அத்தியாயம்: 1, பாடம்: 57, ஹதீஸ் எண்: 180

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏آدَمَ بْنِ سُلَيْمَانَ ‏ ‏مَوْلَى ‏ ‏خَالِدٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏سَعِيدَ بْنَ جُبَيْرٍ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏
‏لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ ‏
‏وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ اللَّهُ ‏

‏قَالَ دَخَلَ قُلُوبَهُمْ مِنْهَا شَيْءٌ لَمْ يَدْخُلْ قُلُوبَهُمْ مِنْ شَيْءٍ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَسَلَّمْنَا قَالَ فَأَلْقَى اللَّهُ الْإِيمَانَ فِي قُلُوبِهِمْ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى ‏
‏لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا ‏ ‏وُسْعَهَا ‏ ‏لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا ‏

‏قَالَ قَدْ فَعَلْتُ ‏
‏رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا ‏ ‏إِصْرًا ‏ ‏كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا ‏

‏قَالَ قَدْ فَعَلْتُ ‏
‏وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا ‏

‏قَالَ قَدْ فَعَلْتُ ‏

“… உங்கள் உள்ளத்துள் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலும் மறைத்தாலும் அல்லாஹ் அதைக் கணக்கெடுத்து விடுவான் …” எனும் (2:284) வசனம் அருளப் பட்டபோது (மக்களது) மனங்களில் அதுவரை குடிபுகாத (சஞ்சலம்) ஒன்று குடிபுகுந்தது. அப்போது, “சொல்லுங்கள்: செவிசாய்த்தோம்; வழிப்பட்டோம்; கட்டுப் படுகிறோம் என்று” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களுக்குக் கூறினார்கள். (அவ்வாறே மக்கள் கூறவே) அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் நம்பிக்கையை ஊட்டி(வலுப் படுத்தி)னான். கூடவே,

“தாங்கிக் கொள்ளவே இயலாத அளவுக்கு யாருக்கும் அல்லாஹ் துன்பத்தை அளிப்பதில்லை. அவரவர் தேடிக்கொண்ட நன்மையும் தீமையும் அவரவர்க்கே!(ஓரிறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைஞ்சுங்கள்:) “எங்கள் இறைவா! (உன் கட்டளைகளை நிறைவேற்றுவதில்) நாங்கள் (எதையும்) மறந்துவிட்டிருந்தாலோ (அதில்) பிழை செய்திருந்தாலோ எங்களைக் குற்றம் பிடித்து விடாதே!” (2:286) என்ற (கற்பிக்கும்) வசனத்தை அருளினான்.

(மக்கள் அதை மீட்டிக் கோரியபோது,)

“ஏற்றுக் கொண்டேன்” என்றான் அல்லாஹ்.

தொடர்ந்து, “எங்கள் இறைவா! எங்களுக்கு முன்வாழ்ந்த(சமுதாயத்த)வர் மீது சுமத்திய (பெருஞ்)சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தி விடாதே!” (என்ற வசனத்தை மக்கள் மீட்டியபோது,)

“ஏற்றுக் கொண்டேன்” என்றான் அல்லாஹ்.

அதைத் தொடர்ந்து, “எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்து விடுவாயாக! எங்கள் மீது பேரருள் புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்” (என்று மக்கள் வேண்டியபோது,)

“ஏற்றுக் கொண்டேன்” என்றான் அல்லாஹ்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி).

Share this Hadith:

Leave a Comment