அத்தியாயம்: 15, பாடம்: 66, ஹதீஸ் எண்: 2349

‏حَدَّثَنِي ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدٌ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏سِنَانِ بْنِ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّ ‏ ‏ذُؤَيْبًا أَبَا قَبِيصَةَ ‏ ‏حَدَّثَهُ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَبْعَثُ مَعَهُ ‏ ‏بِالْبُدْنِ ‏ ‏ثُمَّ يَقُولُ ‏ ‏إِنْ ‏ ‏عَطِبَ ‏ ‏مِنْهَا شَيْءٌ فَخَشِيتَ عَلَيْهِ مَوْتًا فَانْحَرْهَا ثُمَّ اغْمِسْ نَعْلَهَا فِي دَمِهَا ثُمَّ اضْرِبْ بِهِ ‏ ‏صَفْحَتَهَا ‏ ‏وَلَا تَطْعَمْهَا أَنْتَ وَلَا أَحَدٌ مِنْ أَهْلِ رُفْقَتِكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பலி ஒட்டகங்களுடன் என்னை (மக்காவிற்கு) அனுப்பி வைத்தார்கள். அப்போது, “இவற்றில் ஏதேனும் ஒன்று பாதிப்புக்குள்ளாகி இறந்துவிடுமோ என நீர் அஞ்சினால், உடனே அதை அறுத்துவிடுவீராக! பிறகு அதன் (கழுத்தில் கிடக்கும்) செருப்பில் அதன் இரத்தத்தை நனைத்து, அதன் விலாப் புறத்தில் அ(ந்த அடையாளத்)தைப் பதித்துவிடுவீராக! நீயும் உன் பயணக் குழுவினரில் எவரும் அதை உண்ண வேண்டாம்” என்று உத்தரவிட்டதாக துஐப் அபூகபீஸா (ரலி) கூறினார்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 66, ஹதீஸ் எண்: 2348

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي التَّيَّاحِ الضُّبَعِيِّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مُوسَى بْنُ سَلَمَةَ الْهُذَلِيُّ ‏ ‏قَالَ ‏ ‏انْطَلَقْتُ أَنَا ‏ ‏وَسِنَانُ بْنُ سَلَمَةَ ‏ ‏مُعْتَمِرَيْنِ قَالَ وَانْطَلَقَ ‏ ‏سِنَانٌ ‏ ‏مَعَهُ ‏ ‏بِبَدَنَةٍ ‏ ‏يَسُوقُهَا فَأَزْحَفَتْ عَلَيْهِ بِالطَّرِيقِ فَعَيِيَ بِشَأْنِهَا إِنْ هِيَ أُبْدِعَتْ كَيْفَ يَأْتِي بِهَا فَقَالَ لَئِنْ قَدِمْتُ الْبَلَدَ لَأَسْتَحْفِيَنَّ عَنْ ذَلِكَ قَالَ فَأَضْحَيْتُ فَلَمَّا نَزَلْنَا الْبَطْحَاءَ قَالَ انْطَلِقْ إِلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏نَتَحَدَّثْ إِلَيْهِ قَالَ فَذَكَرَ لَهُ شَأْنَ ‏ ‏بَدَنَتِهِ ‏ ‏فَقَالَ عَلَى الْخَبِيرِ سَقَطْتَ: ‏

‏بَعَثَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِسِتَّ عَشْرَةَ ‏ ‏بَدَنَةً ‏ ‏مَعَ رَجُلٍ وَأَمَّرَهُ فِيهَا قَالَ فَمَضَى ثُمَّ رَجَعَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أَصْنَعُ بِمَا أُبْدِعَ عَلَيَّ مِنْهَا قَالَ ‏ ‏انْحَرْهَا ثُمَّ اصْبُغْ نَعْلَيْهَا فِي دَمِهَا ثُمَّ اجْعَلْهُ عَلَى ‏ ‏صَفْحَتِهَا ‏ ‏وَلَا تَأْكُلْ مِنْهَا أَنْتَ وَلَا أَحَدٌ مِنْ أَهْلِ رُفْقَتِكَ ‏

و حَدَّثَنَاه ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي التَّيَّاحِ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَعَثَ بِثَمَانَ عَشْرَةَ ‏ ‏بَدَنَةً ‏ ‏مَعَ رَجُلٍ ثُمَّ ذَكَرَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏عَبْدِ الْوَارِثِ ‏ ‏وَلَمْ يَذْكُرْ أَوَّلَ الْحَدِيثِ

