அத்தியாயம்: 21, பாடம்: 20, ஹதீஸ் எண்: 2891

‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَمَّادٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ ‏ ‏قَالَ ‏ ‏دَخَلْنَا عَلَى ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَعْقِلٍ ‏ ‏فَسَأَلْنَاهُ عَنْ ‏ ‏الْمُزَارَعَةِ ‏ ‏فَقَالَ زَعَمَ ‏ ‏ثَابِتٌ: ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْمُزَارَعَةِ ‏ ‏وَأَمَرَ بِالْمُؤَاجَرَةِ وَقَالَ لَا بَأْسَ بِهَا

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்களிடம் சென்று விளைநிலத்தைக் குத்தகைக்கு விடுவது (முஸாரஆ) பற்றிக் கேட்டோம். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள். பணத்திற்குப் பதிலாக நிலத்தை வாடகைக்கு விடுமாறு (முஆஜரா) உத்தரவிட்டார்கள். மேலும் அதனால் குற்றமில்லை என்றும் கூறினார்கள்” என்று ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) உறுதிப்படுத்தினார்கள் என்பதாக அப்துல்லாஹ் பின் ம அகில் (ரஹ்) பதிலளித்தார்கள்..

அறிவிப்பாளர் : ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் அஸ்ஸாயிப் (ரஹ்)

அத்தியாயம்: 21, பாடம்: 20, ஹதீஸ் எண்: 2890

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ مَعْقِلٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمُزَارَعَةِ ‏ ‏فَقَالَ أَخْبَرَنِي ‏ ‏ثَابِتُ بْنُ الضَّحَّاكِ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْمُزَارَعَةِ


وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ أَبِي شَيْبَةَ ‏ ‏نَهَى عَنْهَا وَقَالَ سَأَلْتُ ‏ ‏ابْنَ مَعْقِلٍ ‏ ‏وَلَمْ يُسَمِّ ‏ ‏عَبْدَ اللَّهِ

நான் அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்களிடம் நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (முஸாரஆ) பற்றிக் கேட்டேன். அதற்கு, “என்னிடம் ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை (முஸாரஆ) தடை செய்தார்கள் எனத் தெரிவித்தார்கள்” என விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் அஸ்ஸாயிப் (ரஹ்)


குறிப்புகள் :

விளைச்சலில் ஒரு பகுதிக்குயை முன் நிபந்தனையாகக் கேட்டு, விளைநிலத்தைக் குத்தகைக்கு விடுவது ‘முஸாரஆ’ எனப்படும்.

தொகை குறிப்பிட்டு, பணத்திற்கு நிலத்தை வாடகைக்கு விடுவது ‘முஆஜரா’ எனப்படும்

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில் “… அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதற்குத் தடை விதித்தார்கள்”  என்று இடம்பெற்றுள்ளது. மேலும், “ … நான் இப்னு மஅகில் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன்” என்று அவரது இயற்பெயரான ‘அப்துல்லாஹ்’ இடம்பெறாமல் அவரின் தந்தையின் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது.