَيْتَ ‏ ‏أَحْلَلْنَا ثُمَّ ‏ ‏أَهْلَلْنَا ‏ ‏مِنْ الْعَشِيِّ بِالْحَجِّ ‏
‏قَالَ ‏ ‏هَارُونُ ‏ ‏فِي رِوَايَتِهِ أَنَّ مَوْلَى ‏ ‏أَسْمَاءَ ‏ ‏وَلَمْ يُسَمِّ ‏ ‏عَبْدَ اللَّهِ

அஸ்மா (ரலி) (மக்காவிலுள்ள) ‘அல்ஹஜூன்’ எனும் மலையைக் கடந்து செல்லும் போதெல்லாம், “அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கருணை புரியட்டும்! சாந்தி அளிக்கட்டும்! நாங்கள் (ஒரு பயணத்தில்) அவர்களுடன் இங்கு வந்துத் தங்கினோம். அப்போது எங்களிடம் (பயணத்திற்கான) மூட்டை முடிச்சுகள் சொற்பமாகவே இருந்தன; பயண வாகனங்களும் உணவுகளும் குறைவாகவே இருந்தன.

அப்போது நானும் என் சகோதரி ஆயிஷாவும் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களும் இன்ன மனிதரும் இன்ன மனிதரும் உம்ராவிற்காக இஹ்ராம் பூண்டு தல்பியாச் சொன்னோம். நாங்கள் கஅபாவைச் சுற்றி (’ஸயீ’யும் செய்து) வந்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டோம். பிறகு மாலையில் ஹஜ்ஜுக்காக முஹ்ரிம் ஆனோம்“ என்று கூறுவதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பாளர் : அஸ்மா (ரலி) வழியாக அவர்களின் முன்னாள் அடிமையான அப்துல்லாஹ் பின் கைஸான் (ரஹ்)


குறிப்பு :

ஹாரூன் பின் ஸயீத் (ரஹ்) வழி அறிவிப்பில், அப்துல்லாஹ் எனும் பெயர் இடம்பெறாமல், “அஸ்மா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை கூறியதாவது” என்றே இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 15, பாடம்: 29, ஹதீஸ் எண்: 2173

