அத்தியாயம்: 40, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4168

 وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ قَالَ :‏

هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ يَقُلْ أَحَدُكُمُ اسْقِ رَبَّكَ أَطْعِمْ رَبَّكَ وَضِّئْ رَبَّكَ ‏.‏ وَلاَ يَقُلْ أَحَدُكُمْ رَبِّي ‏.‏ وَلْيَقُلْ سَيِّدِي مَوْلاَىَ وَلاَ يَقُلْ أَحَدُكُمْ عَبْدِي أَمَتِي ‏.‏ وَلْيَقُلْ فَتَاىَ فَتَاتِي غُلاَمِي ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: உங்களில் யாரும் (ஓர் அடிமையிடம்) “உன் ரப்புக்கு (அதிபதிக்கு) பருக நீர் கொடு, உன் ரப்புக்கு உணவு கொடு, உன் ரப்புக்கு உளூச் செய்ய உதவு” என்றெல்லாம் கூற வேண்டாம். உங்களில் யாரும் (தம் உரிமையாளரை) ‘ரப்பீ’ என்று கூற வேண்டாம். மாறாக, ‘ஸய்யிதீ’, ‘மவ்லாய’ என்று கூறட்டும். உங்களில் யாரும் (என் அடிமை, என் அடிமைப் பெண் என்று கூற) அப்தீ, அமத்தீ என்று கூற வேண் டாம். மாறாக, ஃபத்தாய (என் பணியாள்) ஃபத்தாத்தீ (என் பணிப்பெண்) என்று கூறட்டும்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


குறிப்பு :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களுள் இதுவும் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 40, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4167

وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ عَبْدِي ‏.‏ فَكُلُّكُمْ عَبِيدُ اللَّهِ وَلَكِنْ لِيَقُلْ فَتَاىَ ‏.‏ وَلاَ يَقُلِ الْعَبْدُ رَبِّي ‏.‏ وَلَكِنْ لِيَقُلْ سَيِّدِي ‏”‏


وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، ح وَحَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا وَكِيعٌ، كِلاَهُمَا عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ وَفِي حَدِيثِهِمَا ‏”‏ وَلاَ يَقُلِ الْعَبْدُ لِسَيِّدِهِ مَوْلاَىَ ‏”‏ ‏.‏ وَزَادَ فِي حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ ‏”‏ فَإِنَّ مَوْلاَكُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏”‏ ‏

“உங்களில் யாரும் (தம் அடிமையை) ‘அப்தீ’ என்று அழைக்க வேண்டாம். உங்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் அடிமை(அப்து)களே! எனவே, ‘ஃபத்தாய’ (என் பணியாளரே!) என்று அழைக்கட்டும். அடிமை, தன் (உரிமையாளரை) ‘ரப்பீ‘ (என் அதிபதியே!) என்று அழைக்க வேண்டாம். மாறாக, ‘ஸய்யிதீ’ (என் தலைவரே!) என்று அழைக்கட்டும்” என்று . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

அபூமுஆவியா (ரஹ்), அஃமஷ் (ரஹ்) ஆகிய இருவர் வழி அறிவிப்புகளில், “அடிமை, தன் உரிமையாளரை ‘மவ்லாய’ (எசமானே!) என்று அழைக்க வேண்டாம்” என்று காணப்படுகிறது.

அபூமுஆவியா (ரஹ்) வழி தனித்த அறிவிப்பில், “ஏனெனில், அல்லாஹ்வே உங்கள் ‘மவ்லா’ (எசமான்) ஆவான்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 40, பாடம்: 3, ஹதீஸ் எண்: 4166

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – وَهُوَ ابْنُ جَعْفَرٍ – عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ عَبْدِي وَأَمَتِي ‏.‏ كُلُّكُمْ عَبِيدُ اللَّهِ وَكُلُّ نِسَائِكُمْ إِمَاءُ اللَّهِ وَلَكِنْ لِيَقُلْ غُلاَمِي وَجَارِيَتِي وَفَتَاىَ وَفَتَاتِي ‏”‏

“உங்களில் யாரும் (தன் ஆண் அடிமையை) ‘அப்தீ’ என்றோ, (அடிமைப் பெண்ணை) ‘அமத்தீ’ என்றோ அழைக்க வேண்டாம். (ஏனெனில்,) உங்களில் ஒவ்வொரு ஆணும் அல்லாஹ்வின் அடிமை(அப்து)களே; உங்களில் ஒவ்வொரு பெண்ணும் அல்லாஹ்வின் அடிமை(அமத்)களே. எனவே, ஃகுலாமீ(என் பணியாளனே!), ஜாரியத்தீ(என் பணிப்பெண்ணே!), ஃபத்தாய(என் சின்னப் பையா!), ஃபத்தாத்தீ(என் சின்னப் பெண்ணே!) ஆகிய (அழகிய) சொற்களால் அழைக்கட்டும்” என்று . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)