அத்தியாயம்: 5, பாடம்: 42, ஹதீஸ் எண்: 1029

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عِمْرَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي ذَرٍّ ‏ ‏قَالَ ‏

إِنَّ خَلِيلِي أَوْصَانِي ‏ ‏أَنْ أَسْمَعَ وَأُطِيعَ وَإِنْ كَانَ عَبْدًا ‏ ‏مُجَدَّعَ ‏ ‏الْأَطْرَافِ وَأَنْ أُصَلِّيَ الصَّلَاةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكْتَ الْقَوْمَ وَقَدْ صَلَّوْا كُنْتَ قَدْ ‏ ‏أَحْرَزْتَ ‏ ‏صَلَاتَكَ وَإِلَّا كَانَتْ لَكَ نَافِلَةً

என் உற்ற தோழர் (நபி-ஸல்) அவர்கள் என்னிடம் “(உன் தலைவருடைய சொல்லைச்) செவியேற்று அதற்குக் கட்டுப்பட வேண்டும்; அவர் (கை, கால்) உறுப்புகள் துண்டிக்கப்பட்ட அடிமையாக இருந்தாலும்” என்றும் “தொழுகையை உரிய நேரத்தில் தொழ வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார்கள். பின்னர் “தொழுது முடித்துவிட்ட நிலையில் மக்களை நீ் அடைந்தால், (முன்பே தொழுதுவிட்ட) உனது தொழுகையைக் காப்பாற்றிக் கொண்டாய். அவ்வாறின்றி (அவர்களுடன் சேர்ந்து நீ மறுபடியும் தொழுதால்) அது உனக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகை ஆகிவிடும்” என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூதர் (ரலி)

Share this Hadith:

Leave a Comment