و حَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ أَبُو ذَرٍّ يُحَدِّثُ :
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فُرِجَ سَقْفُ بَيْتِي وَأَنَا بِمَكَّةَ فَنَزَلَ جِبْرِيلُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَفَرَجَ صَدْرِي ثُمَّ غَسَلَهُ مِنْ مَاءِ زَمْزَمَ ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا فَأَفْرَغَهَا فِي صَدْرِي ثُمَّ أَطْبَقَهُ ثُمَّ أَخَذَ بِيَدِي فَعَرَجَ بِي إِلَى السَّمَاءِ فَلَمَّا جِئْنَا السَّمَاءَ الدُّنْيَا قَالَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام لِخَازِنِ السَّمَاءِ الدُّنْيَا افْتَحْ قَالَ مَنْ هَذَا قَالَ هَذَا جِبْرِيلُ قَالَ هَلْ مَعَكَ أَحَدٌ قَالَ نَعَمْ مَعِيَ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَأُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ فَفَتَحَ قَالَ فَلَمَّا عَلَوْنَا السَّمَاءَ الدُّنْيَا فَإِذَا رَجُلٌ عَنْ يَمِينِهِ أَسْوِدَةٌ وَعَنْ يَسَارِهِ أَسْوِدَةٌ قَالَ فَإِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى قَالَ فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالِابْنِ الصَّالِحِ قَالَ قُلْتُ يَا جِبْرِيلُ مَنْ هَذَا قَالَ هَذَا آدَمُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهَذِهِ الْأَسْوِدَةُ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ نَسَمُ بَنِيهِ فَأَهْلُ الْيَمِينِ أَهْلُ الْجَنَّةِ وَالْأَسْوِدَةُ الَّتِي عَنْ شِمَالِهِ أَهْلُ النَّارِ فَإِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى قَالَ ثُمَّ عَرَجَ بِي جِبْرِيلُ حَتَّى أَتَى السَّمَاءَ الثَّانِيَةَ فَقَالَ لِخَازِنِهَا افْتَحْ قَالَ فَقَالَ لَهُ خَازِنُهَا مِثْلَ مَا قَالَ خَازِنُ السَّمَاءِ الدُّنْيَا فَفَتَحَ فَقَالَ أَنَسُ بْنُ مَالِكٍ فَذَكَرَ أَنَّهُ وَجَدَ فِي السَّمَاوَاتِ آدَمَ وَإِدْرِيسَ وَعِيسَى وَمُوسَى وَإِبْرَاهِيمَ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمْ أَجْمَعِينَ وَلَمْ يُثْبِتْ كَيْفَ مَنَازِلُهُمْ غَيْرَ أَنَّهُ ذَكَرَ أَنَّهُ قَدْ وَجَدَ آدَمَ عَلَيْهِ السَّلَام فِي السَّمَاءِ الدُّنْيَا وَإِبْرَاهِيمَ فِي السَّمَاءِ السَّادِسَةِ قَالَ فَلَمَّا مَرَّ جِبْرِيلُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِدْرِيسَ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ قَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالْأَخِ الصَّالِحِ قَالَ ثُمَّ مَرَّ فَقُلْتُ مَنْ هَذَا فَقَالَ هَذَا إِدْرِيسُ قَالَ ثُمَّ مَرَرْتُ بِمُوسَى عَلَيْهِ السَّلَام فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالْأَخِ الصَّالِحِ قَالَ قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا مُوسَى قَالَ ثُمَّ مَرَرْتُ بِعِيسَى فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالْأَخِ الصَّالِحِ قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا عِيسَى ابْنُ مَرْيَمَ قَالَ ثُمَّ مَرَرْتُ بِإِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلَام فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالِابْنِ الصَّالِحِ قَالَ قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا إِبْرَاهِيمُ
