அத்தியாயம்: 15, பாடம்: 51, ஹதீஸ் எண்: 2288

‏و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَبْدِ الرَّحِيمِ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ الْحُصَيْنِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ الْحُصَيْنِ ‏ ‏جَدَّتِهِ ‏ ‏قَالَتْ: ‏

‏حَجَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَجَّةَ الْوَدَاعِ فَرَأَيْتُ ‏ ‏أُسَامَةَ ‏ ‏وَبِلَالًا ‏ ‏وَأَحَدُهُمَا آخِذٌ ‏ ‏بِخِطَامِ ‏ ‏نَاقَةِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالْآخَرُ رَافِعٌ ثَوْبَهُ يَسْتُرُهُ مِنْ الْحَرِّ حَتَّى رَمَى ‏ ‏جَمْرَةَ الْعَقَبَةِ ‏

قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏وَاسْمُ ‏ ‏أَبِي عَبْدِ الرَّحِيمِ خَالِدُ بْنُ أَبِي يَزِيدَ ‏ ‏وَهُوَ خَالُ ‏ ‏مُحَمَّدِ بْنِ سَلَمَةَ ‏ ‏رَوَى عَنْهُ ‏ ‏وَكِيعٌ ‏ ‏وَحَجَّاجٌ الْأَعْوَرُ

விடைபெறும் ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் ஹஜ் செய்தேன். உஸாமா (ரலி), பிலால் (ரலி) ஆகிய இருவரையும் நான் கண்டேன். அவர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களது ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். மற்றவர் வெயில் படாமலிருக்கத் தமது ஆடையை உயர்த்திப் பிடித்து அவர்களை மறைத்துக் கொண்டிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘ஜம்ரத்துல் அகபா’வில் கல் எறியும்வரை (இவ்வாறு அவ்விருவரும் செய்துகொண்டிருந்தனர்).

அறிவிப்பாளர் : உம்முல் ஹுஸைன் (ரலி)


குறிப்பு :

“இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஅப்திர்ரஹீம் (ரஹ்) என்பவரது இயற்பெயர் காலித் பின் அபீயஸீத் என்பதாகும். அவர் முஹம்மது பின் ஸலமா (ரஹ்) அவர்களின் தாய்மாமன் ஆவார். அவரிடமிருந்து வகீஉ பின் அல்ஜர்ராஹ் (ரஹ்), ஹஜ்ஜாஜ் அல்அஃவர் (ரஹ்) ஆகியோர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்” என்று ஸஹீஹ் முஸ்லிம் தொகுப்பாளாரான இமாம் முஸ்லிம் (ரஹ்) கூறுகின்றார்.