அத்தியாயம்: 15, பாடம்: 57, ஹதீஸ் எண்: 2306

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ: ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قِيلَ لَهُ فِي الذَّبْحِ وَالْحَلْقِ وَالرَّمْيِ وَالتَّقْدِيمِ وَالتَّأْخِيرِ فَقَالَ ‏ ‏لَا ‏ ‏حَرَجَ

நபி (ஸல்) அவர்களிடம் (‘நஹ்ரு’டைய நாளில்) பலியிடுதல், தலைமுடியை மழித்தல், கல்லெறிதல் ஆகியவற்றை முன் பின்னாகச் செய்ததைப் பற்றிக் கேட்கப்பட்ட போது “குற்றமில்லை (இப்போது செய்யுங்கள்)” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 57, ஹதீஸ் எண்: 2305

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُهْزَاذَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ الْحَسَنِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ أَبِي حَفْصَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عِيسَى بْنِ طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ‏ ‏قَالَ: ‏

‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَتَاهُ رَجُلٌ ‏ ‏يَوْمَ النَّحْرِ ‏ ‏وَهُوَ وَاقِفٌ عِنْدَ ‏ ‏الْجَمْرَةِ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي حَلَقْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ فَقَالَ ‏ ‏ارْمِ وَلَا ‏ ‏حَرَجَ ‏ ‏وَأَتَاهُ آخَرُ فَقَالَ إِنِّي ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ قَالَ ارْمِ وَلَا ‏ ‏حَرَجَ ‏ ‏وَأَتَاهُ آخَرُ فَقَالَ إِنِّي ‏ ‏أَفَضْتُ ‏ ‏إِلَى ‏ ‏الْبَيْتِ ‏ ‏قَبْلَ أَنْ أَرْمِيَ قَالَ ارْمِ وَلَا ‏ ‏حَرَجَ ‏ ‏قَالَ فَمَا رَأَيْتُهُ سُئِلَ يَوْمَئِذٍ عَنْ شَيْءٍ إِلَّا قَالَ افْعَلُوا وَلَا ‏ ‏حَرَجَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘நஹ்ரு’டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் ‘ஜம்ரத்துல் அகபா’விற்கு அருகில் நின்றுகொண்டு இருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் கல்லெறிவதற்கு முன் தலைமுடியை மழித்துவிட்டேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!” என்றார்கள். மற்றொருவர் வந்து, “நான் கல்லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டுவிட்டேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!” என்றார்கள். இன்னொருவர் வந்து, “நான் கல்லெறிவதற்கு முன் கஅபாவுக்குத் திரும்பிச் சென்று (தவாஃபுல் இஃபாளா செய்து)விட்டேன்” என்றார். அதற்கு, “குற்றமில்லை; (இப்போது சென்று) கல்லெறிவீராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விடையளித்தார்கள்.

அன்றைய நாளில் அவர்களிடம் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் அவர்கள், “குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்” என்று விடையளித்ததை நான் கண்டேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 57, ஹதீஸ் எண்: 2304

‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عِيسَى بْنِ طَلْحَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ‏ ‏قَالَ: ‏

‏أَتَى النَّبِيَّ رَجُلٌ فَقَالَ حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ قَالَ ‏ ‏فَاذْبَحْ وَلَا ‏ ‏حَرَجَ ‏ ‏قَالَ ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ قَالَ ارْمِ وَلَا ‏ ‏حَرَجَ ‏

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى نَاقَةٍ ‏ ‏بِمِنًى ‏ ‏فَجَاءَهُ رَجُلٌ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “நான் அறுத்துப் பலியிடுவதற்கு முன் தலைமுடியை மழித்துவிட்டேன்” என்றார். அதற்கு நபி (ஸல்), “குற்றமில்லை; (இப்போது) பலியிடுவீராக!” என்றார்கள். அவர், “நான் கல் லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டு விட்டேன்” என்றார். அதற்கும் “குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!” என்று நபி (ஸல்) விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)


குறிப்பு :

மஅமர் (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மினாவில் ஓர் ஒட்டகத்தின் மீதிருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்தார் …” எனத் தொடங்குகிறது.

அத்தியாயம்: 15, பாடம்: 57, ஹதீஸ் எண்: 2303

‏و حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ شِهَابٍ ‏ ‏يَقُولُ حَدَّثَنِي ‏ ‏عِيسَى بْنُ طَلْحَةَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ: ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَا هُوَ يَخْطُبُ ‏ ‏يَوْمَ النَّحْرِ ‏ ‏فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ مَا كُنْتُ أَحْسِبُ يَا رَسُولَ اللَّهِ أَنَّ كَذَا وَكَذَا قَبْلَ كَذَا وَكَذَا ثُمَّ جَاءَ آخَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كُنْتُ أَحْسِبُ أَنَّ كَذَا قَبْلَ كَذَا وَكَذَا لِهَؤُلَاءِ الثَّلَاثِ قَالَ ‏ ‏افْعَلْ وَلَا ‏ ‏حَرَجَ ‏

و حَدَّثَنَاه ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ يَحْيَى الْأُمَوِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏أَمَّا رِوَايَةُ ‏ ‏ابْنِ بَكْرٍ ‏ ‏فَكَرِوَايَةِ ‏ ‏عِيسَى ‏ ‏إِلَّا قَوْلَهُ لِهَؤُلَاءِ الثَّلَاثِ فَإِنَّهُ لَمْ يَذْكُرْ ذَلِكَ وَأَمَّا ‏ ‏يَحْيَى الْأُمَوِيُّ ‏ ‏فَفِي رِوَايَتِهِ حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ نَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ وَأَشْبَاهُ ذَلِكَ

நபி (ஸல்), ‘நஹ்ரு’டைய (துல் ஹஜ் பத்தாவது) நாளில் உரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது, அவர்களிடம் ஒருவர் (வந்து) நின்று, “நான் இன்னின்ன கிரியைகளுக்கு முன் இன்னின்ன கிரியைகளைச் செய்ய வேண்டும் என அறிந்திருக்கவில்லை” என்றார். பிறகு மற்றொருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் இன்னின்ன கிரியைகளுக்கு முன் இன்ன கிரியையைச் செய்ய வேண்டும் என (தவறாக) நினைத்துக் கொண்டுவிட்டேன்” எனக் கூறி, (கல்லெறிதல், பலிப் பிராணியை அறுத்தல், தலைமுடி களைதல் ஆகிய) இம்மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டார். அவற்றுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்” என்றே விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் பக்ரு (ரஹ்) வழி அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் இடம்பெற்றுள்ள “மூன்று விஷயங்கள்’’ என்பதைத் தவிர மற்ற விவரங்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன.

யஹ்யா அல்உமவீ (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் பலியிடுவதற்கு முன் தலைமுடியை மழித்துவிட்டேன். கல்லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டுவிட்டேன்” என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 15, பாடம்: 57, ஹதீஸ் எண்: 2302

‏و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عِيسَى بْنُ طَلْحَةَ التَّيْمِيُّ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ ‏ ‏يَقُولُ: ‏

‏وَقَفَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏فَطَفِقَ ‏ ‏نَاسٌ يَسْأَلُونَهُ فَيَقُولُ الْقَائِلُ مِنْهُمْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَمْ أَكُنْ أَشْعُرُ أَنَّ الرَّمْيَ قَبْلَ ‏ ‏النَّحْرِ ‏ ‏فَنَحَرْتُ قَبْلَ الرَّمْيِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَارْمِ وَلَا ‏ ‏حَرَجَ ‏ ‏قَالَ ‏ ‏وَطَفِقَ ‏ ‏آخَرُ يَقُولُ إِنِّي لَمْ أَشْعُرْ أَنَّ ‏ ‏النَّحْرَ ‏ ‏قَبْلَ الْحَلْقِ فَحَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ فَيَقُولُ انْحَرْ وَلَا ‏ ‏حَرَجَ ‏ ‏قَالَ فَمَا سَمِعْتُهُ يُسْأَلُ يَوْمَئِذٍ عَنْ أَمْرٍ مِمَّا ‏ ‏يَنْسَى الْمَرْءُ وَيَجْهَلُ مِنْ تَقْدِيمِ بَعْضِ الْأُمُورِ قَبْلَ بَعْضٍ وَأَشْبَاهِهَا إِلَّا قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏افْعَلُوا ذَلِكَ وَلَا ‏ ‏حَرَجَ ‏

حَدَّثَنَا ‏ ‏حَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏إِلَى آخِرِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (விடைபெறும் ஹஜ்ஜின்போது) தமது வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்களிடம் மக்கள் (சில விளக்கங்களைக்) கேட்கலாயினர். அவர்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் அறுத்துப் பலியிடுவதற்கு முன் கல்லெறிய வேண்டும் என அறிந்திருக்கவில்லை. எனவே, கல்லெறிவதற்கு முன்பே பலியிட்டுவிட்டேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை. (இப்போது) கல்லெறிவீராக!” என்றார்கள். மற்றொருவர், “தலைமுடியை மழிப்பதற்கு முன் பலியிட வேண்டும் என்பதை அறியாமல், நான் பலியிடுவதற்கு முன்பாக தலைமுடியை மழித்துவிட்டேன்” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை. (இப்போது) பலியிடுவீராக!” என்றார்கள்.

அன்றைய தினத்தில் மறதியால், அல்லது அறியாமையால் ஒருவர் சில கிரியைகளைவிடச் சிலவற்றை முந்திச் செய்துவிட்டதாகக் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை; (இப்போது) அதைச் செய்யுங்கள்” என்று விடையளிப்பதையே நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 57, ஹதீஸ் எண்: 2301

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عِيسَى بْنِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ ‏ ‏قَالَ: ‏

‏وَقَفَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي حَجَّةِ الْوَدَاعِ ‏ ‏بِمِنًى ‏ ‏لِلنَّاسِ يَسْأَلُونَهُ فَجَاءَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَشْعُرْ فَحَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ فَقَالَ ‏ ‏اذْبَحْ وَلَا ‏ ‏حَرَجَ ‏ ‏ثُمَّ جَاءَهُ رَجُلٌ آخَرُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَمْ أَشْعُرْ فَنَحَرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ فَقَالَ ارْمِ وَلَا ‏ ‏حَرَجَ ‏ ‏قَالَ فَمَا سُئِلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ شَيْءٍ قُدِّمَ وَلَا أُخِّرَ إِلَّا قَالَ افْعَلْ وَلَا ‏ ‏حَرَجَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விடைபெறும் ஹஜ்ஜின்போது மக்களின் கேள்விகளுக்கு விடையளித்தவாறு மினாவில் நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் தெரியாமல் பலியிடுவதற்கு முன்பே தலைமுடியையை மழித்துவிட்டேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை. (இப்போது) பலியிடுவீராக!” என்றார்கள். பின்னர் மற்றொருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! தெரியாமல் நான் கல்லெறிவதற்கு முன்பே அறுத்துப் பலியிட்டுவிட்டேன்” என்றார். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “குற்றமில்லை. (இப்போது) கல்லெறிவீராக!” என்றார்கள். அன்றைய நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முந்திச் செய்யப்பட்டது என்றோ, அல்லது பிந்திச் செய்யப்பட்டது என்றோ கேட்கப்பட்ட (இத்தகைய) கேள்விகள் அனைத்திற்கும் “குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்” என்றே விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)