அத்தியாயம்: 1, பாடம்: 45, ஹதீஸ் எண்: 152

‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏هَمَّامِ بْنِ الْحَارِثِ ‏ ‏قَالَ ‏
‏كَانَ رَجُلٌ يَنْقُلُ الْحَدِيثَ إِلَى الْأَمِيرِ فَكُنَّا جُلُوسًا فِي الْمَسْجِدِ فَقَالَ الْقَوْمُ هَذَا مِمَّنْ يَنْقُلُ الْحَدِيثَ إِلَى الْأَمِيرِ قَالَ فَجَاءَ حَتَّى جَلَسَ إِلَيْنَا فَقَالَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا يَدْخُلُ الْجَنَّةَ ‏ ‏قَتَّاتٌ

மக்கள் பேசிக் கொள்வதை ஒருவர் ஆட்சியாளரிடம் (புறங்)கூறிக் கொண்டிருந்தார். நாங்கள் (ஒருநாள்) மஸ்ஜிதில் அமர்ந்திருந்தபோது மக்கள் (அவரைச் சுட்டிக் காட்டி), “இதோ! இவர் (நமக்கிடையில் நடக்கும்) உரையாடல்களை ஆட்சியாளரிடம் கொண்டு போய்ச் சேர்ப்பவர்களில் ஒருவர்” என்று கூறினர். அப்போது அதே மனிதர் வந்து எங்கள் அருகில் அமர்ந்தார். அப்போது ஹுதைஃபா(ரலி) அவர்கள், “புறங்கூறுபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்-யமன் (ரலி).

Share this Hadith:

Leave a Comment