அத்தியாயம்: 32, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3282

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ أَنَّ ابْنَ شِهَابٍ، أَخْبَرَهُ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ الصَّعْبِ بْنِ جَثَّامَةَ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قِيلَ لَهُ لَوْ أَنَّ خَيْلاً أَغَارَتْ مِنَ اللَّيْلِ فَأَصَابَتْ مِنْ أَبْنَاءِ الْمُشْرِكِينَ قَالَ ‏ “‏ هُمْ مِنْ آبَائِهِمْ ‏”‏

நபி (ஸல்) அவர்களிடம், “குதிரைப் படையினர் இரவு நேரத்தில் திடீர்த் தாக்குதல் நடத்தும் போது (எதிரிகளான) இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுவிடுகிறார்களே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அக்குழந்தைகளும் அவர்களின் தந்தையரைச் சேர்ந்தவர்களே” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3281

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ :‏

عَنِ الصَّعْبِ بْنِ جَثَّامَةَ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نُصِيبُ فِي الْبَيَاتِ مِنْ ذَرَارِيِّ الْمُشْرِكِينَ قَالَ ‏ “‏ هُمْ مِنْهُمْ ‏”‏

“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (எதிரிகளான) இணைவைப்பாளர்களின் பெண்களையும் குழந்தைகளையும் இரவு நேரத்தில் தாக்க வேண்டிய நிலை (சிலபோது) ஏற்பட்டுவிடுகிறதே?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அவர்களும் எதிரிகளைச் சேர்ந்தவர்கள்தாம்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3280

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَعَمْرٌو النَّاقِدُ، جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، قَالَ يَحْيَى أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ :‏

عَنِ الصَّعْبِ بْنِ جَثَّامَةَ قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الذَّرَارِيِّ مِنَ الْمُشْرِكِينَ يُبَيَّتُونَ فَيُصِيبُونَ مِنْ نِسَائِهِمْ وَذَرَارِيِّهِمْ ‏.‏ فَقَالَ ‏ “‏ هُمْ مِنْهُمْ ‏”‏

நபி (ஸல்) அவர்களிடம் “இணைவைப்போ(ரான எதிரி நாட்டின)ரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்கள்மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) “அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி)