அத்தியாயம்: 15, பாடம்: 81, ஹதீஸ் எண்: 2409

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ ‏ ‏يَقُولُ لِجُلَسَائِهِ مَا سَمِعْتُمْ فِي سُكْنَى ‏ ‏مَكَّةَ ‏ ‏فَقَالَ ‏ ‏السَّائِبُ بْنُ يَزِيدَ ‏ ‏سَمِعْتُ ‏ ‏الْعَلَاءَ ‏ ‏أَوْ قَالَ ‏ ‏الْعَلَاءَ بْنَ الْحَضْرَمِيِّ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُقِيمُ ‏ ‏الْمُهَاجِرُ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏بَعْدَ ‏ ‏قَضَاءِ ‏ ‏نُسُكِهِ ‏ ‏ثَلَاثًا

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) தம் அவையோரிடம், “மக்காவில் (முஹாஜிர், ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு) தங்குவது பற்றி நீங்கள் என்ன செவியுற்றுள்ளீர்கள்?” என்று கேட்டார். அப்போது (அங்கிருந்த) ஸாயிப் பின் யஸீத் (ரலி), “முஹாஜிர் தமது (ஹஜ்) கிரியைகளை நிறைவேற்றிவிட்டு மக்காவில் மூன்று இரவுகள் தங்கலாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்று அலாஉ பின் அல் ஹள்ரமீ (ரலி) சொல்ல நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஸாயிப் பின் யஸீத் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் ஹுமைத் (ரஹ்)

Share this Hadith: