அத்தியாயம்: 15, பாடம்: 52, ஹதீஸ் எண்: 2289

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏يَقُولُ: ‏

‏رَأَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَمَى ‏ ‏الْجَمْرَةَ ‏ ‏بِمِثْلِ ‏ ‏حَصَى الْخَذْفِ

நபி (ஸல்), சுண்டி விளையாடும் அளவிலான பொடிக் கற்களை (ஜம்ராக்களில்) எறிந்ததை நான் கண்டேன்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 51, ஹதீஸ் எண்: 2288

‏و حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَبْدِ الرَّحِيمِ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ الْحُصَيْنِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ الْحُصَيْنِ ‏ ‏جَدَّتِهِ ‏ ‏قَالَتْ: ‏

‏حَجَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَجَّةَ الْوَدَاعِ فَرَأَيْتُ ‏ ‏أُسَامَةَ ‏ ‏وَبِلَالًا ‏ ‏وَأَحَدُهُمَا آخِذٌ ‏ ‏بِخِطَامِ ‏ ‏نَاقَةِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالْآخَرُ رَافِعٌ ثَوْبَهُ يَسْتُرُهُ مِنْ الْحَرِّ حَتَّى رَمَى ‏ ‏جَمْرَةَ الْعَقَبَةِ ‏

قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏وَاسْمُ ‏ ‏أَبِي عَبْدِ الرَّحِيمِ خَالِدُ بْنُ أَبِي يَزِيدَ ‏ ‏وَهُوَ خَالُ ‏ ‏مُحَمَّدِ بْنِ سَلَمَةَ ‏ ‏رَوَى عَنْهُ ‏ ‏وَكِيعٌ ‏ ‏وَحَجَّاجٌ الْأَعْوَرُ

விடைபெறும் ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் ஹஜ் செய்தேன். உஸாமா (ரலி), பிலால் (ரலி) ஆகிய இருவரையும் நான் கண்டேன். அவர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களது ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். மற்றவர் வெயில் படாமலிருக்கத் தமது ஆடையை உயர்த்திப் பிடித்து அவர்களை மறைத்துக் கொண்டிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘ஜம்ரத்துல் அகபா’வில் கல் எறியும்வரை (இவ்வாறு அவ்விருவரும் செய்துகொண்டிருந்தனர்).

அறிவிப்பாளர் : உம்முல் ஹுஸைன் (ரலி)


குறிப்பு :

“இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஅப்திர்ரஹீம் (ரஹ்) என்பவரது இயற்பெயர் காலித் பின் அபீயஸீத் என்பதாகும். அவர் முஹம்மது பின் ஸலமா (ரஹ்) அவர்களின் தாய்மாமன் ஆவார். அவரிடமிருந்து வகீஉ பின் அல்ஜர்ராஹ் (ரஹ்), ஹஜ்ஜாஜ் அல்அஃவர் (ரஹ்) ஆகியோர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்” என்று ஸஹீஹ் முஸ்லிம் தொகுப்பாளாரான இமாம் முஸ்லிம் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 15, பாடம்: 51, ஹதீஸ் எண்: 2287

‏و حَدَّثَنِي ‏ ‏سَلَمَةُ بْنُ شَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ أَعْيَنَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْقِلٌ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ حُصَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏جَدَّتِهِ ‏ ‏أُمِّ الْحُصَيْنِ ‏ ‏قَالَ سَمِعْتُهَا تَقُولُ: ‏

‏حَجَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَجَّةَ الْوَدَاعِ فَرَأَيْتُهُ حِينَ رَمَى ‏ ‏جَمْرَةَ الْعَقَبَةِ ‏ ‏وَانْصَرَفَ وَهُوَ عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏وَمَعَهُ ‏ ‏بِلَالٌ ‏ ‏وَأُسَامَةُ ‏ ‏أَحَدُهُمَا يَقُودُ بِهِ ‏ ‏رَاحِلَتَهُ ‏ ‏وَالْآخَرُ رَافِعٌ ثَوْبَهُ عَلَى رَأْسِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ الشَّمْسِ قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَوْلًا كَثِيرًا ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ ‏ ‏إِنْ أُمِّرَ عَلَيْكُمْ عَبْدٌ ‏ ‏مُجَدَّعٌ ‏ ‏حَسِبْتُهَا قَالَتْ أَسْوَدُ ‏ ‏يَقُودُكُمْ بِكِتَابِ اللَّهِ تَعَالَى فَاسْمَعُوا لَهُ وَأَطِيعُوا

