அத்தியாயம்: 1, பாடம்: 82, ஹதீஸ் எண்: 271

و حَدَّثَنِي ‏ ‏نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرٌ يَعْنِي ابْنَ الْمُفَضَّلِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَسْلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏قَالَ ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَّا أَهْلُ النَّارِ الَّذِينَ هُمْ أَهْلُهَا فَإِنَّهُمْ لَا يَمُوتُونَ فِيهَا وَلَا يَحْيَوْنَ وَلَكِنْ نَاسٌ أَصَابَتْهُمْ النَّارُ بِذُنُوبِهِمْ ‏ ‏أَوْ قَالَ بِخَطَايَاهُمْ ‏ ‏فَأَمَاتَهُمْ إِمَاتَةً حَتَّى إِذَا كَانُوا فَحْمًا أُذِنَ بِالشَّفَاعَةِ فَجِيءَ بِهِمْ ‏ ‏ضَبَائِرَ ‏ ‏ضَبَائِرَ ‏ ‏فَبُثُّوا ‏ ‏عَلَى أَنْهَارِ الْجَنَّةِ ثُمَّ قِيلَ يَا أَهْلَ الْجَنَّةِ أَفِيضُوا عَلَيْهِمْ فَيَنْبُتُونَ نَبَاتَ الْحِبَّةِ تَكُونُ فِي ‏ ‏حَمِيلِ ‏ ‏السَّيْلِ فَقَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ كَأَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ كَانَ ‏ ‏بِالْبَادِيَةِ ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَسْلَمَةَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا نَضْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ إِلَى قَوْلِهِ فِي ‏ ‏حَمِيلِ ‏ ‏السَّيْلِ وَلَمْ يَذْكُرْ مَا بَعْدَهُ ‏

“நரகத்திற்குரியவர்களான நரகவாசிகள் நரகத்தில் (முற்றாக) இறக்கவுமாட்டார்கள்; வாழவுமாட்டார்கள். ஆனால், தம் பாவங்களால் அல்லது குற்றங்களால் நரக நெருப்பிற்கு ஆளானவர்களை (இறைவன் தற்காலிகமாக) இறக்கச் செய்து விடுவான். அவர்கள் (எரிந்து) கரிக் கட்டையாக மாறிவிடும்போது (அவர்களுக்காகப்) பரிந்துரை செய்ய (சொர்க்கவாசிகளுக்கு) அனுமதி வழங்கப்படும். அவர்கள் தனித் தனிக் கூட்டங்களாகக் கொண்டுவரப்பட்டு, சொர்க்க நதிகளின் படுகைகளில் பரப்பி வைக்கப்படுவர். பிறகு “சொர்க்கவாசிகளே! அவர்கள் மீது தண்ணீரை ஊற்றுங்கள்” என்று கூறப்படும் (அவ்வாறே ஊற்றப்பட்டு) வெள்ளத்தில் மிதந்து வந்த வித்து முளைத்தெழுவதைப்போல் நரகவாசிகள் (பசுமையாக) மாறி விடுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியபோது மக்களில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிராமப்புறத்தில் இருந்திருக்கிறார்கள் போலும்” என்று கூறினார்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி).

குறிப்பு:

இதே ஹதீஸ், முஹம்மதிப்னுல் முஸன்னா (ரஹ்), இபுனு பஷ்ஷார் (ரஹ்) ஆகிய இருவரது வழி அறிப்பில், “வெள்ளத்தில் மிதந்து வந்த வித்து முளைத்தெழுவதைப்போல் நரகவாசிகள் (பசுமையாக) மாறி விடுவார்கள்” என்பதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 1, பாடம்: 82, ஹதீஸ் எண்: 270

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏مَالِكُ بْنُ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ يَحْيَى بْنِ عُمَارَةَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏يُدْخِلُ اللَّهُ أَهْلَ الْجَنَّةِ الْجَنَّةَ يُدْخِلُ مَنْ يَشَاءُ بِرَحْمَتِهِ وَيُدْخِلُ أَهْلَ النَّارِ النَّارَ ثُمَّ يَقُولُ انْظُرُوا مَنْ وَجَدْتُمْ فِي قَلْبِهِ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجُوهُ فَيُخْرَجُونَ مِنْهَا حُمَمًا قَدْ ‏ ‏امْتَحَشُوا ‏ ‏فَيُلْقَوْنَ فِي نَهَرِ الْحَيَاةِ ‏ ‏أَوْ الْحَيَا ‏ ‏فَيَنْبُتُونَ فِيهِ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ إِلَى جَانِبِ السَّيْلِ أَلَمْ تَرَوْهَا كَيْفَ تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةً ‏
‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ عَوْنٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدٌ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ يَحْيَى ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَقَالَا ‏ ‏فَيُلْقَوْنَ فِي نَهَرٍ يُقَالَ لَهُ الْحَيَاةُ وَلَمْ يَشُكَّا وَفِي حَدِيثِ ‏ ‏خَالِدٍ ‏ ‏كَمَا تَنْبُتُ ‏ ‏الْغُثَاءَةُ ‏ ‏فِي جَانِبِ السَّيْلِ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏وُهَيْبٍ ‏ ‏كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي ‏ ‏حَمِئَةٍ ‏ ‏أَوْ ‏ ‏حَمِيلَةِ ‏ ‏السَّيْلِ ‏

“சொர்க்கவாசிகளை (மறுமையில்) அல்லாஹ் சொர்க்கத்திற்கு அனுப்புவான். தான் நாடும் சிலரைத் தனது (தனிப்பெரும்) கருணையால் சொர்க்கத்திற்கு அனுப்புவான். நரகவாசிகளை நரகத்தில் நுழையவைப்பான். பிறகு, ‘உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை உள்ளவராகப் பார்த்து (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்’ என்று கூறுவான். அப்போது கரிந்து கரிக்கட்டையாகி விட்ட நிலையில் நரகவாசிகள் வெளியேற்றப்படுவார்கள். பின்னர் அவர்கள் ‘நஹ்ருல் ஹயாத்’ (ஜீவ) நதியில் அல்லது ‘நஹ்ருல் ஹயா’ (மழைநீர்) நதியில் போடப்பட்டு, உழுநிலத்தில் விதைப்பயிர் முளைத்தெழுவதைப்போல் (பசுமையாக) நிறம் மாறி வெளியாவார்கள். முளைத்து வரும் வித்து, மஞ்சள் நிறத்தில் அசைந்தாடும் காட்சியை நீங்கள் கண்டிருக்கின்றீர்கள் அல்லவா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி).

குறிப்பு:

இதே ஹதீஸ், அம்ரிப்னுக் யஹ்யா (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர்கள் நஹ்ருல் ஹயாத் (ஜீவ) நதியில் போடப்படுவார்கள்” என்று ஐயமின்றி இடம்பெற்றுள்ளது. காலித் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர்கள் நதிக்கரையோரத்தில் உள்ள குப்பைகளிலிருந்து முளைப்பதைப்போல்” என்று குறிப்பிடப் படுகிறது. உஹைப் (ரஹ்) வழி அறிவிப்பில், “களிமண்ணிலிருந்து அல்லது சேற்று வெள்ளத்திலிருந்து மிதந்து வந்த வித்து முளைத்தெழுவதைப் போன்று” என்று (ஐயப்பாட்டுடன்) இடம்பெற்றுள்ளது