அத்தியாயம்: 16, பாடம்: 24, ஹதீஸ் எண்: 2614

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمَقْبُرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَيْوَةُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَيَّاشُ بْنُ عَبَّاسٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا النَّضْرِ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏عَامِرِ بْنِ سَعْدٍ ‏ ‏أَنَّ ‏ ‏أُسَامَةَ بْنَ زَيْدٍ: ‏

‏أَخْبَرَ وَالِدَهُ ‏ ‏سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ ‏ ‏أَنَّ رَجُلًا جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ إِنِّي ‏ ‏أَعْزِلُ ‏ ‏عَنْ امْرَأَتِي فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِمَ تَفْعَلُ ذَلِكَ فَقَالَ الرَّجُلُ أُشْفِقُ عَلَى وَلَدِهَا أَوْ عَلَى أَوْلَادِهَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْ كَانَ ذَلِكَ ضَارًّا ضَرَّ ‏ ‏فَارِسَ ‏ ‏وَالرُّومَ ‏


و قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏فِي رِوَايَتِهِ إِنْ كَانَ لِذَلِكَ فَلَا مَا ضَارَ ذَلِكَ ‏ ‏فَارِسَ ‏ ‏وَلَا ‏ ‏الرُّومَ

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் என் மனைவியுடன் (உறவு கொள்ளும்போது) அஸ்லுச் செய்கின்றேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஏன் செய்கின்றாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அவளுடைய (மற்ற) குழந்தை / குழந்தைகள் மீது பரிவுகாட்டு(வதற்காகவே அவ்வாறு செய்)கின்றேன் என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அது (மற்ற) குழந்தை/களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாயிருந்தால், பாரசீகர்க(ளின் குழந்தை)களுக்கும் ரோமர்க(ளின் குழந்தை)களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமே!” என்றார்கள்.

அறிவிப்பாளர் : உஸாமா பின் ஸைத் (ரலி) வழியாக ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி)


குறிப்பு :

ஸுஹைர் பின் ஹர்பு (ரஹ்) வழி அறிவிப்பில், “இக்காரணத்திற்காகவே நீ அவ்வாறு செய்கிறாய் எனில், (இனி) வேண்டாம். (ஏனெனில்) அது பாரசீகர்களுக்கும் ரோமர்களுக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை!” என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

இத்துடன் அத்தியாயம் 16 நிறைவடைந்தது, அல்ஹம்து லில்லாஹ்!

அத்தியாயம்: 16, பாடம்: 24, ஹதீஸ் எண்: 2613

‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏الْمُقْرِئُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏عَنْ ‏ ‏جُدَامَةَ بِنْتِ وَهْبٍ أُخْتِ عُكَّاشَةَ ‏ ‏قَالَتْ: ‏

‏حَضَرْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي أُنَاسٍ وَهُوَ يَقُولُ ‏ ‏لَقَدْ هَمَمْتُ أَنْ أَنْهَى عَنْ ‏ ‏الْغِيلَةِ ‏ ‏فَنَظَرْتُ فِي ‏ ‏الرُّومِ ‏ ‏وَفَارِسَ ‏ ‏فَإِذَا هُمْ يُغِيلُونَ أَوْلَادَهُمْ فَلَا يَضُرُّ أَوْلَادَهُمْ ذَلِكَ شَيْئًا ثُمَّ سَأَلُوهُ عَنْ ‏ ‏الْعَزْلِ ‏ ‏فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَلِكَ الْوَأْدُ الْخَفِيُّ ‏


زَادَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏فِي حَدِيثِهِ عَنْ الْمُقْرِئِ وَهِيَ  ” ‏وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ “  ‏

‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ إِسْحَقَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ الْقُرَشِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏عَنْ ‏ ‏جُدَامَةَ بِنْتِ وَهْبٍ الْأَسَدِيَّةِ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ ‏ ‏فِي ‏ ‏الْعَزْلِ ‏ ‏وَالْغِيلَةِ غَيْرَ أَنَّهُ قَالَ ‏ ‏الْغِيَالِ