விடைபெறும் ஹஜ்ஜின்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தேன். அவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்தபடி ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறிந்துவிட்டுத் திரும்பிச் சென்றதை நான் கண்டேன். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களும் இருந்தனர். அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஒட்டகத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். மற்றவர், வெயில் படாமலிருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைக்கு மேல் தமது ஆடையை உயர்த்திப் பிடித்து(நிழலிட்டு)க் கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), நிறைய அறிவுரைகளைக் கூறினார்கள். “அல்லாஹ்வின் வேதத்தின்படி உங்களை வழி நடத்தக்கூடிய, உறுப்புகள் துண்டிக்கப்பட்ட, கருப்பு நிற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக்கப்பட்டாலும் அவரது சொல்லைக் கேளுங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்” என்று அவர்கள் கூறியதையும் நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : உம்முல் ஹுஸைன் பின்த் இஸ்ஹாக் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 51, ஹதீஸ் எண்: 2286

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عِيسَى بْنِ يُونُسَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏جَابِرًا ‏ ‏يَقُولُ: ‏

‏رَأَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَرْمِي عَلَى ‏ ‏رَاحِلَتِهِ ‏ ‏يَوْمَ النَّحْرِ ‏ ‏وَيَقُولُ ‏ ‏لِتَأْخُذُوا ‏ ‏مَنَاسِكَكُمْ ‏ ‏فَإِنِّي لَا أَدْرِي لَعَلِّي لَا أَحُجُّ بَعْدَ حَجَّتِي هَذِهِ

நபி (ஸல்) நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்தவாறு (ஜம்ரத்துல் அகபாவின் மீது) கல் எறிவதை நான் கண்டேன். மேலும் அவர்கள், “நீங்கள் உங்களது ஹஜ்ஜின் கிரியைகளை (என்னிடமிருந்து) கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான், எனது இந்த ஹஜ்ஜிற்குப் பிறகு ஹஜ் (செய்வேனா,) செய்யமாட்டேனா என்பதை அறியமாட்டேன்” என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 50, ஹதீஸ் எண்: 2284

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ: ‏ ‏

أَنَّهُ حَجَّ مَعَ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ فَرَمَى ‏ ‏الْجَمْرَةَ ‏ ‏بِسَبْعِ حَصَيَاتٍ وَجَعَلَ ‏ ‏الْبَيْتَ ‏ ‏عَنْ يَسَارِهِ ‏ ‏وَمِنًى ‏ ‏عَنْ يَمِينِهِ ‏وَقَالَ هَذَا ‏ ‏مَقَامُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ ‏ ‏الْبَقَرَةِ ‏

و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ ‏ ‏فَلَمَّا أَتَى ‏ ‏جَمْرَةَ الْعَقَبَةِ

நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் ஹஜ் செய்தேன். அவர்கள் இறையில்லம் கஅபா தமக்கு இடப் பக்கமாகவும், மினா தமக்கு வலப் பக்கமாகவும் இருக்கும்படி (பத்னுல் வாதி பள்ளத்தாக்கில்) நின்று ஜம்ராவின் மீது ஏழு பொடிக் கற்களை எறிந்தார்கள். மேலும், “அல்பகரா அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ அவர்கள் (கல்லை எறிந்தபடி) நின்றிருந்த இடம் இதுதான்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்)


குறிப்பு :

உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) வழி அறிவிப்பு “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ஜம்ரத்துல் அகபாவிற்குச் சென்றபோது…” என்று தொடங்குகிறது.

அத்தியாயம்: 15, பாடம்: 50, ஹதீஸ் எண்: 2283

‏و حَدَّثَنَا ‏ ‏مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْحَجَّاجَ بْنَ يُوسُفَ ‏ ‏يَقُولُ ‏ ‏وَهُوَ يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ ‏ ‏أَلِّفُوا ‏ ‏الْقُرْآنَ كَمَا ‏ ‏أَلَّفَهُ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏السُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا ‏ ‏الْبَقَرَةُ ‏ ‏وَالسُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا ‏ ‏النِّسَاءُ ‏ ‏وَالسُّورَةُ الَّتِي يُذْكَرُ فِيهَا ‏ ‏آلُ ‏ ‏عِمْرَانَ ‏ ‏قَالَ فَلَقِيتُ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏فَأَخْبَرْتُهُ ‏ ‏بِقَوْلِهِ فَسَبَّهُ ‏ ‏وَقَالَ حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ: ‏

‏أَنَّهُ كَانَ مَعَ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ‏ ‏فَأَتَى ‏ ‏جَمْرَةَ الْعَقَبَةِ ‏ ‏فَاسْتَبْطَنَ ‏ ‏الْوَادِي ‏ ‏فَاسْتَعْرَضَهَا ‏ ‏فَرَمَاهَا مِنْ بَطْنِ الْوَادِي بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ قَالَ فَقُلْتُ يَا ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏إِنَّ النَّاسَ يَرْمُونَهَا مِنْ فَوْقِهَا فَقَالَ هَذَا وَالَّذِي لَا إِلَهَ غَيْرُهُ ‏ ‏مَقَامُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ ‏ ‏الْبَقَرَةِ ‏

و حَدَّثَنِي ‏ ‏يَعْقُوبُ الدَّوْرَقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏قَالَ ‏ ‏سَمِعْتُ ‏ ‏الْحَجَّاجَ ‏ ‏يَقُولُ لَا تَقُولُوا سُورَةُ ‏ ‏الْبَقَرَةِ ‏ ‏وَاقْتَصَّا الْحَدِيثَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ مُسْهِرٍ

ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் (ஒரு முறை) சொற்பொழிவு மேடை மீதிருந்தபடி, “ஜிப்ரீல் (அலை) தொகுத்தளித்த முறைப்படி குர்ஆனைத் தொகு(த்துப் பதிவு செய்யு)ங்கள். பசுமாட்டைப் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயம், மகளிர் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயம், இம்ரானின் சந்ததியர் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயம் என(பெயரிட்டு)ப் பதிவு செய்யுங்கள்” என்றார்.

நான் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களைச் சந்ததித்தபோது ஹஜ்ஜாஜ் கூறியதைத் தெரிவித்தேன். அப்போது இப்ராஹீம் (ரஹ்), ஹஜ்ஜாஜைக் கடிந்துகொண்டார்கள். பின்னர், அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்), என்னிடம் கூறினார்கள்: “நான் (ஹஜ்ஜின் போது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (மினாவில்) ஜம்ரத்துல் அகபாவிற்குச் சென்று அதனை ஒட்டியுள்ள பத்னுல் வாதி பள்ளத்தாக்கில் இறங்கி, ஜம்ராவை நோக்கி நின்று அதன் மீது ஏழு பொடிக் கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீரும் கூறினார்கள். அப்போது அவர்களிடம் நான், ‘அபூஅப்திர் ரஹ்மான்! மக்கள் இப்பள்ளத்தாக்கின் மேற்பரப்பில் நின்றவாறு கல்லை எறிகின்றனரே?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! அல் பகரா அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ அவர் (கல்லை எறிந்தபடி) நின்றிருந்த இடம் இதுதான்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி), இப்னு யஸீத் (ரஹ்) வழியாக ஸுலைமான் பின் மஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்)


குறிப்பு :

இப்னு அபீ ஸாயிதா வழி அறிவிப்பில், “அல்பகரா அத்தியாயம் எனச் சொல்லாதீர்கள்” என்று ஹஜ்ஜாஜ் கூறியதை நான் செவியுற்றேன் என அஃமஷ் (ரஹ்) கூறியதாக அறிவிப்பு ஆரம்பிக்கிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட அறிவிப்பில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

அத்தியாயம்: 15, பாடம்: 50, ஹதீஸ் எண்: 2282

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ ‏ ‏قَالَ: ‏ ‏

رَمَى ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ ‏ ‏جَمْرَةَ الْعَقَبَةِ ‏ ‏مِنْ بَطْنِ الْوَادِي بِسَبْعِ حَصَيَاتٍ يُكَبِّرُ مَعَ كُلِّ حَصَاةٍ قَالَ فَقِيلَ لَهُ إِنَّ أُنَاسًا يَرْمُونَهَا مِنْ فَوْقِهَا ‏فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ ‏ ‏هَذَا وَالَّذِي لَا إِلَهَ غَيْرُهُ ‏ ‏مَقَامُ الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ ‏ ‏الْبَقَرَةِ

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), ‘பத்னுல் வாதி’ பள்ளத்தில் நின்று ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது ஏழு பொடிக் கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறினார்கள். அப்போது அவர்களிடம், “மக்கள் மேற்பரப்பில் நின்றல்லவா கல்லை எறிகின்றனர்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது ஆணையாக! ‘அல்பகரா’ அத்தியாயம் எவருக்கு அருளப் பெற்றதோ (அந்த அல்லாஹ்வின் தூதர்-ஸல்) அவர்கள் (கல்லை எறிந்தபடி) நின்றிருந்த இடம் இதுதான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 45, ஹதீஸ் எண்: 2247

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عِيسَى بْنِ يُونُسَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏ابْنُ عَبَّاسٍ: ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرْدَفَ ‏ ‏الْفَضْلَ ‏ ‏مِنْ ‏ ‏جَمْعٍ ‏ ‏قَالَ فَأَخْبَرَنِي ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏أَنَّ ‏ ‏الْفَضْلَ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى رَمَى ‏ ‏جَمْرَةَ الْعَقَبَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டபோது, தமது வாகனத்தில் தமக்குப் பின்னால் (என் சகோதரர்) ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) அவர்களை ஏற்றிக்கொண்டார்கள். ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (துல்ஹஜ் பத்தாவது நாளில்) ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறியும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்” என என்னிடம் தெரிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)