அத்தியாயம்: 1, பாடம்: 74, ஹதீஸ் எண்: 238

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏لَعَلَّهُ قَالَ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ صَعْصَعَةَ ‏ ‏رَجُلٍ مِنْ قَوْمِهِ ‏ ‏قَالَ ‏
‏قَالَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْنَا أَنَا عِنْدَ ‏ ‏الْبَيْتِ ‏ ‏بَيْنَ النَّائِمِ وَالْيَقْظَانِ إِذْ سَمِعْتُ قَائِلًا يَقُولُ أَحَدُ الثَّلَاثَةِ بَيْنَ الرَّجُلَيْنِ فَأُتِيتُ فَانْطُلِقَ بِي فَأُتِيتُ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ فِيهَا مِنْ مَاءِ ‏ ‏زَمْزَمَ ‏ ‏فَشُرِحَ ‏ ‏صَدْرِي إِلَى كَذَا وَكَذَا قَالَ ‏ ‏قَتَادَةُ ‏ ‏فَقُلْتُ لِلَّذِي مَعِي مَا ‏ ‏يَعْنِي قَالَ إِلَى أَسْفَلِ بَطْنِهِ فَاسْتُخْرِجَ قَلْبِي فَغُسِلَ بِمَاءِ ‏ ‏زَمْزَمَ ‏ ‏ثُمَّ أُعِيدَ مَكَانَهُ ثُمَّ حُشِيَ إِيمَانًا وَحِكْمَةً ثُمَّ أُتِيتُ بِدَابَّةٍ أَبْيَضَ يُقَالُ لَهُ ‏ ‏الْبُرَاقُ ‏ ‏فَوْقَ الْحِمَارِ وَدُونَ الْبَغْلِ يَقَعُ خَطْوُهُ عِنْدَ أَقْصَى طَرْفِهِ فَحُمِلْتُ عَلَيْهِ ثُمَّ انْطَلَقْنَا حَتَّى أَتَيْنَا السَّمَاءَ الدُّنْيَا فَاسْتَفْتَحَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقِيلَ مَنْ هَذَا قَالَ ‏ ‏جِبْرِيلُ ‏ ‏قِيلَ وَمَنْ مَعَكَ قَالَ ‏ ‏مُحَمَّدٌ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قِيلَ وَقَدْ بُعِثَ إِلَيْهِ قَالَ نَعَمْ قَالَ فَفَتَحَ لَنَا وَقَالَ مَرْحَبًا بِهِ وَلَنِعْمَ الْمَجِيءُ جَاءَ قَالَ فَأَتَيْنَا عَلَى ‏ ‏آدَمَ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِقِصَّتِهِ وَذَكَرَ أَنَّهُ لَقِيَ فِي السَّمَاءِ الثَّانِيَةِ ‏ ‏عِيسَى ‏ ‏وَيَحْيَى ‏ ‏عَلَيْهَا السَّلَام ‏ ‏وَفِي الثَّالِثَةِ ‏ ‏يُوسُفَ ‏ ‏وَفِي الرَّابِعَةِ ‏ ‏إِدْرِيسَ ‏ ‏وَفِي الْخَامِسَةِ ‏ ‏هَارُونَ ‏ ‏صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمْ ‏ ‏قَالَ ثُمَّ انْطَلَقْنَا حَتَّى انْتَهَيْنَا إِلَى السَّمَاءِ السَّادِسَةِ فَأَتَيْتُ عَلَى ‏ ‏مُوسَى ‏ ‏عَلَيْهِ السَّلَام ‏ ‏فَسَلَّمْتُ عَلَيْهِ فَقَالَ مَرْحَبًا بِالْأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ فَلَمَّا جَاوَزْتُهُ بَكَى فَنُودِيَ مَا يُبْكِيكَ قَالَ رَبِّ هَذَا غُلَامٌ بَعَثْتَهُ بَعْدِي يَدْخُلُ مِنْ أُمَّتِهِ الْجَنَّةَ أَكْثَرُ مِمَّا يَدْخُلُ مِنْ أُمَّتِي قَالَ ثُمَّ انْطَلَقْنَا حَتَّى انْتَهَيْنَا إِلَى السَّمَاءِ السَّابِعَةِ فَأَتَيْتُ عَلَى ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏وَقَالَ فِي الْحَدِيثِ وَحَدَّثَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ رَأَى أَرْبَعَةَ أَنْهَارٍ يَخْرُجُ مِنْ أَصْلِهَا نَهْرَانِ ظَاهِرَانِ وَنَهْرَانِ بَاطِنَانِ فَقُلْتُ يَا ‏ ‏جِبْرِيلُ ‏ ‏مَا هَذِهِ الْأَنْهَارُ قَالَ أَمَّا النَّهْرَانِ الْبَاطِنَانِ فَنَهْرَانِ فِي الْجَنَّةِ وَأَمَّا الظَّاهِرَانِ فَالنِّيلُ وَالْفُرَاتُ ثُمَّ رُفِعَ لِي ‏ ‏الْبَيْتُ الْمَعْمُورُ ‏ ‏فَقُلْتُ يَا ‏ ‏جِبْرِيلُ ‏ ‏مَا هَذَا قَالَ هَذَا ‏ ‏الْبَيْتُ الْمَعْمُورُ ‏ ‏يَدْخُلُهُ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ إِذَا خَرَجُوا مِنْهُ لَمْ يَعُودُوا فِيهِ آخِرُ مَا عَلَيْهِمْ ثُمَّ أُتِيتُ بِإِنَاءَيْنِ أَحَدُهُمَا خَمْرٌ وَالْآخَرُ لَبَنٌ فَعُرِضَا عَلَيَّ فَاخْتَرْتُ اللَّبَنَ فَقِيلَ أَصَبْتَ أَصَابَ اللَّهُ بِكَ أُمَّتُكَ عَلَى الْفِطْرَةِ ثُمَّ فُرِضَتْ عَلَيَّ كُلَّ يَوْمٍ خَمْسُونَ صَلَاةً ثُمَّ ذَكَرَ قِصَّتَهَا إِلَى آخِرِ الْحَدِيثِ ‏
‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ صَعْصَعَةَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏فَذَكَرَ نَحْوَهُ وَزَادَ فِيهِ فَأُتِيتُ ‏ ‏بِطَسْتٍ ‏ ‏مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا فَشُقَّ مِنْ ‏ ‏النَّحْرِ ‏ ‏إِلَى ‏ ‏مَرَاقِّ ‏ ‏الْبَطْنِ فَغُسِلَ بِمَاءِ ‏ ‏زَمْزَمَ ‏ ‏ثُمَّ مُلِئَ حِكْمَةً وَإِيمَانًا ‏

“நான் இறையில்லத்தில் உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலையில் (படுத்து) இருந்தபோது, (வானவர்) ஒருவர் (வந்து), “(அதோ, அந்த) இருவருக்கும் நடுவில் (படுத்து) உள்ள மூன்றாமவர்தாம்” என்று (என்னைச் சுட்டிக்) கூறுவதைக் கேட்டேன். எனக்காகப் பொன்னாலான தாம்பாளம் ஒன்று கொண்டுவரப் பட்டது. அதில் ‘ஸம்ஸம்’ நீர் இருந்தது. எனது நெஞ்சு இங்கிருந்து … இதுவரையில் பிளக்கப்பட்டது.

பிறகு எனது இருதயம் வெளியிலெடுக்கப்பட்டு, ஸம்ஸம் நீரால் கழுவப்பட்டு, பழையபடி அது இருந்த இடத்தில் (பொருத்தி) வைக்கப்பட்டது. பிறகு இறைநம்பிக்கையாலும் ஞானத்தாலும் அது நிரப்பப்பட்டது. பிறகு நாட்டுக் கழுதைக்கும் கோவேறு கழுதைக்கும் இடைப்பட்ட உருவமைப்பில், வெள்ளை நிறத்திலமைந்த, பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்கின்ற ‘புராக்’ எனப்படும் ஒரு (மின்னல்வேக) வாகனம் எனக்காகக் கொண்டு வரப்பட்டது. நான் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டேன். பின்னர் நாங்கள் (புறப்பட்டு,) பூமியின் (முதல்) வானத்திற்குச் சென்றோம். அதைத் திறக்கும்படி ஜிப்ரீல் (அலை) அவர்கள் பணித்தபோது, “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார்கள். “உம்முடன் (வந்திருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “முஹம்மத் (ஸல்)” என்று பதிலளித்தார்கள். “அவர் அழைக்கப் பட்டாரா?” என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல் (அலை), “ஆம்” என்றார். (அந்த வானத்தின் காவலர்) எங்களுக்காகத் திறந்து, “அவரது வரவு நல்வரவாகட்டும்! அவரது வருகை மிக நல்வருகை!” என்று (வாழ்த்துக்) கூறினர். நாங்கள் (அந்த வானிலிருந்த) ஆதம் (அலை) அவர்களிடம் சென்றோம் …

…இரண்டாம் வானத்தில் ஈஸா (அலை), யஹ்யா (அலை) ஆகியோரையும் மூன்றாம் வானத்தில் யூஸுஃப் (அலை) அவர்களையும் நான்காம் வானத்தில் இத்ரீஸ் (அலை) அவர்களையும் ஐந்தாம் வானத்தில் ஹாரூன் (அலை) அவர்களையும் சந்தித்த பிறகு, நாங்கள் ஆறாம் வானத்தைச் சென்றடைந்தோம். அங்கு நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அவர்கள், “நற்குணச் சகோதரருக்கு நல்வரவு! நற்குண நபிக்கு நல்வரவு!” என்று (வாழ்த்துக்) கூறினார்கள். நான் அவர்களிடமிருந்து கிளம்பியபோது அவர்கள் அழுதார்கள். “ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “இறைவா! என் சமுதாயத்தாரில் சொர்க்கம் செல்கின்றவர்களைவிட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு உன்னால் அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்திலிருந்து சொர்க்கம் செல்வார்கள் (என்பதால் என் சமுதாய மக்களை எண்ணி அழுதேன்)” என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாம் வானத்தைச் சென்றடைந்தோம். அங்கு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டேன் …

-000-

அங்கு நான்கு நதிகளைக் கண்டதாக நபி (ஸல்) கூறினார்கள். மேலும், ‘சித்ரத்துல் முன்தஹா’வின் அடிமூலத்திலிருந்து, வெளிநோக்கி இரண்டு நதிகளும் உள்நோக்கி இரண்டு நதிகளும் வெளியாகி(ஓடி)க் கொண்டிருந்தன. நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், “ஜிப்ரீலே! இந்நதிகள் எவை?” என்று கேட்டேன். “உள்ளே ஓடுபவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ள(சல்சபீல், கவ்ஸர் ஆகிய)வையாகும். வெளியே ஓடுபவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்” என்று ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார்கள்.

பிறகு அல்-பைத்துல் மஅமூர் (எனும் இறையில்லம்) எனக்குக் காட்டப்பட்டது. நான், “ஜிப்ரீல்! இது என்ன?” என்று கேட்டேன். “இதுதான் அல்-பைத்துல் மஅமூர் ஆகும். இதில் (இறைவனை வணங்குவதற்காக) ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் நுழைகிறார்கள். அவர்கள் இங்கிருந்து வெளியே சென்றால் திரும்ப இங்கு வரமாட்டார்கள். (முதல் தடவை நுழைவான) அது அவர்களது இறுதி நுழைவாகும்” என்று ஜிப்ரீல் (அலை) சொன்னார்கள். பிறகு என்னிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றின் ஒன்றில் மதுவும் மற்றொன்றில் பாலும் இருந்தன. அவ்விரு பாத்திரங்களையும் என்னிடம் எடுத்துக் காட்டப்(பட்டு, அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு கூறப்)பட்டது. நான் பாலைத் தேர்ந்தெடுத்தேன். அப்போது, “மிக மேன்மையானதைப் பெற்று விட்டீர்கள். உங்கள் மூலம் அல்லாஹ் மிக மேன்மையையே நாடியுள்ளான். உங்கள் சமுதாயத்தாரும் அந்த (மிக மேன்மையான) இயற்கை நெறியிலேயே இருப்பார்கள்” என்று கூறப்பட்டது. பிறகு என்மீது நாளொன்றுக்கு ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டன ….

இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறுதிவரை குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி).

குறிப்பு:

என்னுடன் இருந்த(ஜாரூத் என்ப)வரிடம், (அல்லாஹ்வின் தூதரது நெஞ்சு பிளக்கப் பட்டதான) “இங்கிருந்து … இதுவரையில் என்று கூறப்படுவதன் பொருள் யாது?” என்று நான் கேட்டதற்கு, “(நெஞ்சின் ஆரம்பத்திலிருந்து) அடிவயிறுவரை என்பது அனஸ் (ரலி) அவர்களது கருத்து” என்று (ஜாரூத்) பதிலளித்தார் என்பதாக இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

இதே ஹதீஸ், முஆத் இபுனு ஹிஷாம் வழி அறிவிப்பில், “… நுண்ணறிவும் இறைநம்பிக்கையும் நிரப்பப்பட்ட பொன்னாலான தாம்பாளம் ஒன்று எனக்காகக் கொண்டுவரப்பட்டது. பிறகு எனது காறையெலும்பிலிருந்து அடிவயிறுவரை பிளக்கப்பட்டு ஸம்ஸம் நீரால் கழுவப்பட்டது. பிறகு ஞானத்தாலும் இறைநம்பிக்கையாலும் (என் நெஞ்சம்) நிரப்பப்பட்டது” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அறிவித்ததாகக் குறிப்பிடப் படுகிறது.

Share this Hadith:

Leave a Comment