அத்தியாயம்: 32, பாடம்: 34, ஹதீஸ் எண்: 3340

وَحَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ حَدَّثَهُمْ قَالَ :‏

لَمَّا نَزَلَتْ ‏{‏ إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا * لِيَغْفِرَ لَكَ اللَّهُ‏}‏ إِلَى قَوْلِهِ ‏{‏ فَوْزًا عَظِيمًا‏}‏ مَرْجِعَهُ مِنَ الْحُدَيْبِيَةِ وَهُمْ يُخَالِطُهُمُ الْحُزْنُ وَالْكَآبَةُ وَقَدْ نَحَرَ الْهَدْىَ بِالْحُدَيْبِيَةِ فَقَالَ ‏”‏ لَقَدْ أُنْزِلَتْ عَلَىَّ آيَةٌ هِيَ أَحَبُّ إِلَىَّ مِنَ الدُّنْيَا جَمِيعًا ‏”‏


وَحَدَّثَنَا عَاصِمُ بْنُ النَّضْرِ التَّيْمِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ أَبِي، حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا هَمَّامٌ، ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَيْبَانُ، جَمِيعًا عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، نَحْوَ حَدِيثِ ابْنِ أَبِي عَرُوبَةَ ‏

நபி (ஸல்) ஹுதைபிய்யா எனுமிடத்திலேயே பலிப் பிராணியை அறுத்துவிட்டு, அங்கிருந்து (மதீனா நோக்கி) திரும்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது நபித்தோழர்களைக் கவலையும் சோகமும் தழுவியிருந்தன.

இந்நிலையில்தான் (அவர்களுக்கு), “(நபியே!) உமக்குத் தெளிவானதொரு வெற்றியை நாம் அளித்தோம். உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னித்து, அவன் தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்தி, உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும் அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும் (இந்த வெற்றியை அவன் அளித்தான்)” என்று தொடங்கி, “இது அல்லாஹ்வின் பார்வையில் மகத்தான வெற்றியாகும்” என்பதுவரை (48:1-5) இறைவசனங்கள் அருளப்பெற்றன.

அப்போது நபி (ஸல்), “எனக்கு ஓர் இறைவசனம் அருளப்பெற்றுள்ளது. அது இவ்வுலகிலுள்ள அனைத்தையும்விட எனக்கு மிகவும் உவப்பானதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 34, ஹதீஸ் எண்: 3339

وَحَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ سَمِعْتُ سَهْلَ بْنَ حُنَيْفٍ بِصِفِّينَ يَقُولُ :‏

اتَّهِمُوا رَأْيَكُمْ عَلَى دِينِكُمْ فَلَقَدْ رَأَيْتُنِي يَوْمَ أَبِي جَنْدَلٍ وَلَوْ أَسْتَطِيعُ أَنْ أَرُدَّ أَمْرَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم – مَا فَتَحْنَا مِنْهُ فِي خُصْمٍ إِلاَّ انْفَجَرَ عَلَيْنَا مِنْهُ خُصْمٌ ‏

‘ஸிஃப்பீன்’ போரின்போது, “(நான் இந்தப் போரில் ஈடுபாடு காட்டாதது குறித்து என்னைக் குற்றம் சாட்டாதீர்கள்) உங்கள் மார்க்க விஷயத்தில் நீங்கள் எடுத்துள்ள முடிவையே குறை காணுங்கள்.

அபூஜந்தல் (அபயம் தேடி வந்த ஹுதைபிய்யா) நாளில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்க மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் மறுத்திருப்பேன்.

