அத்தியாயம்: 1, பாடம்: 48, ஹதீஸ் எண்: 165

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هَاشِمُ بْنُ الْقَاسِمِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏سِمَاكٌ الْحَنَفِيُّ أَبُو زُمَيْلٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُمَرُ بْنُ الْخَطَّابِ ‏ ‏قَالَ ‏
‏لَمَّا كَانَ يَوْمُ ‏ ‏خَيْبَرَ ‏ ‏أَقْبَلَ نَفَرٌ مِنْ ‏ ‏صَحَابَةِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالُوا فُلَانٌ شَهِيدٌ فُلَانٌ شَهِيدٌ حَتَّى مَرُّوا عَلَى رَجُلٍ فَقَالُوا فُلَانٌ شَهِيدٌ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَلَّا ‏ ‏إِنِّي رَأَيْتُهُ فِي النَّارِ فِي ‏ ‏بُرْدَةٍ ‏ ‏غَلَّهَا ‏ ‏أَوْ عَبَاءَةٍ ‏ ‏ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَا ‏ ‏ابْنَ الْخَطَّابِ ‏ ‏اذْهَبْ فَنَادِ فِي النَّاسِ أَنَّهُ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا الْمُؤْمِنُونَ قَالَ فَخَرَجْتُ فَنَادَيْتُ أَلَا إِنَّهُ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا الْمُؤْمِنُونَ

கைபர் போரின்போது நபித்தோழர்களில் சிலர், “இன்னார் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆகி விட்டார். இன்னார் உயிர்த்தியாகி ஆகிவிட்டார் என்று கூறிக்கொண்டே வந்து, இறுதியாக ஒருவரைப் பற்றி, “இன்னாரும் உயிர்த்தியாகி ஆகி விட்டார்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இல்லை! (போரில் கிடைத்த) கோடு போட்ட வண்ணப் போர்வை ஒன்றை (ப் பங்கீட்டுக்கு முன் அனுமதியின்றி) அவர் எடுத்துக் கொண்ட காரணத்தால் அவரை நான் நரகத்தில் கண்டேன்” என்றார்கள்.

பிறகு (என்னிடம்), “கத்தாபின் புதல்வரே! நீங்கள் சென்று, இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று மக்களுக்கு அறிவித்து விடுங்கள்!” என்று உத்தரவிட்டார்கள். அவ்வாறே நானும் சென்று, “அறிந்துகொள்ளுங்கள்! இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்” என்று மக்களிடையே அறிவித்தேன்.

அறிவிப்பாளர் : உமர் பின் அல்-கத்தாப் (ரலி).

Share this Hadith:

Leave a Comment