قَالَ ابْنُ شِهَابٍ وَأَخْبَرَنِي ابْنُ حَزْمٍ أَنَّ ابْنَ عَبَّاسٍ وَأَبَا حَبَّةَ الْأَنْصَارِيَّ كَانَا يَقُولَانِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ عَرَجَ بِي حَتَّى ظَهَرْتُ لِمُسْتَوًى أَسْمَعُ فِيهِ صَرِيفَ الْأَقْلَامِ قَالَ ابْنُ حَزْمٍ وَأَنَسُ بْنُ مَالِكٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَفَرَضَ اللَّهُ عَلَى أُمَّتِي خَمْسِينَ صَلَاةً قَالَ فَرَجَعْتُ بِذَلِكَ حَتَّى أَمُرَّ بِمُوسَى فَقَالَ مُوسَى عَلَيْهِ السَّلَام مَاذَا فَرَضَ رَبُّكَ عَلَى أُمَّتِكَ قَالَ قُلْتُ فَرَضَ عَلَيْهِمْ خَمْسِينَ صَلَاةً قَالَ لِي مُوسَى عَلَيْهِ السَّلَام فَرَاجِعْ رَبَّكَ فَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ ذَلِكَ قَالَ فَرَاجَعْتُ رَبِّي فَوَضَعَ شَطْرَهَا قَالَ فَرَجَعْتُ إِلَى مُوسَى عَلَيْهِ السَّلَام فَأَخْبَرْتُهُ قَالَ رَاجِعْ رَبَّكَ فَإِنَّ أُمَّتَكَ لَا تُطِيقُ ذَلِكَ قَالَ فَرَاجَعْتُ رَبِّي فَقَالَ هِيَ خَمْسٌ وَهِيَ خَمْسُونَ لَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَيَّ قَالَ فَرَجَعْتُ إِلَى مُوسَى فَقَالَ رَاجِعْ رَبَّكَ فَقُلْتُ قَدْ اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي قَالَ ثُمَّ انْطَلَقَ بِي جِبْرِيلُ حَتَّى نَأْتِيَ سِدْرَةَ الْمُنْتَهَى فَغَشِيَهَا أَلْوَانٌ لَا أَدْرِي مَا هِيَ قَالَ ثُمَّ أُدْخِلْتُ الْجَنَّةَ فَإِذَا فِيهَا جَنَابِذُ اللُّؤْلُؤَ وَإِذَا تُرَابُهَا الْمِسْكُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் :
நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (வானவர்) ஜிப்ரீல் (அலை) இறங்கி வந்தார். என்னுடைய நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை ’ஸம்ஸம்’ நீரால் கழுவினார். பிறகு ஞானமும் இறைநம்பிக்கையும் நிரம்பிய, பொன்னாலான தாம்பாளத்தோடு என்னிடம் வந்து, அதிலிருந்து என் நெஞ்சினுள் ஊற்றி மூடினார்.
பிறகு என் கையைப் பிடித்துக் கொண்டு விண்ணில் ஏறினார். பூமியின் (முதல்) வானத்திற்கு நாங்கள் வந்தபோது முதல் வானக் காவலரிடம், “திறப்பீராக!” என்று ஜிப்ரீல் கூறினார். “யார்?” எனக் காவலர் கேட்டார். அவர் “(நான்)ஜிப்ரீல்” என்று ஜிப்ரீல் பதிலளித்தார். “உம்முடன் யாரேனும் வந்திருக்கிறார்களா?” என்று காவலர் கேட்டார். “என்னுடன் முஹம்மது வந்திருக்கின்றார்” என்று ஜிப்ரீல் பதிலளித்தார். “அவருக்கு ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று காவலர் கேட்க, ஜிப்ரீல் “ஆம்” என்று பதிலளித்தார். முதல் வானக் காவலர் திறந்தார். நாங்கள் முதல் வானத்துக்குள் உயர்ந்து சென்றபோது அங்கு தமக்கு வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் மக்கள் (பிரிந்து) புடைசூழ்ந்திருக்க ஒருவர் இருந்தார். அவர் தமது வலப்பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; இடப் பக்கம் பார்க்கும்போது அழுதார். (என்னைப் பார்த்ததும் அவர்,) “நற்குண நபிக்கு நல்வரவு! நற்குண மகனுக்கு நல்வரவு!” என்று என்னை வரவேற்றார். “இவர் யார் ஜிப்ரீலே?” என்று ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கேட்டேன். “இவர்தாம் (ஆதிமனிதர்) ஆதம். இவருடைய வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள், அன்னாரின் வழித்தோன்றல்கள். வலப்பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள்; இடப்பக்கமிருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான், அவர் வலப்பக்கம் பார்க்கும்போது சிரிக்கின்றார். இடப்பக்கம் பார்க்கும்போது அழுகின்றார்” என்று ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார்.
பிறகு ஜிப்ரீல் (அலை) என்னை அழைத்துக் கொண்டு இரண்டாம் வானம் வரும்வரை உயர்ந்தேறினார். இரண்டாம் வானம் வந்ததும் அதன் காவலரிடம் “திறப்பீராக!” என்று கூறினார். அதன் காவலரும் முதலாம் வானத்தின் காவலர் கேட்டதைப் போன்றே கேட்ட பின்னர் திறந்தார்.
oOo
இவ்வாறாக அபூதர் (ரலி) அறிவித்ததாக அனஸ் பின் மாலிக் (ரலி) கூறுகின்றார். தொடர்ந்து,
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஆதம் (அலை) அவர்களை முதல் வானத்திலும் இப்ராஹீம் (அலை) அவர்களை ஆறாவது வானத்திலும் கண்டதாக அபூதர் (ரலி) அறிவித்தார்களேயன்றி, ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), ஈஸா (அலை), மூஸா (அலை) மற்றும் இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்ட(க் கூடுதல்) விபரங்களை நிறுவவில்லை.
ஜிப்ரீல் (அலை) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இத்ரீஸ் (அலை) அவர்களைச் சென்றடைந்தபோது, “நற்குண நபிக்கு நல்வரவு! நற்குணச் சகோதரருக்கு நல்வரவு!” என்று இத்ரீஸ் (அலை) வரவேற்றார்கள். பிறகு (அவரைக்) கடக்கும்போது “இவர் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்க, “இவர்தாம் இத்ரீஸ்” என்று ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார் என்பதை அனஸ் (ரலி) அறிவிக்கிறார்.
oOo
நபி (ஸல்) கூறினார்கள் :
பின்னர் நான் மூஸா (அலை) அவர்களைச் சென்றடைந்தபோது அவர்களும், “நற்குண நபிக்கு நல்வரவு! நற்குணச் சகோதரருக்கு நல்வரவு!” என்று வரவேற்றார்கள். “இவர் யார்?” என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். “இவர்தாம் மூஸா” என்று ஜிப்ரீல் பதிலளித்தார். பிறகு நான் ஈஸா (அலை) அவர்களைச் சென்றடைந்தபோது அவர்களும், “நற்குண நபிக்கு நல்வரவு! நற்குணச் சகோதரருக்கு நல்வரவு!” என்று வரவேற்றார்கள். “இவர் யார்?” என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை), “இவர்தாம் மர்யமின் மகன் ஈஸா” என்று பதிலளித்தார். பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைச் சென்றடைந்தபோது அவர்கள், “நற்குண நபிக்கு நல்வரவு! நற்குண மகனுக்கு நல்வரவு!” என்று என்னை வரவேற்றார். “இவர் யார்?” என்று கேட்டேன். “இவர்தாம் இப்ராஹீம்” என்று ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார்.
oOo
இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹப்பா அல்-அன்சாரி (ரலி) ஆகிய இருவர் வழியாகச் செவியுற்று, இப்னு ஹஸ்மு (ரஹ்) இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்களுக்குக் கூறியதாவது :
“… பிறகு ஜிப்ரீல் (அலை) என்னை அழைத்துக் கொண்டு (இன்னும் மேலே) உயர்ந்தேறினார். ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்த போது எழுதுகோல்கள் கீறுகின்ற ஓசையைப்போல் செவியுற்றேன்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்.
அனஸ் பின் மாலிக்(ரலி), இப்னு ஹஸ்மு (ரஹ்) ஆகியோர் அறிவிப்பதாவது :
“…என் சமுதாயத்தார் மீது (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளை அல்லாஹ் கடமையாக்கினான். அதைப் பெற்றுக் கோண்டு நான் திரும்பி, மூஸா (அலை) அவர்களைக் கடந்தபோது மூஸா (அலை), “உங்கள் சமுதாயத்தார் மீது உங்கள் இறைவன் கடமையாக்கியது என்ன?” என்று கேட்டார்கள். நான், “அவர்கள் மீது (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான்” என்று பதிலளித்தேன். “அவ்வாறாயின் (எண்ணிக்கையைக் குறைக்க வேண்டி) உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்! ஏனெனில், உங்கள் சமுதாயத்தாரால் அவற்றைத் தாங்க முடியாது” என்று கூறினார்கள். நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்றேன். அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். நான் மூஸா (அலை) அவர்களிடம் திரும்பி வந்து (குறைப்பைத்) தெரிவித்தபோது (மீண்டும்) அவர்கள், “(இன்னும் குறைக்க வேண்டி) உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள். ஏனெனில், இதையும் உங்கள் சமுதாயத்தார் தாங்கமாட்டார்கள்” என்று சொன்னார்கள். இவ்வாறாக நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்றபோது, “(முடிவான) இவை ஐவேளைத் தொழுகைகளும் (நன்மைகளில்) ஐம்பது(வேளைத் தொழுகைகளு)க்கு ஈடுமாகும். இந்தச் சொல் என்னால் மாற்றப்படாது” என்று கூறிவிட்டான். நான் மூஸா (அலை) அவர்களிடம் திரும்பி வந்தேன். அவர்கள், “(இன்னும் குறைக்க வேண்டி) உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்!” என்றார்கள். “என் இறைவனிடம் (இன்னும் குறைத்துக் கேட்க) வெட்கப்படுகின்றேன்” என்று சொல்லிவிட்டேன்.
அதன் பின்னர், (வானின் உயரெல்லையில் உள்ள) ‘ஸித்ரத்துல் முன்தஹா’ எனும் இடத்திற்கு என்னை ஜிப்ரீல் அழைத்துச் சென்றார். அதை, இன்னவைதாம் என்று எனக்கு(ச் சொல்ல)த் தெரியாத பல வண்ணங்களைப் போர்த்திக் கொண்டிருந்தன. பிறகு நான் சொர்க்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டேன். அங்கு முத்தாலான கோபுரங்கள் இருந்தன. சொர்க்கத்தின் மண் (நறுமணம் கமழும்) கஸ்தூரியாக இருந்தது” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)