و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا هُشَيْمٌ عَنْ أَبِي إِسْحَقَ الشَّيْبَانِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فِي شَهْرِ رَمَضَانَ فَلَمَّا غَابَتْ الشَّمْسُ قَالَ يَا فُلَانُ انْزِلْ فَاجْدَحْ لَنَا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ عَلَيْكَ نَهَارًا قَالَ انْزِلْ فَاجْدَحْ لَنَا قَالَ فَنَزَلَ فَجَدَحَ فَأَتَاهُ بِهِ فَشَرِبَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ بِيَدِهِ إِذَا غَابَتْ الشَّمْسُ مِنْ هَا هُنَا وَجَاءَ اللَّيْلُ مِنْ هَا هُنَا فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ
நாங்கள் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். சூரியன் மறைந்ததும் ஒருவரிடம், “இன்னவரே, (வாகனத்திலிருந்து) இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள். அவர், “அல்லாஹ்வின் தூதரே! பகல் இன்னும் எஞ்சியுள்ளதே?” என்று சொன்னார். “இன்னவரே, (வாகனத்திலிருந்து) இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்று (மீண்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள். எனவே, அவர் இறங்கிவந்து, மாவு கரைத்துக் கொண்டுவந்தார். நபி (ஸல்) அதை அருந்திவிட்டு, “சூரியன் இங்கிருந்து மறைந்து, இரவு அங்கிருந்து வந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார்” என்று கையால் சைகை செய்து கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி)