அத்தியாயம்: 8, பாடம்: 4, ஹதீஸ் எண்: 1480

حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرٌو ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ شِهَابٍ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏

‏أَنَّ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا ‏ ‏جَارِيَتَانِ فِي أَيَّامِ ‏ ‏مِنًى ‏ ‏تُغَنِّيَانِ وَتَضْرِبَانِ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُسَجًّى بِثَوْبِهِ ‏ ‏فَانْتَهَرَهُمَا ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فَكَشَفَ رَسُولُ اللَّهِ عَنْهُ وَقَالَ ‏ ‏دَعْهُمَا يَا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ وَقَالَتْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَسْتُرُنِي بِرِدَائِهِ وَأَنَا أَنْظُرُ إِلَى ‏ ‏الْحَبَشَةِ ‏ ‏وَهُمْ يَلْعَبُونَ وَأَنَا جَارِيَةٌ فَاقْدِرُوا قَدْرَ ‏ ‏الْجَارِيَةِ ‏ ‏الْعَرِبَةِ الْحَدِيثَةِ السِّنِّ

‘மினா’வின் நாட்கள் ஒன்றில் என்னருகில் இரு (அன்சாரிச்) சிறுமியர் துஃப் (எனும் கஞ்சிராக்களை) அடித்துப் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தபோது (என் தந்தை) அபூபக்ரு (ரலி) என்னிடம் வந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது ஆடையால் போர்த்திக் கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ட) அபூபக்ரு (ரலி) அச்சிறுமியர் இருவரையும் அதட்டினார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் மீதிருந்த) துணியை விலக்கி, “அவர்களை விட்டு விடுங்கள், அபூபக்ரே! இவை பண்டிகை நாட்கள்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது மேலாடையால் என்னை மறைத்துக் கொண்டிருக்க, (பள்ளிவாசல் வளாகத்தில் ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் (என் வீட்டிலிருந்தபடி வேடிக்கை) பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் இளம்வயதுப் பெண்ணாக இருந்தேன். விளையாட்டுமீது பேராவல் கொண்ட இளம்வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு: அந்தக் காலத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லமும் மஸ்ஜிதுந் நபவீயும் எதிரெதிரே இருந்துள்ளன.

அத்தியாயம்: 8, பாடம்: 4, ஹதீஸ் எண்: 1479

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

‏دَخَلَ عَلَيَّ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَعِنْدِي ‏ ‏جَارِيَتَانِ ‏ ‏مِنْ جَوَارِي ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏تُغَنِّيَانِ بِمَا ‏ ‏تَقَاوَلَتْ ‏ ‏بِهِ ‏ ‏الْأَنْصَارُ ‏ ‏يَوْمَ ‏ ‏بُعَاثَ ‏ ‏قَالَتْ وَلَيْسَتَا ‏ ‏بِمُغَنِّيَتَيْنِ فَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏أَبِمَزْمُورِ ‏ ‏الشَّيْطَانِ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَذَلِكَ فِي يَوْمِ عِيدٍ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا وَهَذَا عِيدُنَا ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَفِيهِ ‏ ‏جَارِيَتَانِ ‏ ‏تَلْعَبَانِ بِدُفٍّ

‘புஆஸ்’ எனும் (அறியாமைக் காலத்தில் நடந்த ஒரு) போரின்போது அன்சாரிகள் ஒருவரை நோக்கி ஒருவர் பாடிய பாடல்களை, பாடகியரல்லாத இரு அன்சாரிச் சிறுமியர் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது (என் தந்தை) அபூபக்ரு (ரலி) என்னிடம் வந்து, “இறைத்தூதர் இல்லத்தில் ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அபூபக்ரே! (விடுங்கள். மகிழ்ச்சியை வெளிப்படுத்த) ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு: அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில், “இரு சிறுமியர் துஃப் எனும் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்” என்று இடம் பெற்றுள்ளது.