و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ وَاصِلٍ الْأَحْدَبِ عَنْ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ قَالَ :
سَمِعْتُ أَبَا ذَرٍّ يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فَبَشَّرَنِي أَنَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِكَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ
என்னிடம் (வானவர் ) ஜிப்ரீல் (அலை) வந்து, “உங்கள் சமுதாயத்தைச் சார்ந்தோரில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் இறந்து விடுபவர் சொர்க்கம் செல்வார்” என்று நற்செய்தி கூறினார்.
உடனே நான், “அவர் விபச்சாரம் செய்திருந்தாலும் திருடி இருந்தாலுமா?” என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல், “அவர் விபச்சாரம் செய்திருந்தாலும் திருடியிருந்தாலும் (தவறுக்கு உரிய தண்டனை அனுபவித்த பின் இறைவன் நாடினால் சொர்க்கம் செல்வார்)” என்று பதிலளித்தார் என்று அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூதர் (ரலி) வழியாக அல் மஅரூர் பின் ஸுவைத் (ரஹ்)