அத்தியாயம்: 15, பாடம்: 30, ஹதீஸ் எண்: 2177

‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُسْلِمٌ الْقُرِّيُّ ‏ ‏سَمِعَ ‏ ‏ابْنَ عَبَّاسٍ
‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏يَقُولُا ‏

‏أَهَلَّ ‏ ‏النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِعُمْرَةٍ ‏ ‏وَأَهَلَّ ‏ ‏أَصْحَابُهُ بِحَجٍّ فَلَمْ يَحِلَّ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ ‏ ‏وَلَا مَنْ سَاقَ ‏ ‏الْهَدْيَ ‏ ‏مِنْ أَصْحَابِهِ وَحَلَّ بَقِيَّتُهُمْ فَكَانَ ‏ ‏طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ ‏ ‏فِيمَنْ سَاقَ ‏ ‏الْهَدْيَ
‏ ‏فَلَمْ يَحِلَّ ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدٌ يَعْنِي ابْنَ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ
‏ ‏وَكَانَ مِمَّنْ لَمْ يَكُنْ مَعَهُ ‏ ‏الْهَدْيُ ‏ ‏طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ ‏ ‏وَرَجُلٌ آخَرُ فَأَحَلَّا

நபி (ஸல்) உம்ராவிற்காகத் தல்பியாச் சொன்னார்கள். அவர்களுடைய தோழர்கள்
ஹஜ்ஜுக்காகத் தல்பியாச் சொன்னார்கள். நபி (ஸல்) இஹ்ராமிலிருந்து
விடுபடவில்லை; அவர்களுடைய தோழர்களில் தம்முடன் பலிப் பிராணியைக்
கொண்டு வந்தவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. மற்றவர்கள்
இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். பலிப் பிராணியைக் கொண்டு வந்தவர்களுள்
தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களும் ஒருவராக இருந்ததால்
அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)


குறிப்பு :

முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பில், “தம்மிடம் பலிப் பிராணி
இல்லாதவர்களுள் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களும்
மற்றொருவரும் இருந்தனர். எனவே, அவர்கள் இருவரும் இஹ்ராமிலிருந்து
விடுபட்டனர்” என்று இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: