அத்தியாயம்: 15, பாடம்: 31, ஹதீஸ் எண்: 2178

‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وُهَيْبٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏
‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏
‏كَانُوا يَرَوْنَ أَنَّ الْعُمْرَةَ فِي أَشْهُرِ الْحَجِّ مِنْ أَفْجَرِ الْفُجُورِ فِي الْأَرْضِ وَيَجْعَلُونَ الْمُحَرَّمَ صَفَرًا وَيَقُولُونَ إِذَا
‏ ‏بَرَأَ ‏ ‏الدَّبَرْ وَعَفَا ‏ ‏الْأَثَرْ ‏ ‏وَانْسَلَخَ ‏ ‏صَفَرْ حَلَّتْ الْعُمْرَةُ لِمَنْ ‏ ‏اعْتَمَرْ فَقَدِمَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ ‏ ‏وَأَصْحَابُهُ صَبِيحَةَ رَابِعَةٍ ‏ ‏مُهِلِّينَ ‏ ‏بِالْحَجِّ ‏ ‏فَأَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً ‏ ‏فَتَعَاظَمَ ‏ ‏ذَلِكَ عِنْدَهُمْ
فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْحِلِّ قَالَ الْحِلُّ كُلُّهُ

அ(றியாமைக் காலத்த)வர்கள், ஹஜ்ஜுப் பருவ மாதங்களில் உம்ராச் செய்வது
பூமியில் நடக்கும் பாவங்களிலேயே மிகக் கொடிய பாவம் எனக் கருதியிருந்தனர்.
(துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள், போர் செய்யத் தடை
விதிக்கப்பட்ட புனித மாதங்களாக வழக்கில் இருந்ததால்) முஹர்ரம்
மாதத்திற்கான தடையை ஸஃபருக்கு மாற்றிக் கொள்வார்கள். (ஹஜ்
பயணத்திற்கான சுமையைச் சுமந்த ஒட்டகங்களின் முதுகில்) வடு மறைந்து,
காலடித் தடங்கள் அழிந்து, ஸஃபர் மாதம் கழிந்தால் உம்ராவை நாடியவர், உம்ராச் செய்யலாம் என்றும் அவர்கள் கூறிவந்தனர்.

நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காவது நாள்
காலை, ஹஜ்ஜுக்காக (மக்காவிற்கு) வந்தபோது, (தம் தோழர்களிடம்) அவர்களது
இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக் கொள்ளுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.
இது நபித்தோழர்களுக்கு மிகக் கடினமாகத் தெரிந்தது.

இதனால், “அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிலிருந்து விடுபடுவதால் எந்தச் செயல்கள் அனுமதிக்கப்படும்?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்), “எல்லாமும் அனுமதிக்கப்படும்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

Share this Hadith: