அத்தியாயம்: 21, பாடம்: 21, ஹதீஸ் எண்: 2895

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الرَّقِّيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ: ‏
عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَإِنَّهُ أَنْ يَمْنَحَهَا أَخَاهُ خَيْرٌ

“விளைநிலம் (உபரியாக) வைத்திருப்பவர், (கைமாறு கருதாமல்) தம் சகோதரருக்கு இரவலாக அதை(விளைவிக்க)க் கொடுப்பதே சிறந்ததாகும்” என்று . நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 21, பாடம்: 21, ஹதீஸ் எண்: 2894

‏و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ: ‏
أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَأَنْ يَمْنَحَ أَحَدُكُمْ أَخَاهُ أَرْضَهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهَا كَذَا وَكَذَا لِشَيْءٍ مَعْلُومٍ ‏


قَالَ ‏ ‏وَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏هُوَ ‏ ‏الْحَقْلُ ‏ ‏وَهُوَ بِلِسَانِ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏الْمُحَاقَلَةُ

“உங்களில் ஒருவர் தமது விளைநிலத்தைக் குத்தகைக்கு விட்டு இன்னின்ன(குறிப்பிட்ட பணத்)தைப் பெறுவதைவிட, தம் சகோதரருக்கு இரவலாகத் தருவதே சிறந்ததாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்:

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

“நில இரவல் வழங்குவதே ‘ஹக்லு’ எனப்படும். பேச்சு வழக்கில் அன்ஸாரிகள் இதை ‘முஹாகலா’ என்பர்” என்பதாக இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிடுகின்றார்கள்.

அத்தியாயம்: 21, பாடம்: 21, ஹதீஸ் எண்: 2893

‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏وَابْنُ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ: ‏
أَنَّهُ كَانَ يُخَابِرُ قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏فَقُلْتُ لَهُ يَا ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏لَوْ تَرَكْتَ هَذِهِ ‏ ‏الْمُخَابَرَةَ ‏ ‏فَإِنَّهُمْ يَزْعُمُونَ أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْمُخَابَرَةِ ‏ ‏فَقَالَ أَيْ ‏ ‏عَمْرُو ‏ ‏أَخْبَرَنِي أَعْلَمُهُمْ بِذَلِكَ ‏ ‏يَعْنِي ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمْ يَنْهَ عَنْهَا إِنَّمَا قَالَ ‏ ‏يَمْنَحُ أَحَدُكُمْ أَخَاهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهَا خَرْجًا مَعْلُومًا ‏


حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الثَّقَفِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْفَضْلُ بْنُ مُوسَى ‏ ‏عَنْ ‏ ‏شَرِيكٍ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْوَ حَدِيثِهِمْ

தாவூஸ் பின் கைஸான் (ரஹ்), விளைச்சலில் ஒரு பகுதியைத் தமக்குத் தந்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் நிலத்தைக் குத்தகைக்கு (முகாபரா) விட்டுக்கொண்டிருந்தார்கள். நான் தாவூஸ் (ரஹ்) அவர்களிடம், “அபூஅப்திர் ரஹ்மான்! இந்தக் குத்தகைத் தொழிலை நீங்கள் விட்டுவிட்டால் நன்றாயிருக்கும். ஏனெனில், நபி (ஸல்) குத்தகையைத் தடை செய்தார்கள் என மக்கள் எண்ணுகிறார்கள்” என்று சொன்னேன்.

இதைக் கேட்ட தாவூஸ் (ரஹ்) கூறினார்கள்: அம்ரே! மக்களில் இதைப் பற்றி நன்கறிந்தவர் (இப்னு அப்பாஸ்) என்னிடம், “நபி (ஸல்) அதைத் தடை செய்யவில்லை. உங்களில் ஒருவர் தமது நிலத்தைக் குத்தகைக்கு விட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட தொகையைப் பெறுவதைவிட, தம் சகோதரருக்கு அதை இரவலாகத் தருவதே சிறந்ததாகும் என்றுதான் கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அம்ரிப்னு தீனார் (ரஹ்)

அத்தியாயம்: 21, பாடம்: 21, ஹதீஸ் எண்: 2892

‏‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏أَنَّ ‏ ‏مُجَاهِدًا ‏ ‏قَالَ ‏ ‏لِطَاوُسٍ ‏ ‏انْطَلِقْ بِنَا إِلَى ‏ ‏ابْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ ‏ ‏فَاسْمَعْ مِنْهُ الْحَدِيثَ عَنْ أَبِيهِ: ‏
عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَانْتَهَرَهُ قَالَ إِنِّي وَاللَّهِ لَوْ أَعْلَمُ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْهُ مَا فَعَلْتُهُ وَلَكِنْ حَدَّثَنِي مَنْ هُوَ أَعْلَمُ بِهِ مِنْهُمْ ‏ ‏يَعْنِي ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَأَنْ يَمْنَحَ الرَّجُلُ أَخَاهُ أَرْضَهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهَا خَرْجًا مَعْلُومًا

நான் தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) அவர்களிடம், “என்னை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களின் மகனிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரிடம் அவருடைய தந்தை ராஃபிஉ (ரலி), நபி (ஸல்) அவர்களிடமிருந்து (விளைநிலக் குத்தகை கூடாது என) அறிவித்த ஹதீஸைப் பற்றி நீங்கள் (அல்லது நான்) கேட்கவேண்டும்” என்றேன். இதைக் கேட்ட தாவூஸ் (ரஹ்) என்னைக் கடிந்துகொண்டார்கள்.

மேலும், கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அ(வ்வாறு விளைநிலத்தைக் குத்தகைக்கு விடுவ)தை(ப்பொதுவாக)த் தடை செய்தார்கள் என நான் அறிந்திருந்தால், அதை நான் செய்திருக்க மாட்டேன். இது இவ்வாறிருக்க, இதைப் பற்றி மக்களில் நன்கு அறிந்தவர் (இப்னு அப்பாஸ்) என்னிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘ஒருவர் தமது விளைநிலத்தைக் குத்தகைக்கு விட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட குத்தகைத் தொகையை வாங்கிக்கொள்வதைவிட, தம் சகோதரருக்கு இரவலாக(விளைவித்துக் கொள்ளுமாறு அதை)க் கொடுத்துவிடுவது சிறந்ததாகும்’ என்று கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக முஜாஹித் (ரஹ்)