அத்தியாயம்: 15, பாடம்: 46, ஹதீஸ் எண்: 2253

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَيَعْقُوبُ الدَّوْرَقِيُّ ‏ ‏قَالُوا أَخْبَرَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ بْنِ حُسَيْنٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ: ‏

كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي غَدَاةِ ‏ ‏عَرَفَةَ ‏ ‏فَمِنَّا الْمُكَبِّرُ وَمِنَّا الْمُهَلِّلُ فَأَمَّا نَحْنُ فَنُكَبِّرُ قَالَ قُلْتُ وَاللَّهِ لَعَجَبًا مِنْكُمْ كَيْفَ لَمْ تَقُولُوا لَهُ مَاذَا رَأَيْتَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَصْنَعُ

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “நாங்கள் அரஃபா தினத்தன்று காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது எங்களில் சிலர் தக்பீர் சொல்லிக்கொண்டிருந்தனர். வேறுசிலர் தல்பியா சொல்லிக்கொண்டிருந்தனர். நாங்களோ தக்பீர் சொல்லிக்கொண்டிருந்தோம்” என்று கூறினார்கள்.

நான் எனக்கு இந்தச் செய்தியை அறிவித்த இப்னு உமர் (ரலி) அவர்களின் மகனாரான அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களைக் கண்டு வியப்படைகின்றேன்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்போது என்ன செய்தார்கள் என்று நீங்கள் பார்க்கவில்லையா? என உங்கள் தந்தையிடம் எப்படி வினவாமலிருந்தீர்கள்?” என்று கேட்டேன்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் அபீ ஸலமா (ரஹ்)


குறிப்பு :

இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் அபீ ஸலமா (ரஹ்) அவர்களுக்கு அறிவித்தவர், நபித் தோழர் இப்னு உமர் (ரலி) அவர்களின் மகனான அப்துல்லாஹ் (ரஹ்) ஆவார். அரபியர்களிடம் அரிதாகத் தந்தைக்கும் மகனுக்கும் ஒரே பெயர் இருப்பதுண்டு.

“இப்னு உமர்+ஸஃபிய்யா பின்த் அபீஉபைதா மஸ்ஊத் அஸ்ஸகபிய்யா தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் அப்துல்லாஹ் (ரஹ்)“ என்று ‘தபக்காத்துல் குப்ரா’(1420/4)வில் இமாம் இப்னு ஸஅத் அத்தபரீ (ரஹ்) அவர்களும் “இப்னு உமர் (ரலி) அவர்களின் மூத்த மகன் அப்துல்லாஹ் (ரஹ்)“ என்று யஸீத் இப்னு ஹாரூன் (ரஹ்) கூறியதாக ‘இஸாபா‘(6616)வில் இமாம் அஸ்கலானீ (ரஹ்) அவர்களும் பதிவு செய்துள்ளனர்.

 

Share this Hadith: