அத்தியாயம்: 18, பாடம்: 2, ஹதீஸ் எண்: 2691

‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ‏ ‏عَنْ ‏ ‏حَمَّادِ بْنِ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ السَّخْتِيَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏

‏أَنَّ ‏ ‏أَبَا الصَّهْبَاءِ ‏ ‏قَالَ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏هَاتِ مِنْ ‏ ‏هَنَاتِكَ ‏ ‏أَلَمْ يَكُنْ الطَّلَاقُ الثَّلَاثُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبِي بَكْرٍ ‏ ‏وَاحِدَةً فَقَالَ قَدْ كَانَ ذَلِكَ فَلَمَّا كَانَ فِي عَهْدِ ‏ ‏عُمَرَ ‏ ‏تَتَايَعَ النَّاسُ فِي الطَّلَاقِ ‏ ‏فَأَجَازَهُ ‏ ‏عَلَيْهِمْ

அபுஸ்ஸஹ்பா (ரஹ்), இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “உங்களிடமுள்ள அரிய தகவல்களைக் கூறுங்கள்; (ஒரே நேரத்தில் சொல்லப்படும்) மூன்று தலாக்குகள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்திலும் அபூபக்ரு (ரலி) காலத்திலும் ஒரு தலாக்காக இருக்கவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), “ஆம்; அவ்வாறுதான் இருந்தது. பின்னர் உமர் (ரலி) காலத்தில் மக்கள் தலாக்கை மலிவாக்கி அவசரக் கோலத்தில் செய்ய ஆரம்பித்தபோது,  உமர் (ரலி) (ஒரே நேரத்தில் சொல்லப்படும்) மூன்று தலாக்குகளை அவர்களுக்கு அனுமதித்தார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி வழியாக தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)

அத்தியாயம்: 18, பாடம்: 2, ஹதீஸ் எண்: 2690

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏رَوْحُ بْنُ عُبَادَةَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏ابْنُ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ: ‏

‏أَنَّ ‏ ‏أَبَا الصَّهْبَاءِ ‏ ‏قَالَ ‏ ‏لِابْنِ عَبَّاسٍ ‏ ‏أَتَعْلَمُ أَنَّمَا ‏ ‏كَانَتْ الثَّلَاثُ تُجْعَلُ وَاحِدَةً عَلَى عَهْدِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبِي بَكْرٍ ‏ ‏وَثَلَاثًا مِنْ إِمَارَةِ ‏ ‏عُمَرَ ‏ ‏فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏نَعَمْ

அபுஸ்ஸஹ்பா (ரஹ்), இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) மற்றும் அபூபக்ரு (ரலி) ஆகியோரது காலத்திலும் உமர் (ரலி) அவர்களது ஆட்சியில் (முதல்) மூன்று வருடங்களிலும் (ஒரே நேரத்தில் சொல்லப்படும்) மூன்று தலாக்குகள், ஒரு தலாக்காகவே கருதப்பட்டுவந்ததை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) “ஆம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி வழியாக தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)

அத்தியாயம்: 18, பாடம்: 2, ஹதீஸ் எண்: 2689

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ رَافِعٍ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ: ‏

‏كَانَ الطَّلَاقُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبِي بَكْرٍ ‏ ‏وَسَنَتَيْنِ مِنْ خِلَافَةِ ‏ ‏عُمَرَ ‏ ‏طَلَاقُ الثَّلَاثِ وَاحِدَةً فَقَالَ ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏إِنَّ النَّاسَ قَدْ اسْتَعْجَلُوا فِي أَمْرٍ قَدْ كَانَتْ لَهُمْ فِيهِ ‏ ‏أَنَاةٌ ‏ ‏فَلَوْ ‏ ‏أَمْضَيْنَاهُ ‏ ‏عَلَيْهِمْ ‏ ‏فَأَمْضَاهُ ‏ ‏عَلَيْهِمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மற்றும் அபூபக்ரு (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்திலும், உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் (முதல்) இரண்டு ஆண்டுகளிலும் (ஒரே நேரத்தில் சொல்லப்படும்) மூன்று தலாக்குகள் என்பது ஒரு தலாக்காகவே (நடைமுறையில்) இருந்தது. பின்னர் உமர் பின் அல்கத்தாப் (ரலி), “தங்களுக்குச் சாதகமாக இருக்கும் ஒரு விஷயத்தில் மக்கள் (இப்போது) அவசரம் காட்டுகிறார்கள். எனவே, (ஒரே நேரத்தில் மக்களால் சொல்லப்படும்) மூன்று தலாக்குகளை (மீட்டுக்கொள்ள இயலாதவாறு) அவர்களுக்குப் பாதகமானதாக நாம் செயல்படுத்துவோம்” என்று கூறி, அவ்வாறே அதைச் செயல்படுத்தினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி


குறிப்பு :

ஒரே நேரத்தில் சொல்லப்படும் மூன்று தலாக்குகள், ஒரு தலாக்காகவே கணிக்கப்படும்.