இன்றைய (உங்கள்) பிரச்சினை சிக்கல்கள் நிறைந்தது. (அவற்றுள்) ஒன்றைச் சீராக்கும்போது, மற்றொன்று தலை தூக்குகின்றது” என்று ஸஹ்லு பின் ஹுனைஃப் (ரலி) கூறியதை நான் செவியேற்றேன்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஹுனைஃப் (ரலி).வழியாக அபூவாயில் ஷகீக் பின் ஸலமா (ரஹ்)

அத்தியாயம்: 32, பாடம்: 34, ஹதீஸ் எண்: 3338

وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، قَالَ سَمِعْتُ سَهْلَ بْنَ حُنَيْفٍ يَقُولُ :‏

بِصِفِّينَ أَيُّهَا النَّاسُ اتَّهِمُوا رَأْيَكُمْ وَاللَّهِ لَقَدْ رَأَيْتُنِي يَوْمَ أَبِي جَنْدَلٍ وَلَوْ أَنِّي أَسْتَطِيعُ أَنْ أَرُدَّ أَمْرَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَرَدَدْتُهُ وَاللَّهِ مَا وَضَعْنَا سُيُوفَنَا عَلَى عَوَاتِقِنَا إِلَى أَمْرٍ قَطُّ إِلاَّ أَسْهَلْنَ بِنَا إِلَى أَمْرٍ نَعْرِفُهُ إِلاَّ أَمْرَكُمْ هَذَا ‏.‏ لَمْ يَذْكُرِ ابْنُ نُمَيْرٍ إِلَى أَمْرٍ قَطُّ ‏.‏


وَحَدَّثَنَاهُ عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ، جَمِيعًا عَنْ جَرِيرٍ، ح وَحَدَّثَنِي أَبُو سَعِيدٍ، الأَشَجُّ حَدَّثَنَا وَكِيعٌ، كِلاَهُمَا عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ وَفِي حَدِيثِهِمَا إِلَى أَمْرٍ يُفْظِعُنَا.‏

‘ஸிஃப்பீன்’ போரின்போது ஸஹ்லு பின் ஹுனைஃப் (ரலி), “மக்களே! (நான் இந்தப் போரில் ஈடுபாடு காட்டாததைக் குறித்து என்னைக் குற்றம் சாட்டாதீர்கள்) உங்களது கருத்தையே குறை காணுங்கள்.

அபூஜந்தல் (அபயம் தேடிவந்த ஹுதைபிய்யா உடன்படிக்கை) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையை மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் நான் மறுத்திருப்பேன். (அன்று) நாங்கள் எங்கள் வாட்களை எங்கள் தோள்களில் (முடக்கி) வைத்துக்கொண்டது, ஒருபோதும் போருக்கு அஞ்சியல்ல. நாங்கள் அறிந்த ஓர் எளிய விஷய(மான சமாதான)த்திற்காகத்தான். ஆனால், உங்களது இந்த (ஸிஃப்பீன் போர்) விவகாரம் அவ்வாறன்று” எனக் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஹுனைஃப் (ரலி) வழியாக அபூவாயில் ஷகீக் பின் ஸலமா (ரஹ்)


குறிப்பு :

முஹம்மது பின் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஒருபோதும் போருக்கு …“ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

ஜரீர் (ரஹ்) வழி அறிவிப்பில்,  “எங்கள் தோள்களில் நாங்கள் வாட்களை (முடக்கி) வைத்துக்கொண்டது, எங்களுக்குத் தொல்லையளிக்கும் போருக்கு அஞ்சி அல்ல” என்று ஸஹ்லு (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 32, பாடம்: 34, ஹதீஸ் எண்: 3337

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، – وَتَقَارَبَا فِي اللَّفْظِ – حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ سِيَاهٍ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، عَنْ أَبِي وَائِلٍ قَالَ :‏

قَامَ سَهْلُ بْنُ حُنَيْفٍ يَوْمَ صِفِّينَ فَقَالَ أَيُّهَا النَّاسُ اتَّهِمُوا أَنْفُسَكُمْ لَقَدْ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الْحُدَيْبِيَةِ وَلَوْ نَرَى قِتَالاً لَقَاتَلْنَا وَذَلِكَ فِي الصُّلْحِ الَّذِي كَانَ بَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبَيْنَ الْمُشْرِكِينَ فَجَاءَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَلَسْنَا عَلَى حَقٍّ وَهُمْ عَلَى بَاطِلٍ قَالَ ‏”‏ بَلَى ‏”‏ ‏.‏ قَالَ أَلَيْسَ قَتْلاَنَا فِي الْجَنَّةِ وَقَتْلاَهُمْ فِي النَّارِ قَالَ ‏”‏ بَلَى ‏”‏ ‏.‏ قَالَ فَفِيمَ نُعْطِي الدَّنِيَّةَ فِي دِينِنَا وَنَرْجِعُ وَلَمَّا يَحْكُمِ اللَّهُ بَيْنَنَا وَبَيْنَهُمْ فَقَالَ ‏”‏ يَا ابْنَ الْخَطَّابِ إِنِّي رَسُولُ اللَّهِ وَلَنْ يُضَيِّعَنِي اللَّهُ أَبَدًا ‏”‏ ‏.‏ قَالَ فَانْطَلَقَ عُمَرُ فَلَمْ يَصْبِرْ مُتَغَيِّظًا فَأَتَى أَبَا بَكْرٍ فَقَالَ يَا أَبَا بَكْرٍ أَلَسْنَا عَلَى حَقٍّ وَهُمْ عَلَى بَاطِلٍ قَالَ بَلَى ‏.‏ قَالَ أَلَيْسَ قَتْلاَنَا فِي الْجَنَّةِ وَقَتْلاَهُمْ فِي النَّارِ قَالَ بَلَى ‏.‏ قَالَ فَعَلاَمَ نُعْطِي الدَّنِيَّةَ فِي دِينِنَا وَنَرْجِعُ وَلَمَّا يَحْكُمِ اللَّهُ بَيْنَنَا وَبَيْنَهُمْ فَقَالَ يَا ابْنَ الْخَطَّابِ إِنَّهُ رَسُولُ اللَّهِ وَلَنْ يُضَيِّعَهُ اللَّهُ أَبَدًا ‏.‏ قَالَ فَنَزَلَ الْقُرْآنُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْفَتْحِ فَأَرْسَلَ إِلَى عُمَرَ فَأَقْرَأَهُ إِيَّاهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَوَفَتْحٌ هُوَ قَالَ ‏”‏ نَعَمْ ‏”‏ ‏.‏ فَطَابَتْ نَفْسُهُ وَرَجَعَ

‘ஸிஃப்பீன்’ போர் நாளில் ஸஹ்லு பின் ஹுனைஃப் (ரலி) எழுந்து நின்று (மக்களிடையே) கூறினார்கள்:

மக்களே! (இந்தப் போரில் ஈடுபாடு காட்டாததைக் குறித்து யாரையும் நீங்கள் குற்றம் சாட்டாதீர்கள்; மாறாக,) உங்களை நீங்களே குறைபட்டுக்கொள்ளுங்கள்.

நாங்கள் ஹுதைபிய்யா நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். போரிடுவது சரியானதென்று நாங்கள் கருதியிருந்தால் போரிட்டு இருப்போம். ஆனால், அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் இடையே சமாதான உடன்பாட்டில் முடிந்தது.

(ஹுதைபிய்யாவில் இணைவைப்பாளர்கள் முஸ்லிம்களுக்குப் பாதகமான நிபந்தனைகளை விதித்தபோதும் நபியவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்) அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நாம் சத்தியத்திலும் அவர்கள் (எதிரிகள்) அசத்தியத்திலும் இருக்கவில்லையா?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “ஆம்!” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி), “போரில் கொல்லப்படும் நம் வீரர்கள் சொர்க்கத்திலும் அவர்களுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “ஆம்“ என்று விடையளித்தார்கள்.

அதற்கு உமர் (ரலி), “அப்படியிருக்க, நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் பணிந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்கும் இடையே தீர்ப்பளிக்காமலிருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்பிச் செல்ல வேண்டும்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கத்தாபின் மகனே! நான் அல்லாஹ்வுடைய தூதனாவேன். என் நம்பிக்கையை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்” என்று பதிலளித்தார்கள்.

உமர் (ரலி) கோபத்தை அடக்க முடியாமல் அபூபக்ரு (ரலி) அவர்களிடம் சென்று, “அபூபக்ரு அவர்களே! நாம் சத்தியத்திலும் அவர்கள் அசத்தியத்திலும் இல்லையா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அபூபக்ரு (ரலி)“ஆம்” என்று விடையளித்தார்கள்.

உமர் (ரலி), “போரில் கொல்லப்படும் நம் வீரர்கள் சொர்க்கத்திலும் அவர்களுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். அபூபக்ரு (ரலி) அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

உமர் (ரலி), “அப்படியிருக்க, நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் பணிந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்கும் இடையே தீர்ப்பளிக்காமலிருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்பிச் செல்ல வேண்டும்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அபூபக்ரு (ரலி), “கத்தாபின் மகனே! நபி (ஸல்), அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்” என்று கூறினார்கள்.

அப்போதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (“உமக்கு நாம் தெளிவான வெற்றியை அளித்துவிட்டோம்” என்று தொடங்கும்) ‘அல்ஃபத்ஹு’ எனும் (48ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உமர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி அந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! இது வெற்றியா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆம்” என்று பதிலளித்தார்கள். பிறகு உமர் (ரலி) மனச் சாந்தியடைந்து திரும்பிச் சென்றார்கள்.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஹுனைஃப் (ரலி) வழியாக அபூவாயில் (ரஹ்)

அத்தியாயம்: 32, பாடம்: 34, ஹதீஸ் எண்: 3336

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ:‏

أَنَّ قُرَيْشًا، صَالَحُوا النَّبِيَّ صلى الله عليه وسلم فِيهِمْ سُهَيْلُ بْنُ عَمْرٍو فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعَلِيٍّ ‏”‏ اكْتُبْ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ‏”‏ ‏.‏ قَالَ سُهَيْلٌ أَمَّا بِاسْمِ اللَّهِ فَمَا نَدْرِي مَا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَلَكِنِ اكْتُبْ مَا نَعْرِفُ بِاسْمِكَ اللَّهُمَّ فَقَالَ ‏”‏ اكْتُبْ مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ‏”‏ ‏.‏ قَالُوا لَوْ عَلِمْنَا أَنَّكَ رَسُولُ اللَّهِ لاَتَّبَعْنَاكَ وَلَكِنِ اكْتُبِ اسْمَكَ وَاسْمَ أَبِيكَ ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ اكْتُبْ مِنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ ‏”‏ ‏.‏ فَاشْتَرَطُوا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ مَنْ جَاءَ مِنْكُمْ لَمْ نَرُدَّهُ عَلَيْكُمْ وَمَنْ جَاءَكُمْ مِنَّا رَدَدْتُمُوهُ عَلَيْنَا فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَنَكْتُبُ هَذَا قَالَ ‏”‏ نَعَمْ إِنَّهُ مَنْ ذَهَبَ مِنَّا إِلَيْهِمْ فَأَبْعَدَهُ اللَّهُ وَمَنْ جَاءَنَا مِنْهُمْ سَيَجْعَلُ اللَّهُ لَهُ فَرَجًا وَمَخْرَجًا ‏”‏ ‏

ஸுஹைல் பின் அம்ருவைத் தங்களுடன் வைத்துக்கொண்டு குறைஷியர்,  நபி (ஸல்) அவர்களுடன் சமாதான உடன்படிக்கை எழுதினர்.  நபி (ஸல்), அலீ (ரலி) அவர்களிடம் “(உடன்படிக்கைப் பத்திரத்தில் முதலில்) பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவிலா அருளாளன், நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்…) என எழுதுவீராக!” என்று கூறினார்கள்.

அப்போது ஸுஹைல், “பிஸ்மில்லாஹ் என்பது சரி (அதை நாங்கள் அறிவோம்); அது என்ன பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்? அதை நாங்கள் அறிந்திருக்கவில்லையே? எனவே, நாங்கள் அறிந்துள்ள ‘பிஸ்மிக்கல்லாஹும்ம’ (அல்லாஹ்வே! உன் பெயரால்) எனும் வாசகத்தை எழுதுங்கள்” என்று கூறினார். (அவ்வாறே எழுதும்படி நபி (ஸல்) உத்தரவிட்டார்கள்) பிறகு நபி (ஸல்), “அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து… என எழுதுவீராக!” என்று (அலீயிடம்) கூறினார்கள்.

