அத்தியாயம்: 15, பாடம்: 15.12, ஹதீஸ் எண்: 2090

و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ بْنُ مُوسَى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏نُبَيْهُ بْنُ وَهْبٍ ‏ ‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ عُبَيْدِ اللَّهِ بْنِ مَعْمَرٍ ‏ ‏رَمِدَتْ عَيْنُهُ فَأَرَادَ أَنْ يَكْحُلَهَا ‏ ‏فَنَهَاهُ ‏ ‏أَبَانُ بْنُ عُثْمَانَ ‏

‏وَأَمَرَهُ أَنْ يُضَمِّدَهَا ‏ ‏بِالصَّبِرِ ‏ ‏وَحَدَّثَ عَنْ ‏ ‏عُثْمَانَ بْنِ عَفَّانَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ فَعَلَ ذَلِكَ

உமர் பின் உபைதில்லாஹ் பின் மஅமர் (ரஹ்) அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டது. அப்போது அவர்கள் கண்ணில் அஞ்சனம் (சுருமா) இட்டுக்கொள்ள விரும்பினார்கள். இதை அறிந்த அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவ்வாறு செய்ய வேண்டாம் எனத் தடை விதித்துவிட்டு, கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டார்கள். மேலும், நபி (ஸல்) (கண்வலி எற்பட்டோருக்கு) அவ்வாறு செய்தார்கள் என உஸ்மான் (ரலி) கூறினார்கள் என்றும் அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) வழியாக நுபைஹ் பின் வஹ்பு (ரஹ்)

அத்தியாயம்: 15, பாடம்: 15.12, ஹதீஸ் எண்: 2089

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ بْنُ مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏نُبَيْهِ بْنِ وَهْبٍ ‏ ‏قَالَ خَرَجْنَا مَعَ ‏ ‏أَبَانَ بْنِ عُثْمَانَ ‏

‏حَتَّى إِذَا كُنَّا بِمَلَلٍ اشْتَكَى ‏ ‏عُمَرُ بْنُ عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَيْنَيْهِ فَلَمَّا كُنَّا ‏ ‏بِالرَّوْحَاءِ ‏ ‏اشْتَدَّ وَجَعُهُ فَأَرْسَلَ إِلَى ‏ ‏أَبَانَ بْنِ عُثْمَانَ ‏ ‏يَسْأَلُهُ فَأَرْسَلَ إِلَيْهِ أَنْ اضْمِدْهُمَا ‏ ‏بِالصَّبِرِ ‏ ‏فَإِنَّ ‏ ‏عُثْمَانَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏حَدَّثَ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الرَّجُلِ ‏ ‏إِذَا اشْتَكَى عَيْنَيْهِ وَهُوَ مُحْرِمٌ ضَمَّدَهُمَا ‏ ‏بِالصَّبِرِ

நாங்கள் (ஒரு பயணத்தில்) அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் ‘அல்மலல்’ எனுமிடத்தை அடைந்தபோது, (எங்களுடன் வந்த) உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்குக் கண்வலி ஏற்பட்டது. பின்னர் நாங்கள் ‘அர்ரவ்ஹா’ எனுமிடத்தில் இருந்தபோது, அவருக்குக் கண்வலி கடுமையாகிவிட்டது. எனவே, உமர் பின் உபைதில்லாஹ், அபான் பின் உஸ்மான் அவர்களிடம் ஆளனுப்பி(தாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி)க் கேட்டார். அதற்கு அபான், கற்றாழைச் சாற்றைப் பிழிந்து அவருடைய கண்களில் கட்டுமாறு கூறியனுப்பினார்கள். மேலும், “(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) இஹ்ராம் பூண்டிருந்த ஒருவருக்குக் கண்வலி ஏற்பட்டபோது, இவ்வாறுதான் அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அறிவித்தார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) வழியாக நுபைஹ் பின் வஹ்பு (ரஹ்)