அத்தியாயம்: 1, பாடம்: 1.10, ஹதீஸ் எண்: 47

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏
‏أَنَّ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَمُعَاذُ بْنُ جَبَلٍ ‏ ‏رَدِيفُهُ ‏ ‏عَلَى ‏ ‏الرَّحْلِ ‏ ‏قَالَ يَا ‏ ‏مُعَاذُ ‏ ‏قَالَ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ قَالَ يَا ‏ ‏مُعَاذُ ‏ ‏قَالَ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ قَالَ يَا ‏ ‏مُعَاذُ ‏ ‏قَالَ لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ قَالَ ‏ ‏مَا مِنْ عَبْدٍ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ ‏ ‏مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ‏ ‏إِلَّا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ قَالَ يَا رَسُولَ اللَّهِ أَفَلَا أُخْبِرُ بِهَا النَّاسَ فَيَسْتَبْشِرُوا قَالَ إِذًا يَتَّكِلُوا ‏
‏فَأَخْبَرَ بِهَا ‏ ‏مُعَاذٌ ‏ ‏عِنْدَ مَوْتِهِ ‏ ‏تَأَثُّمًا

நபி (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தில்) தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்த முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை “முஆத்!” என்று அழைத்தார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)” என்று முஆத் (ரலி) வேண்டினார். மீண்டும், “முஆத்!” என்று அழைத்தார்கள், “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)” என்று முஆத் (ரலி) வேண்டினார். மீண்டும், “முஆத்!” என்று அழைத்தார்கள், “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)” என்று முஆத் (ரலி) வேண்டினார்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், “வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதி கூறுகின்ற எந்த அடியாருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள்.

முஆத் (ரலி) அவர்கள். “அல்லாஹ்வின் தூதரே! இதை நான் மக்களுக்கு அறிவித்து விடட்டுமா? (இதைக் கேட்டு அவர்கள்) மகிழ்ச்சி அடைவார்களே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” (வேண்டாம்) இவ்வாறு நீர் அறிவித்தால் மக்கள் இந்த ஒன்றையே சார்ந்து (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்கள்” என்று கூறினார்கள்.

(கல்வியை மறைத்த) குற்றத்திலிருந்து தப்புவதற்காகத் தமது மரணத் தருவாயில்தான் இதை முஆத் (ரலி) அவர்கள் (மக்களிடையே) அறிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

Share this Hadith:

Leave a Comment