அத்தியாயம்: 36, பாடம்: 25, ஹதீஸ் எண்: 3805

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ جَبَلَةَ بْنِ سُحَيْمٍ قَالَ :‏

سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَقْرِنَ الرَّجُلُ بَيْنَ التَّمْرَتَيْنِ حَتَّى يَسْتَأْذِنَ أَصْحَابَهُ

ஒருவர், தம் சகாக்களிடம் அனுமதி பெறாத வரைக்கும் (பலர் கூடியுள்ள ஓர் அவையில்)  இரு பேரீச்சம் பழங்களைச் சேர்த்து உண்ணுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக ஜபலா பின் ஸுஹைம் (ரஹ்)

அத்தியாயம்: 36, பாடம்: 25, ஹதீஸ் எண்: 3804

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ جَبَلَةَ بْنَ سُحَيْمٍ قَالَ :‏

كَانَ ابْنُ الزُّبَيْرِ يَرْزُقُنَا التَّمْرَ – قَالَ – وَقَدْ كَانَ أَصَابَ النَّاسَ يَوْمَئِذٍ جُهْدٌ وَكُنَّا نَأْكُلُ فَيَمُرُّ عَلَيْنَا ابْنُ عُمَرَ وَنَحْنُ نَأْكُلُ فَيَقُولُ لاَ تُقَارِنُوا فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الإِقْرَانِ إِلاَّ أَنْ يَسْتَأْذِنَ الرَّجُلُ أَخَاهُ ‏.‏ قَالَ شُعْبَةُ لاَ أُرَى هَذِهِ الْكَلِمَةَ إِلاَّ مِنْ كَلِمَةِ ابْنِ عُمَرَ ‏-‏ يَعْنِي الاِسْتِئْذَانَ


وَحَدَّثَنَاهُ عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ كِلاَهُمَا عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ وَلَيْسَ فِي حَدِيثِهِمَا قَوْلُ شُعْبَةَ وَلاَ قَوْلُهُ وَقَدْ كَانَ أَصَابَ النَّاسَ يَوْمَئِذٍ جَهْدٌ

மக்களுக்கு (ஹிஜாஸ் பகுதியில்) பஞ்சம் ஏற்பட்டிருந்த போது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) எங்களுக்குப் பேரீச்சம் பழங்களை வழங்கிவந்தார்கள். அவற்றை நாங்கள் உண்ணும்போது, அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) எங்களைக் கடந்து செல்லும்போது, “பேரீச்சம் பழங்களை இரண்டிரண்டாக எடுக்காதீர்கள். ஏனெனில், ஒரே தடவையில் இரண்டு பழங்களை எடுத்து உண்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்துள்ளார்கள்; ஒருவர், தம்(மை அடுத்துள்ள) சகோதரரிடம் (அவ்வாறு எடுக்க) அனுமதி பெற்றிருந்தால் தவிர” என்று சொல்வார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஜபலா பின் ஸுஹைம் (ரஹ்)


குறிப்பு :

இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஷுஅபா (ரஹ்), “அனுமதி பெறுதல் தொடர்பான இக்கூற்று, இப்னு உமர் (ரலி) அவர்களின் சொந்தக் கருத்து என்று நான் கருதுகிறேன்” என்று கூறினார்கள்.

முஆத் (ரஹ்) வழி அறிவிப்பில், ஷுஅபா (ரஹ்) அவர்களின் கருத்தோ, “அப்போது மக்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டிருந்தது” எனும் விளக்கமோ இடம்பெறவில்லை.