நானும் ஸினான் பின் ஸலமா (ரஹ்) அவர்களும் உம்ராவிற்குச் சென்றோம். ஸினான் தம்முடன் ஒரு பலி ஒட்டகத்தை நடத்திக்கொண்டு வந்தார். அந்த ஒட்டகம் வழியில் களைத்துப்போய் நின்றுவிட்டது. ‘இது நடக்க இயலாமல் நின்றுவிட்டால், இதை எப்படி நான் கொண்டுசெல்வேன்’ என்று தெரியாமல் அவர் தவித்தார். மேலும், அவர் “நான் ஊருக்குச் சென்றதும் இதுதொடர்பாக விரிவாகக் கேட்டறிவேன்” என்று சொல்லிக்கொண்டார். இதற்கிடையில் முற்பகல் நேரம் ஆகிவிட்டது. நாங்கள் ‘அல்பத்ஹா’ எனும் இடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது ஸினான் (ரஹ்), “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் இதைப் பற்றி நாம் பேசுவோம்” என்று கூறினார்கள். அவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (சென்று) தமது பலி ஒட்டகத்தின் நிலை பற்றிக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “விவரம் தெரிந்தவரிடம்தான் வந்துசேர்ந்திருக்கின்றீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதினாறு பலி ஒட்டகங்களுடன் ஒருவரை (மக்காவிற்கு) அனுப்பிவைத்தார்கள். அவற்றைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்தார்கள். அவர் (சிறிது தூரம்) சென்று விட்டுத் திரும்பிவந்து, “அல்லாஹ்வின் தூதரே! பலி ஒட்டகங்களில் ஒன்று களைத்துப் போய் (பயணத்தைத் தொடர முடியாமல்) நின்றுவிட்டால், அதை நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அதை (அந்த இடத்திலேயே) அறுத்துவிடுக!; அதன் (கழுத்தில் தொங்கவிடப்பட்டுள்ள) செருப்புகளில் அதன் இரத்தத்தைத் தோய்த்து அதை அதன் விலாப் பகுதியில் பதித்துவிடுக!. நீயும் உன் பயணக் குழுவினரில் எவரும் அதை உண்ண வேண்டாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக மூஸா பின் ஸலமா அல்ஹுதலீ (ரஹ்)


குறிப்பு :

இஸ்மாயீல் பின் உலையா (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பதினெட்டு பலி ஒட்டகங்களுடன் ஒருவரை அனுப்பிவைத்தார்கள் …” என்று தொடங்குகிறது

அத்தியாயம்: 15, பாடம்: 65, ஹதீஸ் எண்: 2347

‏و حَدَّثَنِي ‏ ‏سَلَمَةُ بْنُ شَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ أَعْيَنَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْقِلٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏قَالَ: ‏

‏سَأَلْتُ ‏ ‏جَابِرًا ‏ ‏عَنْ رُكُوبِ ‏ ‏الْهَدْيِ ‏ ‏فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏ارْكَبْهَا بِالْمَعْرُوفِ حَتَّى تَجِدَ ‏ ‏ظَهْرًا

நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் பலிப் பிராணியில் ஏறிச் செல்வதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு, “நபி (ஸல்) (வேறு) பயண வாகனம் கிடைக்கும்வரை அதில் ஏறிச் செல்ல நியாயமுண்டு என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அபுஸ்ஸுபைர் (ரஹ்) & மஅகில் பின் உபைதில்லாஹ் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 65, ஹதீஸ் எண்: 2346

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏قَالَ: ‏

‏سَمِعْتُ ‏ ‏جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏سُئِلَ عَنْ رُكُوبِ ‏ ‏الْهَدْيِ ‏ ‏فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏ارْكَبْهَا بِالْمَعْرُوفِ إِذَا أُلْجِئْتَ إِلَيْهَا حَتَّى تَجِدَ ‏ ‏ظَهْرًا

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் பலிப் பிராணியில் ஏறிச் செல்வதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அவர்கள், “நீங்கள் அதில் ஏறிச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால், (வேறு) பயண வாகனம் கிடைக்கும்வரை அதில் ஏறிச் செல்ல நியாயமுண்டு”  என்று நபி (ஸல்) கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) வழியாக அபுஸ்ஸுபைர் (ரஹ்) & இப்னு ஜுரைஜ் (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 65, ஹதீஸ் எண்: 2345

‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏بُكَيْرِ بْنِ الْأَخْنَسِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ سَمِعْتُهُ يَقُولُ: ‏

‏مُرَّ عَلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِبَدَنَةٍ ‏ ‏أَوْ هَدِيَّةٍ ‏ ‏فَقَالَ ‏ ‏ارْكَبْهَا قَالَ إِنَّهَا ‏ ‏بَدَنَةٌ ‏ ‏أَوْ هَدِيَّةٌ ‏ ‏فَقَالَ وَإِنْ ‏

و حَدَّثَنَاه ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏بُكَيْرُ بْنُ الْأَخْنَسِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسًا ‏ ‏يَقُولُا ‏ ‏مُرَّ عَلَى النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِبَدَنَةٍ ‏ ‏فَذَكَرَ ‏ ‏مِثْلَهُ

நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பலிப் பிராணி/ஒட்டகம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது (அதை நடத்திச் சென்றுகொண்டிருந்தவரிடம்) நபி (ஸல்), “அதில் ஏறிச் செல்!” என்றார்கள். அவர், “இது பலி ஒட்டகம்” என்றோ “பலிப் பிராணி” என்றோ பதிலுரைத்தார். அதற்கு நபி (ஸல்), “இருக்கட்டும், (அதில் ஏறிச் செல்!)” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)


குறிப்பு :

இப்னு பிஷ்ரு (ரஹ்) வழி அறிவிப்பு, “நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பலி ஒட்டகம் கொண்டுசெல்லப்பட்டது …” என்று ஆரம்பிக்கிறது

அத்தியாயம்: 15, பாடம்: 65, ஹதீஸ் எண்: 2344

‏و حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَسُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حُمَيْدٌ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏ ‏وَأَظُنُّنِي قَدْ سَمِعْتُهُ مِنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ الْبُنَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ: ‏

‏مَرَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِرَجُلٍ يَسُوقُ ‏ ‏بَدَنَةً ‏ ‏فَقَالَ ‏ ‏ارْكَبْهَا فَقَالَ إِنَّهَا ‏ ‏بَدَنَةٌ ‏ ‏قَالَ ارْكَبْهَا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பலி ஒட்டகமொன்றை நடத்திக்கொண்டு சென்றுகொண்டிருந்த ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவரிடம், “அதில் ஏறிச் செல்க!” என்றார்கள். அதற்கு அவர், “இது பலி ஒட்டகமாயிற்றே?” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அதில் ஏறிச் செல்க!” என இரண்டு, அல்லது மூன்று முறை கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 15, பாடம்: 65, ஹதீஸ் எண்: 2343

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ مُنَبِّهٍ ‏ ‏قَالَ هَذَا مَا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا ‏ ‏وَقَالَ: بَيْنَمَا رَجُلٌ يَسُوقُ ‏ ‏بَدَنَةً ‏ ‏مُقَلَّدَةً ‏ ‏قَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَيْلَكَ ارْكَبْهَا فَقَالَ ‏ ‏بَدَنَةٌ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ قَالَ وَيْلَكَ ارْكَبْهَا وَيْلَكَ ارْكَبْهَا

ஒருவர், கழுத்தில் அடையாள மாலை தொங்கவிடப்பட்ட ஒரு பலி ஒட்டகத்தை நடத்திச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனக்கு (என்ன) கேடு! அதில் ஏறிச் செல்!” என்றார்கள். அதற்கு அவர், “(இது) பலி ஒட்டகமாயிற்றே, அல்லாஹ்வின் தூதரே?” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உனக்கு (என்ன) கேடு! அதில் ஏறிச் செல்!; உனக்கு (என்ன) கேடு!. அதில் ஏறிச் செல்!” என்று (மீண்டும் மீண்டும்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

இது, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எமக்கு அறிவித்த ஹதீஸ்களுள் ஒன்றாகும் என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) கூறுகின்றார்.

அத்தியாயம்: 15, பாடம்: 65, ஹதீஸ் எண்: 2342

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ: ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَأَى رَجُلًا يَسُوقُ ‏ ‏بَدَنَةً ‏ ‏فَقَالَ ‏ ‏ارْكَبْهَا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا ‏ ‏بَدَنَةٌ ‏ ‏فَقَالَ ارْكَبْهَا وَيْلَكَ فِي الثَّانِيَةِ أَوْ فِي الثَّالِثَةِ ‏

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحِزَامِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏بَيْنَمَا رَجُلٌ يَسُوقُ ‏ ‏بَدَنَةً ‏ ‏مُقَلَّدَةً

ஒருவர் ஒரு பலி ஒட்டகத்தை நடத்திக் கொண்டு செல்வதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அவரிடம்), “அதில் ஏறிச் செல்!” என்றார்கள். அவர் “அல்லாஹ்வின் தூதரே! இது, பலி ஒட்டகமாயிற்றே!” என்றார். அதற்கு “அதில் ஏறிச்செல்!” என்று (மீண்டும்) கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்), இரண்டாவது அல்லது மூன்றாவது தடவை “உனக்கு (அதில் ஏறிச்செல்ல என்ன) கேடு!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

முகீரா (ரஹ்) வழி அறிவிப்பு, “ஒருவர், கழுத்தில் அடையாள மாலை தொங்கவிடப்பட்ட ஒரு பலி ஒட்டகத்தை நடத்திச் சென்றபோது…” என்று தொடங்குகிறது.