அத்தியாயம்: 1, பாடம்: 32, ஹதீஸ் எண்: 104

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏صَالِحِ بْنِ كَيْسَانَ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ ‏ ‏قَالَ ‏
‏صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏صَلَاةَ الصُّبْحِ ‏ ‏بِالْحُدَيْبِيَةِ ‏ ‏فِي إِثْرِ السَّمَاءِ كَانَتْ مِنْ اللَّيْلِ فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ قَالَ ‏ ‏أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ فَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ بِي كَافِرٌ بِالْكَوْكَبِ وَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِنَوْءِ كَذَا وَكَذَا فَذَلِكَ كَافِرٌ بِي مُؤْمِنٌ بِالْكَوْكَبِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹுதைபியா’ எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது; வானில் அதன் அடையாளம் இன்னும் மிச்சமிருந்தது.

தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, “உங்கள் இறைவன் என்ன சொன்னான் என்று நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று கூறினர். “என் அடியார்களில் என்னை நம்பக் கூடியவரும் உள்ளனர்; (என்னை) மறுக்கக் கூடியவரும் உள்ளனர். ‘அல்லாஹ்வின் அருளாலும் தயவாலும்தான் நமக்கு மழை பொழிந்தது’ எனக் கூறியவர்கள் என்னை நம்பி, கிரகப் பயன்களை மறுத்தவர்களாவார்.

’இன்ன இன்ன வானிலை (கிரக) மாற்றங்களால்தான் நமக்கு மழை பொழிந்தது எனக் கூறியவர்களோ என்னை மறுத்து கிரகப் பயன்களை நம்பியவர்கள் ஆவர்’ என அல்லாஹ் சொன்னான்” என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் காலித் அல்-ஜுஹ்னீ (ரலி).

Share this Hadith:

Leave a Comment