அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2258

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أُسَامَةَ بْنَ زَيْدٍ ‏ ‏يَقُولُ: ‏

أَفَاضَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ ‏ ‏عَرَفَاتٍ ‏ ‏فَلَمَّا انْتَهَى إِلَى ‏ ‏الشِّعْبِ ‏ ‏نَزَلَ فَبَالَ ‏ ‏وَلَمْ يَقُلْ ‏ ‏أُسَامَةُ ‏ ‏أَرَاقَ الْمَاءَ ‏ ‏قَالَ فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ وُضُوءًا لَيْسَ بِالْبَالِغِ قَالَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ الصَّلَاةَ قَالَ ‏ ‏الصَّلَاةُ أَمَامَكَ قَالَ ثُمَّ سَارَ حَتَّى بَلَغَ ‏ ‏جَمْعًا ‏ ‏فَصَلَّى الْمَغْرِبَ وَالْعِشَاءَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அரஃபாவிலிருந்து திரும்பியபோது, (வழியில்) ஒரு பள்ளத்தாக்கை அடைந்ததும் (வாகனத்திலிருந்து) இறங்கி, சிறுநீர் கழித்தார்கள்$. பிறகு தண்ணீர் கொண்டுவரச் சொல்லி சுருக்கமாக உளூச் செய்தார்களேயன்றி, அழகுறச் செய்யவில்லை. அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகை உமக்கு எதிரே (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது” என்றார்கள். பிறகு பயணத்தைத் தொடர்ந்து முஸ்தலிஃபா வந்ததும் மஃக்ரிபையும் இஷாவையும் (அடுத்தடுத்துத்) தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)


குறிப்புகள் :

$சிறுநீர் கழித்தபின் “நீர் ஊற்றிக் கழுவிக்கொண்டார்கள்” என்பதை இந்த ஹதீஸில் அறிவிப்பாளர் உஸாமா (ரலி) குறிப்பிடவில்லை.

உளூவைச் சுருக்கமாகச் செய்வதென்பது ஒவ்வோர் உறுப்பையும் ஒரு முறை கழுவுவதாகும். அழகுற உளூச் செய்வதென்பது ஒவ்வோர் உறுப்பையும் மூன்று முறை நன்றாகக் கழுவுவதாகும்.

அத்தியாயம்: 15, பாடம்: 47, ஹதீஸ் எண்: 2256

‏‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏كُرَيْبٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏أُسَامَةَ بْنِ زَيْدٍ ‏ ‏أَنَّهُ سَمِعَهُ يَقُولُ: ‏

دَفَعَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ ‏ ‏عَرَفَةَ ‏ ‏حَتَّى إِذَا كَانَ ‏ ‏بِالشِّعْبِ ‏ ‏نَزَلَ فَبَالَ ثُمَّ تَوَضَّأَ ‏ ‏وَلَمْ يُسْبِغْ ‏ ‏الْوُضُوءَ فَقُلْتُ لَهُ الصَّلَاةَ قَالَ ‏ ‏الصَّلَاةُ أَمَامَكَ فَرَكِبَ فَلَمَّا جَاءَ ‏ ‏الْمُزْدَلِفَةَ ‏ ‏نَزَلَ فَتَوَضَّأَ ‏ ‏فَأَسْبَغَ ‏ ‏الْوُضُوءَ ثُمَّ أُقِيمَتْ الصَّلَاةُ فَصَلَّى الْمَغْرِبَ ثُمَّ أَنَاخَ كُلُّ إِنْسَانٍ بَعِيرَهُ فِي مَنْزِلِهِ ثُمَّ أُقِيمَتْ الْعِشَاءُ فَصَلَّاهَا وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا شَيْئًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (துல்ஹஜ் 9ஆவது நாள்) அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபாவிற்குத்) திரும்பிச் செல்லும்போது, வழியில் ஒரு பள்ளத்தாக்கில் இறங்கி சிறுநீர் கழித்தார்கள். பின்னர் உளூச் செய்தார்கள். அப்போது அவர்கள் வழக்கம்போல் அழகுற உளூச் செய்யவில்லை (சுருக்கமாகவே செய்தார்கள்). நான் அவர்களிடம், “(மஃக்ரிப்) தொழுகையா?” என்று கேட்டேன். அதற்கு, “தொழுகை உமக்கு எதிரே (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) உள்ளது” என்று அவர்கள் கூறியபின், வாகனத்தில் ஏறிப் புறப்பட்டார்கள். முஸ்தலிஃபா வந்ததும் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி உளூச் செய்தார்கள். அப்போது அவர்கள் அழகுற உளூச் செய்தார்கள். தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதும் மஃக்ரிப் தொழுதார்கள். பிறகு ஒவ்வொருவரும் தமது ஒட்டகத்தைத் தத்தமது கூடாரத்தில் படுக்க வைத்தனர். பிறகு இஷாத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதும் இஷாத் தொழுதார்கள். அவ்விரு தொழுகைகளுக்குமிடையே நபியவர்கள் (கூடுதலாக) வேறெதுவும் தொழவில்லை.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி)


குறிப்பு :

+ இரண்டு தொழுகைகளை ஒரே நேரத்தில் அடுத்தடுத்துத் தொழுவதற்கு, ‘ஜம்உ’ என்று சொல்லப்படும். ‘ஜம்உ’ எனும் அரபுச் சொல்லுக்கு, இணைத்தல்/சேர்த்தல் என்று பொருளாகும்.