‏حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو وَهُوَ ابْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ ‏ ‏الْعِرَاقِ ‏ ‏قَالَ لَهُ سَلْ لِي ‏ ‏عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ ‏ ‏عَنْ رَجُلٍ يُهِلُّ بِالْحَجِّ فَإِذَا طَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏أَيَحِلُّ أَمْ لَا فَإِنْ قَالَ لَكَ لَا يَحِلُّ فَقُلْ لَهُ إِنَّ رَجُلًا يَقُولُ ذَلِكَ ‏
‏قَالَ ‏ ‏فَسَأَلْتُهُ فَقَالَ ‏ ‏لَا يَحِلُّ مَنْ ‏ ‏أَهَلَّ ‏ ‏بِالْحَجِّ إِلَّا بِالْحَجِّ قُلْتُ فَإِنَّ رَجُلًا كَانَ يَقُولُ ذَلِكَ قَالَ بِئْسَ مَا قَالَ فَتَصَدَّانِي الرَّجُلُ فَسَأَلَنِي فَحَدَّثْتُهُ فَقَالَ فَقُلْ لَهُ فَإِنَّ رَجُلًا كَانَ يُخْبِرُ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ فَعَلَ ذَلِكَ وَمَا شَأْنُ ‏ ‏أَسْمَاءَ ‏ ‏وَالزُّبَيْرِ ‏ ‏قَدْ فَعَلَا ذَلِكَ قَالَ فَجِئْتُهُ فَذَكَرْتُ لَهُ ذَلِكَ فَقَالَ مَنْ هَذَا فَقُلْتُ لَا أَدْرِي قَالَ فَمَا بَالُهُ لَا يَأْتِينِي بِنَفْسِهِ يَسْأَلُنِي أَظُنُّهُ عِرَاقِيًّا قُلْتُ لَا أَدْرِي قَالَ فَإِنَّهُ قَدْ كَذَبَ قَدْ حَجَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَخْبَرَتْنِي ‏ ‏عَائِشَةُ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏أَنَّ أَوَّلَ شَيْءٍ بَدَأَ بِهِ حِينَ قَدِمَ ‏ ‏مَكَّةَ ‏ ‏أَنَّهُ تَوَضَّأَ ثُمَّ طَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏
‏ثُمَّ حَجَّ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فَكَانَ أَوَّلَ شَيْءٍ بَدَأَ بِهِ الطَّوَافُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏ثُمَّ لَمْ يَكُنْ غَيْرُهُ ‏ ‏ثُمَّ ‏ ‏عُمَرُ ‏ ‏مِثْلُ ذَلِكَ ثُمَّ حَجَّ ‏ ‏عُثْمَانُ ‏ ‏فَرَأَيْتُهُ أَوَّلُ شَيْءٍ بَدَأَ بِهِ الطَّوَافُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏ثُمَّ لَمْ يَكُنْ غَيْرُهُ ثُمَّ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏ثُمَّ حَجَجْتُ مَعَ أَبِي ‏ ‏الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ ‏ ‏فَكَانَ أَوَّلَ شَيْءٍ بَدَأَ بِهِ الطَّوَافُ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏ثُمَّ لَمْ يَكُنْ غَيْرُهُ ثُمَّ رَأَيْتُ ‏ ‏الْمُهَاجِرِينَ ‏ ‏وَالْأَنْصَارَ ‏ ‏يَفْعَلُونَ ذَلِكَ ثُمَّ لَمْ يَكُنْ غَيْرُهُ ثُمَّ آخِرُ مَنْ رَأَيْتُ فَعَلَ ذَلِكَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏ثُمَّ لَمْ يَنْقُضْهَا بِعُمْرَةٍ وَهَذَا ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏عِنْدَهُمْ أَفَلَا يَسْأَلُونَهُ وَلَا أَحَدٌ مِمَّنْ مَضَى مَا كَانُوا يَبْدَءُونَ بِشَيْءٍ حِينَ يَضَعُونَ أَقْدَامَهُمْ أَوَّلَ مِنْ الطَّوَافِ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏ثُمَّ لَا يَحِلُّونَ وَقَدْ رَأَيْتُ ‏ ‏أُمِّي ‏ ‏وَخَالَتِي حِينَ تَقْدَمَانِ لَا تَبْدَأَانِ بِشَيْءٍ أَوَّلَ مِنْ ‏ ‏الْبَيْتِ ‏ ‏تَطُوفَانِ بِهِ ثُمَّ لَا تَحِلَّانِ وَقَدْ أَخْبَرَتْنِي أُمِّي أَنَّهَا أَقْبَلَتْ هِيَ ‏ ‏وَأُخْتُهَا ‏ ‏وَالزُّبَيْرُ ‏ ‏وَفُلَانٌ وَفُلَانٌ بِعُمْرَةٍ قَطُّ فَلَمَّا مَسَحُوا الرُّكْنَ حَلُّوا وَقَدْ كَذَبَ فِيمَا ذَكَرَ مِنْ ذَلِكَ

இராக்வாசிகளில் ஒருவர் என்னிடம் வந்து, “நீங்கள் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம், ‘ஒருவர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூண்டு, (மக்காவிற்கு வந்ததும்) கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் குதூம்) வந்த பிறகு அவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளலாமா, கூடாதா?’ என்று கேளுங்கள். உர்வா (ரஹ்) ‘இஹ்ராமிலிருந்து விடுபடக்கூடது’ என்று பதிலளித்தால், ‘விடுபடலாம் என ஒருவர் கூறுகிறாரே?’ என்று (மீண்டும்) கேளுங்கள்” என்றார்.

அவ்வாறே நான் உர்வா (ரஹ்) அவர்களிடம் (சென்று) கேட்டபோது, “ஹஜ்ஜுக்காக இஹ்ராம் பூண்டவர் ஹஜ்ஜை முடிக்காமல் இஹ்ராமிலிருந்து விடுபடலாகாது” என்று விடையளித்தார்கள். நான் “அப்படியானால், விடுபடலாம் என ஒருவர் கூறுகிறாரே?” என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்), “அவர் சொன்னது தவறு” என்றார்கள்.

பின்னர் அந்த இராக்வாசி என் எதிரே வந்து அ(வர் கூறியனுப்பிய)து பற்றி என்னிடம் கேட்டார். அ(ப்போது உர்வா (ரஹ்) கூறிய)தை நான் அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் என்னிடம், “அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவ்வாறு செய்துள்ளதாக அந்த ஒருவர் தெரிவித்து வந்தாரே? அஸ்மா (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோரின் நிலை என்ன? அவர்களும் அவ்வாறு செய்துள்ளனரே?’ என்று உர்வா (ரஹ்) அவர்களிடம் நீங்கள் கேளுங்கள்” என்றார்.

