و حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ عَمْرَو بْنَ أَبِي سُفْيَانَ بْنِ أَسِيدِ بْنِ جَارِيَةَ الثَّقَفِيَّ أَخْبَرَهُ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ لِكَعْبِ الْأَحْبَارِ
إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِكُلِّ نَبِيٍّ دَعْوَةٌ يَدْعُوهَا فَأَنَا أُرِيدُ إِنْ شَاءَ اللَّهُ أَنْ أَخْتَبِئَ دَعْوَتِي شَفَاعَةً لِأُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ
فَقَالَ كَعْبٌ لِأَبِي هُرَيْرَةَ أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَبُو هُرَيْرَةَ نَعَمْ
“ஒவ்வொரு நபிக்கும் அவர் (அல்லாஹ்விடம்) வேண்டிக் கொள்வதற்காக ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை உண்டு. அல்லாஹ் நாடினால் நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகத் தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).
குறிப்பு:
இதை அபூஹுரைரா (ரலி) அறிவிக்கக் கேட்ட கஅப் அல்-அஹ்பார் (ரஹ்), “இதை அல்லாஹ்வின் தூதரிடமிருந்து நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டு, “ஆம்” என்று அபூஹுரைரா (ரலி) பதிலளித்ததாக அம்ரிப்னு அபீஸுஃப்யான் (ரஹ்) வழியான அறிவிப்பில் கூடுதலாகப் பதிவாகியுள்ளது.