நான் சிலருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவைக்குச் சென்றேன். அப்போது அவர்கள், “பாலூட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் மனைவியுடன் உடலுறவு கொள்ள வேண்டாமென நான் தடை விதிக்க எண்ணினேன். பிறகு ரோமர்களும் பாரசீகர்களும் தம் குழந்தைகள், (தாய்ப்) பால் அருந்திக்கொண்டிருக்கும்போதே அவர்கள் தம் மனைவியருடன் உறவு கொண்டும் அதனால் அவர்களுடைய குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் நேராமலிருப்பது குறித்து யோசித்துப் பார்த்தேன். (எனவே, தடை விதிக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன்)” என்று கூறிக்கொண்டிருந்தார்கள். பின்னர் அவர்களிடம் அஸ்லுச் செய்வதைப் பற்றி வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அது மறைமுகமான சிசுக் கொலை யாகும்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : உக்காஷா (ரலி) அவர்களின் சகோதரி ஜுதாமா பின்த்து வஹ்பு (ரலி)


குறிப்பு :

அப்துல்லாஹ் பின் யஸீத் அல்முக்ரீ (ரஹ்) வழியாக உபைதுல்லாஹ் பின் ஸயீத் (ரஹ்) அறிவிப்பதில், “உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை, என்ன பாவத்திற்காகக் கொல்லப்பட்டாள்? என விசாரிக்கப்படும்போது …” எனும் (81:8,9 ஆவது) வசனங்களில் கூறப்பட்டுள்ள சிசுக் கொலைக்கு அஸ்லு ஒத்திருக்கிறது என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 16, பாடம்: 24, ஹதீஸ் எண்: 2612

‏و حَدَّثَنَا ‏ ‏خَلَفُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَالِكُ بْنُ أَنَسٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏عَنْ ‏ ‏جُدَامَةَ بِنْتِ وَهْبٍ الْأَسَدِيَّةِ: ‏

‏أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَقَدْ هَمَمْتُ أَنْ أَنْهَى عَنْ ‏ ‏الْغِيلَةِ ‏ ‏حَتَّى ذَكَرْتُ أَنَّ ‏ ‏الرُّومَ ‏ ‏وَفَارِسَ ‏ ‏يَصْنَعُونَ ذَلِكَ فَلَا يَضُرُّ أَوْلَادَهُمْ ‏


قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏وَأَمَّا ‏ ‏خَلَفٌ ‏ ‏فَقَالَ عَنْ ‏ ‏جُذَامَةَ الْأَسَدِيَّةِ ‏ ‏وَالصَّحِيحُ مَا قَالَهُ ‏ ‏يَحْيَى ‏ ‏بِالدَّالِ

“பாலூட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் மனைவியுடன் உடலுறவு கொள்ள வேண்டாமெனத் தடை விதிக்கலாமா என எண்ணினேன். ரோமர்களும் பாரசீகர்களும் அவ்வாறு செய்தும், அவர்களுடைய குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமலிருப்பதை நினைத்துப் பார்த்தேன். (எனவே, தடை விதிக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜுதாமா பின்த்து வஹ்பு அல் அஸதிய்யா (ரலி)


குறிப்பு :

“இந்த ஹதீஸின் மூல அறிவிப்பாளரான நபித் தோழி ‏جُدَامَةَ (ரலி) அவர்களின் பெயரை இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான கலஃப் (ரஹ்),جُذَامَةَ  என்று பிழையாகக் குறிப்பிடுகின்றார். இதன் வேறோர் அறிவிப்பாளரான யஹ்யா (ரஹ்) அவர்களின் கூற்றுப்படி அவரது பெயர் جُدَامَةَ என்பதே சரியானதாகும்“ என்று இமாம் முஸ்லிம் (ரஹ்) கூறுகின்றார்கள்.