அத்தியாயம்: 6, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1326

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ الْمُثَنَّى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْبَرَاءَ ‏ ‏يَقُولُا ‏

‏قَرَأَ رَجُلٌ ‏ ‏الْكَهْفَ ‏ ‏وَفِي الدَّارِ دَابَّةٌ فَجَعَلَتْ تَنْفِرُ فَنَظَرَ فَإِذَا ضَبَابَةٌ أَوْ سَحَابَةٌ قَدْ غَشِيَتْهُ قَالَ فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏اقْرَأْ فُلَانُ فَإِنَّهَا السَّكِينَةُ تَنَزَّلَتْ عِنْدَ الْقُرْآنِ ‏ ‏أَوْ تَنَزَّلَتْ لِلْقُرْآنِ ‏

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏وَأَبُو دَاوُدَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْبَرَاءَ ‏ ‏يَقُولُا ‏ ‏فَذَكَرَا نَحْوَهُ غَيْرَ أَنَّهُمَا قَالَا تَنْقُزُ

ஒருவர் தமது வீட்டில் வாகனப் பிராணி ஒன்று இருக்கும்போது ‘அல்கஹ்ஃப்’ எனும் (18ஆவது) அத்தியாயத்தை ஓதியபோது அந்தப் பிராணி மிரண்டது. அவர் (திரும்பிப்) பார்த்தார். அப்போது மேகத்திரள் ஒன்று வந்து அவரை மூடிக்கொண்டது.

இதை அவர் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது நபி (ஸல்), “இன்னாரே, நீர் தொடர்ந்து ஓதிக்கொண்டேயிரு(ந்திருக்க வேண்டு)ம். அந்த மேகம் குர்ஆனின் வசனங்களுக்காக அல்லது அந்த வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உம்மீது) இறங்கிய அமைதி(யின் அடையாளம்) ஆகும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ (ரலி)


குறிப்பு :

அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்), அபூதாவூது (ரஹ்) ஆகிய இருவரது வழி அறிவிப்பில் “… மிரண்டது” என்றில்லாமல் “குதித்தது” என்றுள்ளது.

அத்தியாயம்: 6, பாடம்: 34, ஹதீஸ் எண்: 1325

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو خَيْثَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏الْبَرَاءِ ‏ ‏قَالَ ‏

‏كَانَ ‏ ‏رَجُلٌ ‏ ‏يَقْرَأُ سُورَةَ ‏ ‏الْكَهْفِ ‏ ‏وَعِنْدَهُ فَرَسٌ مَرْبُوطٌ بِشَطَنَيْنِ فَتَغَشَّتْهُ سَحَابَةٌ فَجَعَلَتْ تَدُورُ وَتَدْنُو وَجَعَلَ فَرَسُهُ يَنْفِرُ مِنْهَا فَلَمَّا أَصْبَحَ أَتَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ ‏ ‏تِلْكَ السَّكِينَةُ تَنَزَّلَتْ لِلْقُرْآنِ

ஒருவர் ‘அல்கஹ்ஃப்’ எனும் (18ஆவது) அத்தியாயத்தை(த் தமது இல்லத்தில்) ஓதிக் கொண்டிருந்தார். அங்கு நீண்ட இரு கயிறுகளால் கட்டப் பட்டிருந்த ஒரு குதிரையை ஒரு மேகத்திரள் சூழ்ந்துகொண்டு வட்டமிட்டபடி நெருங்கத் தொடங்கியது. அதனால் அக்குதிரை மிரண்டது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) “அம்மேகம், குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதியாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ (ரலி)