அவ்வாறே நான் (மீண்டும்) உர்வா (ரஹ்) அவர்களிடம் வந்து அதைத் தெரிவித்தேன். அப்போது உர்வா (ரஹ்), “யார் அவர்?” என்று கேட்டார்கள். நான், “எனக்குத் தெரியாது” என்றேன். அதற்கு உர்வா (ரஹ்), “என்னிடம் நேரடியாக வந்து கேட்பதில் அவருக்கு என்ன பிரச்சினை? அவர் இராக்வாசியாக இருக்கக்கூடும் என்றே நான் கருதுகிறேன்” என்றார்கள். நான், “எனக்குத் தெரியாது” என்று (மீண்டும்) சொன்னேன்.

உர்வா (ரஹ்), “அவர் பொய்யுரைத்து விட்டார்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) செய்த ஹஜ்ஜைப் பற்றி ஆயிஷா (ரலி) என்னிடம் தெரிவித்துள்ளார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்காவிற்கு வந்ததும் முதல் வேலையாக உளூச் செய்தார்கள். பிறகு கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் குதூம்) வந்தார்கள்.

அபூபக்ரு (ரலி) ஹஜ்ஜுக்கு வந்தபோது, முதல் வேலையாக கஅபாவைச் சுற்றிவந்தார்கள். பின்னர் அதைத் தவிர வேறெதுவும் நிகழவில்லை. உமர் (ரலி) ஹஜ்ஜுக்கு வந்தபோதும், அ(பூபக்ரு (ரலி) செய்த)தைப் போன்றே செய்தார்கள். பின்னர் உஸ்மான் (ரலி) ஹஜ் செய்தார்கள். அவர்கள் (மக்காவிற்கு வந்ததும்) முதல் வேலையாக கஅபாவைச் சுற்றி வந்ததையே நான் கண்டேன்; பின்னர் அதைத் தவிர (ஹஜ்ஜை உம்ராவாக மாற்றுதல், ஹஜ்ஜோடு உம்ராவைச் சேர்த்தல் போன்ற) வேறெதுவும் நிகழவில்லை.

முஆவியா (ரலி), அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆகியோரும் (அவ்வாறே செய்தனர்.) பின்னர் என் தந்தை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களுடன் நான் ஹஜ் செய்தேன். அவர்களின் முதல் வேலையாக இருந்ததும் கஅபாவைச் சுற்றுவதாகத்தான் இருந்தது. அதைத் தவிர வேறொன்றும் நடக்கவில்லை. பின்னர் முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் அவ்வாறு செய்வதையே நான் கண்டேன்; அதைத் தவிர வேறெதுவும் நிகழவில்லை.

அவ்வாறு செய்தவர்களில் இறுதியானவராக இப்னு உமர் (ரலி) அவர்களையே நான் கண்டேன். அவர்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றவில்லை. இதோ அவர்களுடன் இப்னு உமர் (ரலி) அவர்களே இருக்கிறார்கள். அவர்களிடமே மக்கள் கேட்க வேண்டியதுதானே! முன்னோர்களில் எவரும் தம் பாதங்களை (மக்காவில்) பதித்ததும் முதல் வேலையாக கஅபாவைச் சுற்றிவராமல் இருந்ததில்லை. பின்னர் (ஹஜ்ஜை முடிக்காமல்) இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டார்கள். என் தாயார் (அஸ்மா -ரலி), என் சிறிய தாயார் (ஆயிஷா -ரலி) ஆகியோர் (மக்காவிற்கு) வந்ததும் முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றிவராமல் வேறெதையும் தொடங்கமாட்டார்கள். பின்னர் (ஹஜ்ஜை முடிக்கும்வரை) இஹ்ராமிலிருந்து விடுபடாமல் இருப்பார்கள்.

என் தாயார் (அஸ்மா -ரலி) என்னிடம், “நானும் என் சகோதரி (ஆயிஷா -ரலி) அவர்களும் (உன் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களும் மற்றும் இன்னின்னவரும் உம்ராவிற்குச் சென்றபோது ஹஜருல் அஸ்வதைத் தொட்டதும் (அதாவது தவாஃபும் ஸயீயும் செய்து முடித்ததும்) இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டோம்” என்று தெரிவித்தார்கள். (எனவே இராக்வாசியான) அந்த மனிதர் பொய்யான தகவலையே குறிப்பிட்டுள்ளார்” என்று உர்வா (ரஹ்) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அஸ்மா (ரலி), உர்வா (ரஹ்) வழியாக முஹம்மது பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 28, ஹதீஸ் எண்: 2172

