அத்தியாயம்: 12, பாடம்: 26, ஹதீஸ் எண்: 1703

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَاتِمٌ يَعْنِي ابْنَ إِسْمَعِيلَ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ يَعْنِي ابْنَ أَبِي عُبَيْدٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عُمَيْرًا ‏ ‏مَوْلَى ‏ ‏آبِي اللَّحْمِ ‏ ‏قَالَ ‏

‏أَمَرَنِي ‏ ‏مَوْلَايَ ‏ ‏أَنْ أُقَدِّدَ لَحْمًا فَجَاءَنِي مِسْكِينٌ فَأَطْعَمْتُهُ مِنْهُ فَعَلِمَ بِذَلِكَ ‏ ‏مَوْلَايَ ‏ ‏فَضَرَبَنِي فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَدَعَاهُ فَقَالَ ‏ ‏لِمَ ضَرَبْتَهُ فَقَالَ يُعْطِي طَعَامِي بِغَيْرِ أَنْ آمُرَهُ فَقَالَ الْأَجْرُ بَيْنَكُمَا

என் எஜமானர் என்னிடம் (ஒரு முறை) இறைச்சியை(வெட்டி உப்புக் கண்டத்திற்காக)க் காயப்போடுமாறு கட்டளையிட்டார். அப்போது என்னிடம் ஓர் ஏழை வந்தார். அதிலிருந்து சிறிதளவு இறைச்சியை அவருக்கு நான் வழங்கிவிட்டேன். இதை என் எஜமானர் அறிந்தபோது என்னை அடித்துவிட்டார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), என் எஜமானரை அழைத்து, “அவரை ஏன் அடித்தீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, “நான் இவருக்குக் கட்டளையிடாமலேயே எனது உணவை மற்றவர்களுக்குக் கொடுக்கிறார்” என்று பதில் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “(ஏழைக்கு வழங்கியதால்) உங்கள் இருவருக்குமே நற்கூலி உண்டு” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஆபில் லஹ்ம் என்பாரின் அடிமையாயிருந்த உமைர் (ரலி)

Share this Hadith:

Leave a Comment