அத்தியாயம்: 3, பாடம்: 04, ஹதீஸ் எண்: 458

و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ ‏
‏أَرْسَلْنَا ‏ ‏الْمِقْدَادَ بْنَ الْأَسْوَدِ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَسَأَلَهُ عَنْ ‏ ‏الْمَذْيِ ‏ ‏يَخْرُجُ مِنْ الْإِنْسَانِ كَيْفَ يَفْعَلُ بِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَوَضَّأْ ‏ ‏وَانْضَحْ ‏ ‏فَرْجَكَ ‏

“மனிதனிலிருந்து வெளியாகும் இச்சை நீர் (மதீ) குறித்து, அது கசிந்தால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்பதற்காக மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தோம். அதற்கு, “அங்கத் தூய்மை (உளூ) செய்து கொள்ளுங்கள்; ஆணுறுப்பில் தண்ணீர் ஊற்றி(க் கழுவி)விடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அலீ பின் அபீதாலிப் (ரலி).

அத்தியாயம்: 3, பாடம்: 04, ஹதீஸ் எண்: 457

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سُلَيْمَانُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُنْذِرًا ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏أَنَّهُ قَالَ ‏
‏اسْتَحْيَيْتُ أَنْ أَسْأَلَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْمَذْيِ ‏ ‏مِنْ أَجْلِ ‏ ‏فَاطِمَةَ ‏ ‏فَأَمَرْتُ ‏ ‏الْمِقْدَادَ ‏ ‏فَسَأَلَهُ فَقَالَ ‏ ‏مِنْهُ الْوُضُوءُ ‏

நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா என் மனைவியாதலால் இச்சை நீர் (மதீ) பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்க வெட்கப் பட்டேன். எனவே, நான் மிக்தாத் (ரலி) அவர்களிடம் (இது பற்றிக் கேட்கச்) சொன்னேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், “அங்கத் தூய்மை (உளூ) செய்தல் வேண்டும் (குளிக்கத் தேவையில்லை)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அலீ பின் அபீதாலிப் (ரலி).

அத்தியாயம்: 3, பாடம்: 04, ஹதீஸ் எண்: 456

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏وَأَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَهُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏مُنْذِرِ بْنِ يَعْلَى وَيُكْنَى أَبَا يَعْلَى ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْحَنَفِيَّةِ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏قَالَ ‏
‏كُنْتُ رَجُلًا مَذَّاءً وَكُنْتُ ‏ ‏أَسْتَحْيِي أَنْ أَسْأَلَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِمَكَانِ ابْنَتِهِ فَأَمَرْتُ ‏ ‏الْمِقْدَادَ بْنَ الْأَسْوَدِ ‏ ‏فَسَأَلَهُ فَقَالَ ‏ ‏يَغْسِلُ ذَكَرَهُ وَيَتَوَضَّأُ ‏

அடிக்கடி இச்சை நீர் (மதீ) வெளிப்படுபவனாக நானிருந்தேன். நபி (ஸல்) அவர்களின் மகள் என் மனைவியாதலால் இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்க வெட்கப்பட்டதால் மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களிடம் (இதைக் குறித்து நபியவர்களிடம் கேட்குமாறு) கூறினேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆணுறுப்பைக் கழுவிக் கொண்டு அங்கத் தூய்மை (உளூ) செய்து கொள்ளலாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அலீ பின் அபீதாலிப் (ரலி).