அத்தியாயம்: 3, பாடம்: 29, ஹதீஸ் எண்: 557

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏وَاصِلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَقِيَهُ وَهُوَ جُنُبٌ ‏ ‏فَحَادَ ‏ ‏عَنْهُ فَاغْتَسَلَ ثُمَّ جَاءَ فَقَالَ كُنْتُ جُنُبًا قَالَ ‏ ‏إِنَّ الْمُسْلِمَ لَا يَنْجُسُ ‏

நான் பெருந்துடக்காளியாக இருந்தபோது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே நான் அவர்களிடமிருந்து விலகிச் சென்று குளித்து விட்டு வந்து, “நான் பெருந்துடக்கு உள்ளவனாய் இருந்தேன். (குளித்து விட்டு வரத் தாமதமாகி விட்டது)” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கினால்) அசுத்தமாகி விடமாட்டார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 29, ஹதீஸ் எண்: 556

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ ‏ ‏قَالَ ‏ ‏حُمَيْدٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدٍ الطَّوِيلِ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏بَكْرُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي رَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏أَنَّهُ لَقِيَهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي طَرِيقٍ مِنْ طُرُقِ ‏ ‏الْمَدِينَةِ ‏ ‏وَهُوَ جُنُبٌ ‏ ‏فَانْسَلَّ ‏ ‏فَذَهَبَ فَاغْتَسَلَ فَتَفَقَّدَهُ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَمَّا جَاءَهُ قَالَ أَيْنَ كُنْتَ يَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ يَا رَسُولَ اللَّهِ لَقِيتَنِي وَأَنَا جُنُبٌ فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ حَتَّى أَغْتَسِلَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سُبْحَانَ اللَّهِ ‏ ‏إِنَّ الْمُؤْمِنَ لَا يَنْجُسُ ‏

நான் பெருந்துடக்காளியாக இருந்தபோது மதீனாவின் வழிகளில் ஒன்றில் வைத்து நபி(ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து விட்டார்கள். உடனே நான் அவர்களிடமிருந்து நழுவிச் சென்று குளித்தேன். இதற்கிடையே நபி (ஸல்) அவர்கள் என்னைக் காணாமல் தேடினார்கள். நான் (குளியலை முடித்து விட்டு) அவர்களிடம் வந்தபோது, “(இவ்வளவு நேரம்) எங்கே இருந்தீர்?, அபூஹுரைரா!” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! பெருந்துடக்கு ஏற்பட்டவனாய் நானிருந்த நிலையில் என்னைத் தாங்கள் பார்த்தீர்கள். குளிக்காமல் தங்களிடம் வந்து அமர்வதை நான் வெறுத்தேன்” என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “சுப்ஹானல்லாஹ்! இறைநம்பிக்கையாளர் (பெருந்துடக்கு ஏற்பட்டால்) அசுத்தமாகி விடமாட்டார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).