حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ عَنْ الْعَلَاءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ
عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ إِذَا هَمَّ عَبْدِي بِحَسَنَةٍ وَلَمْ يَعْمَلْهَا كَتَبْتُهَا لَهُ حَسَنَةً فَإِنْ عَمِلَهَا كَتَبْتُهَا عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ وَإِذَا هَمَّ بِسَيِّئَةٍ وَلَمْ يَعْمَلْهَا لَمْ أَكْتُبْهَا عَلَيْهِ فَإِنْ عَمِلَهَا كَتَبْتُهَا سَيِّئَةً وَاحِدَةً
“என் அடியான் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி அதைச் செய்யாமல் இருந்து விட்டாலும் அதை ஒரு நன்மையாகவே நான் பதிவு செய்வேன். அவன் (எண்ணியவாறு) அந்த நன்மையை செயல்படுத்தி விட்டால் அதை நான் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மையாகப் பதிவு செய்வேன். அவன் ஒரு தீமையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யவில்லை என்றால், அதை நான் ஒரு தீமையாகப் பதிவு செய்வதில்லை. அவன் (எண்ணியவாறு) அந்தத் தீமையை செய்து விட்டால் அதை ஒரேயொரு தீமையாகப் பதிவு செய்வேன் என்று மாண்பும் வல்லமையுமிக்க அல்லாஹ் கூறினான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி).