حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ حَدَّثَنَا سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حُمَيْدٍ أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ يَسْأَلُ السَّائِبَ بْنَ يَزِيدَ يَقُولُ هَلْ سَمِعْتَ فِي الْإِقَامَةِ بِمَكَّةَ شَيْئًا فَقَالَ السَّائِبُ سَمِعْتُ الْعَلَاءَ بْنَ الْحَضْرَمِيِّ يَقُولُ:
سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لِلْمُهَاجِرِ إِقَامَةُ ثَلَاثٍ بَعْدَ الصَّدَرِ بِمَكَّةَ
كَأَنَّهُ يَقُولُ لَا يَزِيدُ عَلَيْهَا
ஸாயிப் பின் யஸீத் (ரலி) அவர்களிடம் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்), “மக்காவில் (ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு, மினாவிலிருந்து திரும்பிய பிறகு) முஹாஜிர் தங்குவது பற்றி (ஹதீஸ்) எதையேனும் செவியுற்றுள்ளீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு ஸாயிப் (ரலி), “முஹாஜிர் (மினாவிலிருந்து) திரும்பிய பிறகு மூன்று இரவுகள் மக்காவில் தங்க அனுமதி உண்டு என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்று அலாஉ பின் அல்ஹள்ரமீ (ரலி) சொல்ல நான் கேட்டுள்ளேன்” என்றார்கள். அதில், “அதைவிட அதிகமாக்கக் கூடாது” என்று சொன்னதைப் போன்ற தொனி இருந்தது.
அறிவிப்பாளர் : ஸாயிப் பின் யஸீத் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் ஹுமைத் (ரஹ்)