அத்தியாயம்: 12, பாடம்: 46, ஹதீஸ் எண்: 1758

حَدَّثَنَا ‏ ‏سُرَيْجُ بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ يَحْيَى بْنِ عُمَارَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبَّادِ بْنِ تَمِيمٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمَّا فَتَحَ ‏ ‏حُنَيْنًا ‏ ‏قَسَمَ الْغَنَائِمَ فَأَعْطَى الْمُؤَلَّفَةَ قُلُوبُهُمْ فَبَلَغَهُ أَنَّ ‏ ‏الْأَنْصَارَ ‏ ‏يُحِبُّونَ أَنْ يُصِيبُوا مَا أَصَابَ النَّاسُ فَقَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَخَطَبَهُمْ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ يَا مَعْشَرَ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏أَلَمْ أَجِدْكُمْ ضُلَّالًا فَهَدَاكُمْ اللَّهُ بِي ‏ ‏وَعَالَةً ‏ ‏فَأَغْنَاكُمْ اللَّهُ بِي وَمُتَفَرِّقِينَ فَجَمَعَكُمْ اللَّهُ بِي وَيَقُولُونَ اللَّهُ وَرَسُولُهُ أَمَنُّ فَقَالَ أَلَا تُجِيبُونِي فَقَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَمَنُّ فَقَالَ أَمَا إِنَّكُمْ لَوْ شِئْتُمْ أَنْ تَقُولُوا كَذَا وَكَذَا وَكَانَ مِنْ الْأَمْرِ كَذَا وَكَذَا لِأَشْيَاءَ عَدَّدَهَا زَعَمَ ‏ ‏عَمْرٌو ‏ ‏أَنْ لَا يَحْفَظُهَا فَقَالَ ‏ ‏أَلَا تَرْضَوْنَ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالشَّاءِ وَالْإِبِلِ وَتَذْهَبُونَ بِرَسُولِ اللَّهِ إِلَى ‏ ‏رِحَالِكُمْ ‏ ‏الْأَنْصَارُ ‏ ‏شِعَارٌ وَالنَّاسُ دِثَارٌ وَلَوْلَا الْهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏وَلَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا وَشِعْبًا لَسَلَكْتُ وَادِيَ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏وَشِعْبَهُمْ إِنَّكُمْ سَتَلْقَوْنَ بَعْدِي ‏ ‏أَثَرَةً ‏ ‏فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي عَلَى الْحَوْضِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹுனைன் போரில் வெற்றி கண்டபோது, போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டார்கள். அப்போது உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டி(மக்கா வெற்றியின்போது புதிதாக இஸ்லாத்தைத் தழுவி(யவர்களுக்கு அவற்றைக் கொடுத்தார்கள். ‘அந்த மக்களுக்குக் கிடைத்ததைப் போன்று தமக்கும் கிடைக்க வேண்டும் என அன்ஸாரிகள் விரும்புகின்றார்கள்’ என்ற செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எழுந்து நின்று, அன்ஸாரிகளிடையே உரையாற்றினார்கள்.

அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிறகு, “அன்ஸாரிகளே! உங்களை வழிதவறியவர்களாக நான் கண்டேன்; அல்லாஹ் என் மூலமாக உங்களுக்கு நேர்வழி காட்டவில்லையா? நீங்கள் ஏழ்மையில் இருந்தீர்கள். அல்லாஹ், என் மூலமாக உங்களைத் தேவையற்றவர்களாக ஆக்கவில்லையா? நீங்கள் பிரிந்து (சிதறிக்) கிடந்தீர்கள். அல்லாஹ் என் மூலமாக உங்களை இணக்கமாக்கவில்லையா?” என்று கேட்டார்கள். ஒவ்வொரு கேள்விக்கும் அன்ஸாரிகள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே (எங்களுக்கு) அதிக நலன் நாடுவோர்” என்று பதில் கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அவ்வாறிருக்க, எனக்கு நீங்கள் ஒத்துழைக்கமாட்டீர்களா?” என்று கேட்க அதற்கும் அன்ஸாரிகள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே (எங்களுக்கு) அதிக நலன் நாடுவோர்” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “விரும்பினால் நீங்களும் இன்னின்னவாறு இன்னின்னபோது நடந்தது என்று (எனக்கு நீங்கள் செய்த உதவிகளையும் எடுத்துக்) கூறலாம்” என்று சில விஷயங்களை நினைவூட்டினார்கள்.

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ள) இந்த மக்கள் (நான் கொடுக்கும்) ஆடுகளையும் ஒட்டகங்களையும் (ஓட்டிக்) கொண்டுசெல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைவனின் தூதரையே கொண்டுசெல்வதை விரும்பமாட்டீர்களா? அன்ஸாரி(களாகிய நீங்)கள் (மேனியுடன் ஒட்டிய) உள்ளாடைகள் போன்றவர்கள். மற்றவர்கள் மேலாடை போன்றவர்கள். ஹிஜ்ரத்(தினால் நான் மக்கத்து முஹாஜிர்) இல்லாவிட்டால், நான் (மதீனத்து) அன்ஸாரிகளில் ஒருவனே!. மக்களெல்லாம் ஒரு கணவாயிலும் பள்ளத்தாக்கிலும் நடந்து சென்றால், நான் அன்ஸாரிகள் செல்லும் கணவாயிலும் பள்ளத் தாக்கிலும்தான் செல்வேன். நீங்கள் விரைவில் (ஆட்சியதிகாரத்தில்) உங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதைக் காண்பீர்கள். ஆகவே, (மறுமையில்) தடாகம் அருகே என்னைச் சந்திக்கும்வரை பொறுமையுடன் இருங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)

குறிப்பு : “நீங்கள் எனக்குச் செய்த இன்னின்ன உதவிகளைச் சொல்லிக் காட்டலாம்“ என்று நபி (ஸல்) நினைவூட்டிய விஷயங்களைத் தாம் மனனமிடவில்லை என இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ரு பின் யஹ்யா (ரஹ்) குறிப்பிட்டுள்ளார்.

Share this Hadith:

Leave a Comment