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏قَالَ ‏ ‏سَأَلْنَا ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏عَنْ رَجُلٍ قَدِمَ بِعُمْرَةٍ فَطَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏وَلَمْ يَطُفْ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏أَيَأْتِي امْرَأَتَهُ ‏ ‏فَقَالَ ‏
‏قَدِمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَطَافَ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏سَبْعًا وَصَلَّى خَلْفَ ‏ ‏الْمَقَامِ ‏ ‏رَكْعَتَيْنِ وَبَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ ‏ ‏سَبْعًا وَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ ‏
‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏عَنْ ‏ ‏حَمَّادِ بْنِ زَيْدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ

நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “ஒருவர் உம்ராவிற்காக வந்து, கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துவிட்டார். ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ செய்யவில்லை. இந்நிலையில், அவர் (இஹ்ராமிலிருந்து நீங்கி) தம் மனைவியுடன் உறவு கொள்ளலாமா?” என்று கேட்டோம்.

அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மக்காவிற்கு) வந்தபோது கஅபாவை ஏழு முறைச் சுற்றிவந்தார்கள். பிறகு மகாமு இப்ராஹீமிற்குப் பின்னால் (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு ஸஃபா-மர்வாவுக்கிடையேயும் ஏழு முறை (ஓடினார்கள்). உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது” என்று இப்னு உமர் (ரலி) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக அம்ரு பின் தீனார் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 27, ஹதீஸ் எண்: 2169

‏و حَدَّثَنِي ‏ ‏أُمَيَّةُ بْنُ بِسْطَامَ الْعَيْشِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبِيبُ بْنُ الشَّهِيدِ ‏ ‏عَنْ ‏ ‏بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَنَسٌ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏
‏أَنَّهُ رَأَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَمَعَ بَيْنَهُمَا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ ‏
‏قَالَ فَسَأَلْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَهْلَلْنَا ‏ ‏بِالْحَجِّ ‏ ‏فَرَجَعْتُ إِلَى ‏ ‏أَنَسٍ ‏ ‏فَأَخْبَرْتُهُ مَا قَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏فَقَالَ كَأَنَّمَا كُنَّا صِبْيَانًا

“நபி (ஸல்) ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் சேர்த்துச் செய்ததை நான் கண்டேன்” என்று அனஸ் (ரலி) கூறினார்கள். நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டபோது அவர்கள், “நாங்கள் ஹஜ்ஜுக்கு (மட்டுமே) தல்பியாச் சொன்னோம்” என்றார்கள்.

நான் அனஸ் (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து, இப்னு உமர் (ரலி) சொன்னதை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அனஸ் (ரலி) “நான் (ஒன்றுமறியாத) நம் சிறுவர்களைப் போல் இருந்தேனோ?” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக பக்ரு பின் அப்தில்லாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 27, ஹதீஸ் எண்: 2168

‏و حَدَّثَنَا ‏ ‏سُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُمَيْدٌ ‏ ‏عَنْ ‏ ‏بَكْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏قَالَ ‏
‏سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُلَبِّي بِالْحَجِّ وَالْعُمْرَةِ جَمِيعًا ‏
‏قَالَ ‏ ‏بَكْرٌ ‏ ‏فَحَدَّثْتُ بِذَلِكَ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏فَقَالَ ‏ ‏لَبَّى بِالْحَجِّ وَحْدَهُ ‏ ‏فَلَقِيتُ ‏ ‏أَنَسًا ‏ ‏فَحَدَّثْتُهُ بِقَوْلِ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَنَسٌ ‏ ‏مَا تَعُدُّونَنَا إِلَّا صِبْيَانًا سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَبَّيْكَ عُمْرَةً وَحَجًّا

“நபி (ஸல்) ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து தல்பியாச் சொன்னதை நான் செவியுற்றேன்” என்று அனஸ் (ரலி) கூறினார்கள். நான் அதை இப்னு உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) ஹஜ்ஜுக்கு மட்டுமே தல்பியாச் சொன்னார்கள்” என்றார்கள்.

பின்னர் நான் அனஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது இப்னு உமர் (ரலி) கூறியதை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அனஸ் (ரலி), “என்னை நீங்கள் (ஒன்றுமறியா) நம் சிறுவர்களைப் போல் எண்ணிக் கொண்டீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘லப்பைக்க உம்ரத்தன் வ ஹஜ்ஜன்’ (நான் உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் தல்பியாச் சொல்கிறேன்) என்று கூறியதை நான் செவியுற்றேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக பக்ரு பின் அப்தில்லாஹ் (ரஹ்)