அத்தியாயம்: 4, பாடம்: 14, ஹதீஸ் எண்: 607

حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏الْمُخْتَارُ بْنُ فُلْفُلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمُخْتَارِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ ‏
‏بَيْنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَاتَ يَوْمٍ بَيْنَ أَظْهُرِنَا إِذْ أَغْفَى إِغْفَاءَةً ثُمَّ رَفَعَ رَأْسَهُ مُتَبَسِّمًا فَقُلْنَا مَا أَضْحَكَكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏ ‏أُنْزِلَتْ عَلَيَّ ‏ ‏آنِفًا ‏ ‏سُورَةٌ فَقَرَأَ ‏ ‏بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ‏ ‏إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ ‏ ‏شَانِئَكَ ‏ ‏هُوَ ‏ ‏الْأَبْتَرُ ‏

‏ثُمَّ قَالَ أَتَدْرُونَ مَا الْكَوْثَرُ فَقُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ فَإِنَّهُ نَهْرٌ وَعَدَنِيهِ رَبِّي عَزَّ وَجَلَّ عَلَيْهِ خَيْرٌ كَثِيرٌ هُوَ حَوْضٌ تَرِدُ عَلَيْهِ أُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ آنِيَتُهُ عَدَدُ النُّجُومِ ‏ ‏فَيُخْتَلَجُ ‏ ‏الْعَبْدُ مِنْهُمْ فَأَقُولُ رَبِّ إِنَّهُ مِنْ أُمَّتِي فَيَقُولُ مَا تَدْرِي مَا أَحْدَثَتْ بَعْدَكَ ‏
‏زَادَ ‏ ‏ابْنُ حُجْرٍ ‏ ‏فِي حَدِيثِهِ بَيْنَ أَظْهُرِنَا فِي الْمَسْجِدِ وَقَالَ مَا أَحْدَثَ بَعْدَكَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ فُضَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏مُخْتَارِ بْنِ فُلْفُلٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏يَقُولُا ‏ ‏أَغْفَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِغْفَاءَةً بِنَحْوِ حَدِيثِ ‏ ‏ابْنِ مُسْهِرٍ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ نَهْرٌ وَعَدَنِيهِ رَبِّي عَزَّ وَجَلَّ فِي الْجَنَّةِ عَلَيْهِ حَوْضٌ وَلَمْ يَذْكُرْ آنِيَتُهُ عَدَدُ النُّجُومِ ‏

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே இருந்தபோது (திடீரென) உறங்கிவிட்டார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு புன்னகைத்தவர்களாகத் தமது தலையை உயர்த்தினார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் சிரிக்கக் காரணம் என்ன?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “சற்றுமுன் ஓர் அத்தியாயம் எனக்காக அருளப்பெற்றது” என்று கூறிவிட்டு (குர்ஆனின் 108ஆவது அத்தியாயமான அல்கவ்ஸர் எனும்) அந்த அத்தியாயத்தை(ப் பின்வருமாறு) ஓதிக் காட்டினார்கள்:

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!).

இன்னா அஃத்தைனாகல் கவ்ஸர் (நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸரை வழங்கியுள்ளோம்!).

ஃபஸல்லி லிரப்பிக்க வன்ஹர் (எனவே, தொழுகையையும் பலியிடுவதையும் உம்முடைய இறைவனுக்காகவே நிறைவேற்றுவீராக!).

இன்ன ஷானிஅக்க ஹுவல் அப்தர் (உம் பகைவன்தான் சந்ததியற்றவன்).

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்கவ்ஸர் என்றால் என்னவென்று நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்” என்று பதிலளித்தோம். அவர்கள், “அது ஒரு (சொர்க்க) நதி. என்னுடைய இறைவன் (மறுமை நாளில்) அதை(த் தருவதாக) எனக்கு வாக்களித்துள்ளான்; அதில் அளவிடமுடியாத நன்மைகள் உள்ளன. அது ஒரு நீர்த் தடாகம்; மறுமை நாளில் என்னுடைய சமுதாயத்தார் அதனிடம் வருவர். அதன் குவளைகளின் எண்ணிக்கை, நட்சத்திரங்களை ஒத்திருக்கும். அவர்களில் ஓர் அடியார் (அதிலிருந்து அருந்தவிடாமல்) தடுக்கப்படுவார். நான், இறைவா! அவர் என் சமுதாயத்தாரில் ஒருவர். (அவர் ஏன் தடுக்கப்படுகிறார்?) என்று கேட்பேன். அதற்கு இறைவன், உங்கள் சமுதாயம் உங்களுக்குப் பிறகு உருவாக்கிய (பொல்லாப்) புதுமைகளைப் பற்றி நீங்கள் அறியமாட்டீர்கள் என்று கூறுவான்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

குறிப்பு :

இப்னு ஹுஜ்ரு (ரஹ்) வழி அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே இருந்தார்கள்” என்றில்லாமல் “எங்களிடையே பள்ளிவாசலில் இருந்தார்கள்” என்று இடம் குறிப்பிடப் படுகிறது. “உங்கள் சமுதாயம்” என்ற பன்மைக்குப் பதிலாக “இவர் உங்களுக்குப் பிறகு உருவாக்கிய (பொல்லாப்) புதுமைகளை …” என்று ஒருமைக் குறிப்பு இடம்பெற்றுள்ளது.

இபுனு ஃபுளைல் (ரஹ்) வழி அறிவிப்பில், “அது ஒரு நதி. என்னுடைய இறைவன் சொர்க்கத்தில் அதை(த் தருவதாக) எனக்கு வாக்களித்துள்ளான் …” என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதெல்லாம் இடம்பெற்ற போதிலும் “அதன் குவளைகளின் எண்ணிக்கை, நட்சத்திரங்களை ஒத்திருக்கும்” எனும் உவமைக் குறிப்பு இடம்பெறவில்லை.