அத்தியாயம்: 15, பாடம்: 58, ஹதீஸ் எண்: 2308

‏حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ يُوسُفَ الْأَزْرَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ ‏ ‏قَالَ: ‏

‏سَأَلْتُ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏قُلْتُ أَخْبِرْنِي عَنْ شَيْءٍ ‏ ‏عَقَلْتَهُ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيْنَ صَلَّى الظُّهْرَ ‏ ‏يَوْمَ التَّرْوِيَةِ ‏ ‏قَالَ ‏ ‏بِمِنًى ‏ ‏قُلْتُ فَأَيْنَ صَلَّى الْعَصْرَ ‏ ‏يَوْمَ النَّفْرِ ‏ ‏قَالَ ‏ ‏بِالْأَبْطَحِ ‏ ‏ثُمَّ قَالَ افْعَلْ مَا يَفْعَلُ أُمَرَاؤُكَ

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்த ஏதேனும் ஒரு செய்தியை என்னிடம் கூறுங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தர்வியாவுடைய (துல் ஹஜ் எட்டாவது) நாளில் எங்கு லுஹ்ருத் தொழுதார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “மினாவில்” என்று பதிலளித்தார்கள். நான், “மினாவிலிருந்து புறப்படும் (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்கு அஸ்ருத் தொழுதார்கள்?” என்று கேட்டேன். அதற்கு, “அல்அப்தஹ் எனுமிடத்தில்” என்று பதிலளித்துவிட்டு, “உன்னுடைய தலைவர்கள் செய்வதைப் போன்று நீயும் செய்துகொள்” என்று அனஸ் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்)