அத்தியாயம்: 15, பாடம்: 35, ஹதீஸ் எண்: 2198

‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ مُوسَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏زُهَيْرٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏زَيْدَ بْنَ أَرْقَمَ : ‏

‏كَمْ غَزَوْتَ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ سَبْعَ عَشْرَةَ قَالَ وَحَدَّثَنِي ‏ ‏زَيْدُ بْنُ أَرْقَمَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏غَزَا تِسْعَ عَشْرَةَ وَأَنَّهُ حَجَّ بَعْدَ مَا هَاجَرَ حَجَّةً وَاحِدَةً حَجَّةَ الْوَدَاعِ ‏‏قَالَ ‏ ‏أَبُو إِسْحَقَ ‏ ‏وَبِمَكَّةَ ‏ ‏أُخْرَى

நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எத்தனை அறப் போர்களில் நீங்கள் கலந்து கொண்டீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “பதினேழு அறப் போர்களில்” என்று விடையளித்தார்கள்.

தொடர்ந்து அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பத்தொன்பது போர்களில் கலந்து கொண்டார்கள். அவர்கள் (மதீனாவிற்கு) நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்ற பிறகு ஒரேயொரு ஹஜ் -விடைபெறும் ஹஜ்- மட்டுமே செய்தார்கள்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் அர்கம் (ரலி) வழியாக அபூஇஸ்ஹாக் அம்ரு அஸ்ஸபீஈ (ரஹ்)