அத்தியாயம்: 22, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2923

حَدَّثَنَا ‏ ‏أَبُو الْهَيْثَمِ خَالِدُ بْنُ خِدَاشِ بْنِ عَجْلَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ: ‏
أَنَّ ‏ ‏أَبَا قَتَادَةَ ‏ ‏طَلَبَ ‏ ‏غَرِيمًا ‏ ‏لَهُ فَتَوَارَى عَنْهُ ثُمَّ وَجَدَهُ فَقَالَ إِنِّي مُعْسِرٌ فَقَالَ ‏ ‏آللَّهِ قَالَ ‏ ‏آللَّهِ قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ سَرَّهُ أَنْ يُنْجِيَهُ اللَّهُ مِنْ ‏ ‏كُرَبِ ‏ ‏يَوْمِ الْقِيَامَةِ ‏ ‏فَلْيُنَفِّسْ ‏ ‏عَنْ مُعْسِرٍ أَوْ ‏ ‏يَضَعْ ‏ ‏عَنْهُ ‏


و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏جَرِيرُ بْنُ حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ

என் தந்தை அபூகத்தாதா (ரலி), தமக்குக் கடனைத் திருப்பித் தர வேண்டிய ஒருவரைத் தேடினார்கள். அவர் தலைமறைவாகிவிட்டார். பின்னர் அவரைக் கண்டபோது அவர், “நான் (வசதியின்றி) சிரமப்படுபவன்” என்று கூறினார். அதற்கு அபூகத்தாதா (ரலி), “அல்லாஹ்வின் மீது சத்தியமாகவா?” என்று கேட்டார்கள். அவர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாகத்தான்” என்றார். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்ற வேண்டுமென விரும்புகின்றவர், (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிக்கட்டும். அல்லது கடனைத் தள்ளுபடி செய்துவிடட்டும் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று அபூகத்தாதா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா.(ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா (ரஹ்)

அத்தியாயம்: 22, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2922

‏حَدَّثَنَا ‏ ‏مَنْصُورُ بْنُ أَبِي مُزَاحِمٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ زِيَادٍ ‏ ‏قَالَ ‏ ‏مَنْصُورٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏و قَالَ ‏ ‏ابْنُ جَعْفَرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏إِبْرَاهِيمُ وَهُوَ ابْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ كَانَ رَجُلٌ يُدَايِنُ النَّاسَ فَكَانَ يَقُولُ لِفَتَاهُ إِذَا أَتَيْتَ مُعْسِرًا ‏ ‏فَتَجَاوَزْ ‏ ‏عَنْهُ لَعَلَّ اللَّهَ ‏ ‏يَتَجَاوَزُ ‏ ‏عَنَّا فَلَقِيَ اللَّهَ ‏ ‏فَتَجَاوَزَ ‏ ‏عَنْهُ


حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ‏ ‏حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏بِمِثْلِهِ

ஒருவர் (முற்காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்லும்) தம் ஊழியரிடம், “சிரமப்படுபவரிடம் நீர் சென்றால் (அவரைக் கண்டுகொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து)விடு. அல்லாஹ்வும் நம்மை(க் கண்டுகொள்ளாமல்) மன்னித்துவிடக்கூடும்” என்று சொல்லி வந்தார். அவர் (இறந்த பின்) அல்லாஹ்வைச் சந்தித்தபோது (அவருடைய பிழைகளைப் பொறுத்து) அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2921

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِيَحْيَى ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرُونَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَسْعُودٍ ‏ ‏قَالَ: ‏
قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حُوسِبَ رَجُلٌ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ فَلَمْ يُوجَدْ لَهُ مِنْ الْخَيْرِ شَيْءٌ إِلَّا أَنَّهُ كَانَ يُخَالِطُ النَّاسَ وَكَانَ مُوسِرًا فَكَانَ يَأْمُرُ غِلْمَانَهُ أَنْ ‏ ‏يَتَجَاوَزُوا ‏ ‏عَنْ الْمُعْسِرِ قَالَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏ ‏نَحْنُ أَحَقُّ بِذَلِكَ مِنْهُ ‏ ‏تَجَاوَزُوا ‏ ‏عَنْهُ

உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவர் (இறந்த பின்) விசாரணை செய்யப்பட்டார். அவரிடம் (அவரது வினைச் சீட்டில்) எந்த நற்செயலும் காணப்படவில்லை. எனினும், அவர் மக்களுடன் கலந்துறவாடுபவராய் இருந்தார். அவர் வசதியுடையவராக இருந்தார். தம் பணியாட்களிடம், சிரமப்படுவோரின் கடனைத் தள்ளுபடி செய்துவிடுமாறு கூறிவந்தார். அல்லாஹ், “இ(வ்வாறு தள்ளுபடி செய்வ)தற்கு அவரைவிட நமக்கே அதிகத் தகுதியுள்ளது. (எனவே,) அவருடைய தவறுகளைத் தள்ளுபடி செய்துவிடுங்கள்” என்று (வானவர்களிடம்) கூறினான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் அல் அன்ஸாரீ (ரலி)

அத்தியாயம்: 22, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2920

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدِ بْنِ طَارِقٍ ‏ ‏عَنْ ‏ ‏رِبْعِيِّ بْنِ حِرَاشٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏قَالَ: ‏
أُتِيَ اللَّهُ بِعَبْدٍ مِنْ عِبَادِهِ آتَاهُ اللَّهُ مَالًا فَقَالَ لَهُ مَاذَا عَمِلْتَ فِي الدُّنْيَا قَالَ وَلَا يَكْتُمُونَ اللَّهَ حَدِيثًا قَالَ يَا رَبِّ آتَيْتَنِي مَالَكَ فَكُنْتُ أُبَايِعُ النَّاسَ وَكَانَ مِنْ خُلُقِي ‏ ‏الْجَوَازُ ‏ ‏فَكُنْتُ أَتَيَسَّرُ عَلَى الْمُوسِرِ ‏ ‏وَأُنْظِرُ ‏ ‏الْمُعْسِرَ فَقَالَ اللَّهُ ‏ ‏أَنَا أَحَقُّ بِذَا مِنْكَ ‏ ‏تَجَاوَزُوا ‏ ‏عَنْ عَبْدِي ‏


فَقَالَ ‏ ‏عُقْبَةُ بْنُ عَامِرٍ الْجُهَنِيُّ ‏ ‏وَأَبُو مَسْعُودٍ الْأَنْصَارِيُّ ‏ ‏هَكَذَا سَمِعْنَاهُ مِنْ ‏ ‏فِي رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவர் (இறந்த பின்) அல்லாஹ்விடம் கொண்டு வரப்பட்டார். அவரிடம் அல்லாஹ், “உலகத்தில் நீ என்ன நற்செயல் புரிந்தாய்?” என்று கேட்டான். அல்லாஹ்விடம் எவரும் எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது. எனவே அந்த அடியார், “இறைவா! உன் செல்வத்தை எனக்கு நீ வழங்கினாய். அதை வைத்து நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். அப்போது பெருந்தன்மையுடன் நடந்துகொள்வதே எனது இயல்பாக இருந்தது. வசதியுடையவரிடம் மென்மையாக நடந்துகொள்வேன்; சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பேன்” என்று சொன்னார்.

அதற்கு அல்லாஹ், “இ(வ்வாறு பெருந்தன்மையுடன் நடப்ப)தற்கு உன்னைவிட நானே மிகவும் தகுதியுடையவன். (எனவே,) என் அடியானின் தவறுகளைத் தள்ளுபடி செய்துவிடுங்கள்” என்று (வானவர்களிடம்) கூறினான்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா (ரலி)


குறிப்பு :

உக்பா பின் ஆமிர் அல்ஜுஹனீ (ரலி) அவர்களும் அபூமஸ்ஊத் அல்அன்ஸாரி (ரலி) அவர்களும், “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நாங்கள் செவியுற்றோம்” என்று கூறினர்.

அத்தியாயம்: 22, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2919

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏رِبْعِيِّ بْنِ حِرَاشٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ: ‏
عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّ رَجُلًا مَاتَ فَدَخَلَ الْجَنَّةَ فَقِيلَ لَهُ مَا كُنْتَ تَعْمَلُ ‏ ‏قَالَ فَإِمَّا ذَكَرَ وَإِمَّا ‏ ‏ذُكِّرَ فَقَالَ إِنِّي كُنْتُ أُبَايِعُ النَّاسَ فَكُنْتُ ‏ ‏أُنْظِرُ الْمُعْسِرَ ‏ ‏وَأَتَجَوَّزُ ‏ ‏فِي ‏ ‏السِّكَّةِ ‏ ‏أَوْ فِي النَّقْدِ ‏ ‏فَغُفِرَ لَهُ فَقَالَ ‏ ‏أَبُو مَسْعُودٍ ‏ ‏وَأَنَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

ஒருவர் இறந்த பின் சொர்க்கத்திற்குச் சென்றார். அப்போது அவரிடம், “நீ என்ன நற்செயல் புரிந்தாய்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். அப்போது சிரமப்படுவோருக்கு அவகாசம் அளிப்பேன். (கடன்) பண விஷயத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வேன்” என்று கூறினார். அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா (ரலி)


குறிப்பு :

இதை ஹுதைஃபா (ரலி) அறிவித்தபோது அபூமஸ்ஊத் (ரலி) “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நானும் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அத்தியாயம்: 22, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2918

‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ حُجْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏الْمُغِيرَةِ ‏ ‏عَنْ ‏ ‏نُعَيْمِ بْنِ أَبِي هِنْدٍ ‏ ‏عَنْ ‏ ‏رِبْعِيِّ بْنِ حِرَاشٍ ‏ ‏قَالَ: ‏
اجْتَمَعَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏وَأَبُو مَسْعُودٍ ‏ ‏فَقَالَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏رَجُلٌ لَقِيَ رَبَّهُ فَقَالَ مَا عَمِلْتَ قَالَ مَا عَمِلْتُ مِنْ الْخَيْرِ إِلَّا أَنِّي كُنْتُ رَجُلًا ذَا مَالٍ فَكُنْتُ أُطَالِبُ بِهِ النَّاسَ فَكُنْتُ أَقْبَلُ الْمَيْسُورَ ‏ ‏وَأَتَجَاوَزُ ‏ ‏عَنْ الْمَعْسُورِ فَقَالَ ‏ ‏تَجَاوَزُوا ‏ ‏عَنْ عَبْدِي قَالَ ‏ ‏أَبُو مَسْعُودٍ ‏ ‏هَكَذَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ

ஹுதைஃபா (ரலி) அவர்களும் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களும் சந்தித்துக்கொண்ட ஒருபோது ஹுதைஃபா (ரலி) கூறியதாவது: “ஒருவர் (இறந்த பின்) தம் இறைவனைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இறைவன், “நீ (ஏதேனும்) நற்செயல் புரிந்திருக்கிறாயா?” என்று கேட்டான். அவர் “எந்த நல்லறமும் செய்யவில்லை. எனினும், நான் பொருளாதார வசதியுடையவனாக இருந்தேன். எனவே, (மக்களுக்குக் கடனாகக் கொடுத்த) பணத்தை (திருப்பித் தருமாறு) மக்களிடம் கேட்பேன். அப்போது (கடனாளியால்) கொடுக்க இயன்ற தொகையைப் பெற்றுக்கொள்வேன்; இயலாத தொகையைத் தள்ளுபடி செய்துவிடுவேன்” என்று கூறினார்.

அதற்கு இறைவன், “என் (இந்த) அடியானின் தவறுகளைத் தள்ளுபடி செய்துவிடுங்கள்” என்று (வானவர்களிடம்) கூறினான்” என்று நபி (ஸல்) கூறியதை ஹுதைஃபா (ரலி) எடுத்துரைத்தார்கள். அதற்கு அபூமஸ்ஊத் (ரலி), “இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா (ரலி) வழியாக ரிப்ஈ பின் ஹிராஷ் (ரஹ்)

அத்தியாயம்: 22, பாடம்: 6, ஹதீஸ் எண்: 2917

‏حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَنْصُورٌ ‏ ‏عَنْ ‏ ‏رِبْعِيِّ بْنِ حِرَاشٍ ‏ ‏أَنَّ ‏ ‏حُذَيْفَةَ ‏ ‏حَدَّثَهُمْ قَالَ: ‏
قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَلَقَّتْ الْمَلَائِكَةُ رُوحَ رَجُلٍ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ فَقَالُوا أَعَمِلْتَ مِنْ الْخَيْرِ شَيْئًا قَالَ لَا قَالُوا تَذَكَّرْ قَالَ كُنْتُ أُدَايِنُ النَّاسَ فَآمُرُ فِتْيَانِي أَنْ ‏ ‏يُنْظِرُوا ‏ ‏الْمُعْسِرَ ‏ ‏وَيَتَجَوَّزُوا ‏ ‏عَنْ الْمُوسِرِ قَالَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏ ‏تَجَوَّزُوا ‏ ‏عَنْهُ

உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவரின் உயிரை வானவர்கள் வரவேற்று, அவரிடம், “நீர் (உமது வாழ்நாளில்) ஏதேனும் நற்செயல் புரிந்திருக்கின்றீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “இல்லை” என்றார். வானவர்கள் “நன்கு நினைவு படுத்திப்பார்” என்று கூறினர். அவர் (யோசித்துவிட்டு) “நான் மக்களுக்குக் கடன் கொடுத்துவந்தேன். அப்போது (கடனை அடைக்க முடியாமல்) சிரமப்படுவோருக்கு அவகாசம் அளிக்கும்படியும், பொருளாதாரப் பின்புலம் உள்ள கடனாளிகள் (கடனைத் திருப்பிச் செலுத்த தாமதித்தால்) கண்டுகொள்ளாமல் விட்டுவிடும்படியும் என் ஊழியர்களுக்குக் கட்டளை இட்டிருந்தேன்” என்று கூறினார். எனவே, “அவருடைய குற்றங்குறைகளை கண்டுகொள்ளாமல் (மன்னித்து) விடுங்கள்” என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (வானவர்களிடம்) கூறினான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளார் : ஹுதைஃபா (ரலி)