அப்போது குறைஷியர், “நீர் இறைவனின் தூதர்தாம் என நாங்கள் அறிந்திருப்போமாயின் நாங்கள் உம்மைப் பின்பற்றி இருப்போம். மாறாக, உமது பெயரை, உம் தந்தையின் பெயர் சேர்த்து எழுதுக” என்று கூறினர். ஆகவே, நபி (ஸல்), (அலீ (ரலி) அவர்களிடம்) “அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதிடமிருந்து என எழுதுவீராக” என்று கூறினார்கள்.

அப்போது குறைஷியர், “உங்களிடமிருந்து யாரேனும் (எங்களிடம்) வந்துவிட்டால் அவரை நாங்கள் திருப்பியனுப்பமாட்டோம். எங்களிடமிருந்து யாரேனும் (உங்களிடம்) வந்துவிட்டால் அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்பிவிட வேண்டும்” என்று நபிகளாரிடம் நிபந்தனையிட்டனர்.

முஸ்லிம்கள், “அல்லாஹ்வின் தூதரே! (பாதகமான நிபந்தனைகள் கொண்ட) இதை நாம் எழுத வேண்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்), “ஆம்” என்று கூறி விட்டு, “யாரேனும் நம்மிடம் வந்துவிட்டு (மதம் மாறிச்) சென்றால் அவரை அல்லாஹ் (தனது அருளிலிருந்து) அப்புறப்படுத்திவிடுவான். அவர்களிடமிருந்து யாரேனும் நம்மிடம் வந்தால் (அவர் திருப்பி அனுப்பப்பட்டாலும்) அவருக்கு மகிழ்வையும் (நெருக்கடியிலிருந்து) விடுபடுவதற்கான வழியையும் நிச்சயமாக அல்லாஹ் ஏற்படுத்துவான்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 34, ஹதீஸ் எண்: 3335

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، وَأَحْمَدُ بْنُ جَنَابٍ الْمِصِّيصِيُّ، جَمِيعًا عَنْ عِيسَى بْنِ يُونُسَ، – وَاللَّفْظُ لإِسْحَاقَ – أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، أَخْبَرَنَا زَكَرِيَّاءُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ قَالَ :‏

لَمَّا أُحْصِرَ النَّبِيُّ صلى الله عليه وسلم عِنْدَ الْبَيْتِ صَالَحَهُ أَهْلُ مَكَّةَ عَلَى أَنْ يَدْخُلَهَا فَيُقِيمَ بِهَا ثَلاَثًا وَلاَ يَدْخُلَهَا إِلاَّ بِجُلُبَّانِ السِّلاَحِ السَّيْفِ وَقِرَابِهِ ‏.‏ وَلاَ يَخْرُجَ بِأَحَدٍ مَعَهُ مِنْ أَهْلِهَا وَلاَ يَمْنَعَ أَحَدًا يَمْكُثُ بِهَا مِمَّنْ كَانَ مَعَهُ ‏.‏ قَالَ لِعَلِيٍّ ‏”‏ اكْتُبِ الشَّرْطَ بَيْنَنَا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ هَذَا مَا قَاضَى عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ‏”‏ ‏.‏ فَقَالَ لَهُ الْمُشْرِكُونَ لَوْ نَعْلَمُ أَنَّكَ رَسُولُ اللَّهِ تَابَعْنَاكَ وَلَكِنِ اكْتُبْ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏.‏ فَأَمَرَ عَلِيًّا أَنْ يَمْحَاهَا فَقَالَ عَلِيٌّ لاَ وَاللَّهِ لاَ أَمْحَاهَا ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ أَرِنِي مَكَانَهَا ‏”‏ ‏.‏ فَأَرَاهُ مَكَانَهَا فَمَحَاهَا وَكَتَبَ ‏”‏ ابْنُ عَبْدِ اللَّهِ ‏”‏ ‏.‏ فَأَقَامَ بِهَا ثَلاَثَةَ أَيَّامٍ فَلَمَّا أَنْ كَانَ يَوْمُ الثَّالِثِ قَالُوا لِعَلِيٍّ هَذَا آخِرُ يَوْمٍ مِنْ شَرْطِ صَاحِبِكَ فَأْمُرْهُ فَلْيَخْرُجْ ‏.‏ فَأَخْبَرَهُ بِذَلِكَ فَقَالَ ‏”‏ نَعَمْ ‏”‏ ‏.‏ فَخَرَجَ ‏.‏ وَقَالَ ابْنُ جَنَابٍ فِي رِوَايَتِهِ مَكَانَ تَابَعْنَاكَ بَايَعْنَاكَ

நபி (ஸல்) இறையில்லம் கஅபாவுக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்பட்டபோது, ‘முஸ்லிம்கள் (அடுத்த ஆண்டு) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாள்கள் தங்கலாம்; நகருக்குள் உறையிலிட்ட வாளுடன்தான் நுழைய வேண்டும்; மக்காவிலிருந்து திரும்பிச் செல்லும்போது மக்காவாசிகளில் யாரையும் தம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது. அவர்களுடன் வந்திருப்பவர்களில் மக்காவிலேயே தங்கிக்கொள்ள விரும்பும் யாரையும் தடுக்கக் கூடாது’ ஆகிய நிபந்தனைகளின் பேரில் மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டனர்.

நபி (ஸல்), அலீ (ரலி) அவர்களிடம், “நமக்கிடையிலான சமாதான உடன்படிக்கையின் நிபந்தனைகளைப் பின்வருமாறு எழுதுவீராக:

“அளவிலா அருளாளன், நிகரிலா அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்…

இது, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது எழுதிக்கொண்ட உடன்படிக்கைப் பத்திரம்..” என்று கூறினார்கள். உடனே இணைவைப்பாளர்கள், “நீர் அல்லாஹ்வின் தூதர்தாம் என நாங்கள் அறிந்திருப்போமாயின், நாங்கள் உம்மைப் பின்பற்றி இருப்போமே! மாறாக, அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று எழுதுங்கள்” என்று கூறினார்கள்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அலீ (ரலி) அவர்களிடம் அ(ந்த வாசகத்)தை அழித்துவிடுமாறு கூறினார்கள். அதற்கு அலீ (ரலி), “மாட்டேன், அல்லாஹ்வின் மீதாணையாக! அதை நான் அழிக்கமாட்டேன்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அந்த இடத்தை எனக்குக் காட்டுவீராக!” என்று கூறினார்கள். அலீ (ரலி) அந்த (வாசகம் இருந்த) இடத்தைக் காட்டினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதை (தமது கரத்தால்) அழித்துவிட்டார்கள். மேலும், ‘அப்துல்லாஹ்வின் மகன்’ என்று எழுதச் செய்தார்கள்.

(அடுத்த ஆண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்காவில் மூன்று நாள்கள் தங்கியிருந்தார்கள். மூன்றாவது நாளானபோது மக்காவாசிகள் அலீ (ரலி) அவர்களிடம், “உம்முடைய தோழர் நிபந்தனையில் குறிப்பிட்டிருந்த இறுதிநாள் இதுதான். எனவே, அவரை இந்நகரைவிட்டு வெளியேறச் சொல்லுங்கள்” என்று கூறினர். அலீ (ரலி) இதை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது “ஆம்“ என்று கூறி விட்டு நபி (ஸல்) புறப்பட்டுவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


குறிப்பு :

அஹ்மது பின் ஜனாப் அல் மிஸ்ஸீஸீ (ரஹ்) வழி அறிவிப்பில், (“உம்மை நாங்கள் பின்பற்றி இருப்போமே!’ என்பதற்குப் பகரமாக) “நாங்கள் (இஸ்லாத்தை ஏற்பதாக) உம்மிடம் உறுதிமொழி அளித்திருப்போமே!“ என்று (மக்காவாசிகள் கூறினார்கள் என) இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 32, பாடம்: 34, ஹதீஸ் எண்: 3334

حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ يَقُولُ :‏

كَتَبَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ الصُّلْحَ بَيْنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَبَيْنَ الْمُشْرِكِينَ يَوْمَ الْحُدَيْبِيَةِ فَكَتَبَ ‏”‏ هَذَا مَا كَاتَبَ عَلَيْهِ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ‏”‏ ‏.‏ فَقَالُوا لاَ تَكْتُبْ رَسُولُ اللَّهِ فَلَوْ نَعْلَمُ أَنَّكَ رَسُولُ اللَّهِ لَمْ نُقَاتِلْكَ ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعَلِيٍّ ‏”‏ امْحُهُ ‏”‏ ‏.‏ فَقَالَ مَا أَنَا بِالَّذِي أَمْحَاهُ ‏.‏ فَمَحَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ قَالَ وَكَانَ فِيمَا اشْتَرَطُوا أَنْ يَدْخُلُوا مَكَّةَ فَيُقِيمُوا بِهَا ثَلاَثًا وَلاَ يَدْخُلُهَا بِسِلاَحٍ إِلاَّ جُلُبَّانَ السِّلاَحِ ‏.‏ قُلْتُ لأَبِي إِسْحَاقَ وَمَا جُلُبَّانُ السِّلاَحِ قَالَ الْقِرَابُ وَمَا فِيهِ ‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ، يَقُولُ لَمَّا صَالَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَهْلَ الْحُدَيْبِيَةِ كَتَبَ عَلِيٌّ كِتَابًا بَيْنَهُمْ قَالَ فَكَتَبَ ‏”‏ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ ‏”‏ ثُمَّ ذَكَرَ بِنَحْوِ حَدِيثِ مُعَاذٍ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ فِي الْحَدِيثِ ‏”‏ هَذَا مَا كَاتَبَ عَلَيْهِ ‏”‏

நபி (ஸல்) அவர்களுக்கும் (குறைஷி) இணைவைப்பாளர்களுக்கும் இடையே ஹுதைபிய்யா நாளில் நடைபெற்ற சமாதான உடன்படிக்கைப் பத்திரத்தை அலீ (ரலி) எழுதும்போது, “இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது எழுதிக்கொண்டது …” என எழுத, இணைவைப்பாளர்கள், “அல்லாஹ்வின் தூதர் முஹம்மது என எழுதாதீர்கள்” (என்று கூறிவிட்டு நபியவர்களை நோக்கி), “நீர் அல்லாஹ்வின் தூதர் என நாங்கள் அறிந்திருந்தால் உம்முடன் போரிட்டிருக்கவே மாட்டோமே” என்று கூறினர்.

ஆகவே, நபி (ஸல்) (அலீ (ரலி) அவர்களிடம்), “அ(ந்த வாசகத்)தை அழித்துவிடுங்கள்” என்று கூறினார்கள். அலீ (ரலி), “நான் அதை (ஒரு போதும்) அழிக்கமாட்டேன்” என்று கூறிவிட்டார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களே தமது கரத்தால் அதை அழித்தார்கள்.

“முஸ்லிம்கள் (அடுத்த ஆண்டு) மக்கா நகருக்குள் நுழைந்து மூன்று நாள்கள் மட்டும் தங்கியிருக்கலாம். நகருக்குள் எந்த ஆயுதத்தையும் உறையிலிட்டுத்தான் எடுத்துவர வேண்டும்” என இணைவைப்பாளர்கள் நிபந்தனை விதித்திருந்தனர்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)


குறிப்புகள் :

“நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்களிடம் ‘ஜுலுப் பானுஸ் ஸிலாஹ் என்றால் என்ன?‘ என்று கேட்டேன். அதற்கு அபூஇஸ்ஹாக் (ரஹ்), ‘உறையும் அதிலுள்ள ஆயுதமும்‘  என்று பதிலளித்தார்கள்” என்பதாக இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஷுஅபா (ரஹ்) கூறுகின்றார்.

முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹுதைபிய்யாக்காரர்கள் (எனும் மக்கா குறைஷியருடன்)  ஹுதைபிய்யா எனுமிடத்தில் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டபோது, அலீ (ரலி) அவர்களுக்கிடையிலான உடன்படிக்கைப் பத்திரத்தை எழுதினார்கள். அப்போது, ‘அல்லாஹ்வின் தூதர் முஹம்மது என்று அவர்கள் எழுத…’ என ஆரம்பமாகிறது.