حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ عَنْ الْجَعْدِ أَبِي عُثْمَانَ حَدَّثَنَا أَبُو رَجَاءٍ الْعُطَارِدِيُّ عَنْ ابْنِ عَبَّاسٍ :
عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ تَبَارَكَ وَتَعَالَى قَالَ إِنَّ اللَّهَ كَتَبَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ ثُمَّ بَيَّنَ ذَلِكَ فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً وَإِنْ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ عَزَّ وَجَلَّ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِ مِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ وَإِنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً وَإِنْ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ سَيِّئَةً وَاحِدَةً
و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ عَنْ الْجَعْدِ أَبِي عُثْمَانَ فِي هَذَا الْإِسْنَادِ بِمَعْنَى حَدِيثِ عَبْدِ الْوَارِثِ وَزَادَ وَمَحَاهَا اللَّهُ وَلَا يَهْلِكُ عَلَى اللَّهِ إِلَّا هَالِكٌ
“நன்மைகளையும் தீமைகளையும் அல்லாஹ் (வரையறுத்து) விதி செய்து, பின்னர் அவற்றை விளக்கி விட்டான். ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என நினைத்துவிட்டவருக்கு, அதைச் செய்யாவிட்டாலும் ஒரு முழுமையான நன்மையாக அதை அல்லாஹ் பதிவு செய்கின்றான். ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என நினைத்து, அதைச் செய்தும் முடித்துவிட்டால் அதை அவருக்குப் பத்து முதல் எழுநூறு மடங்காக, இன்னும் பல மடங்குகளாகப் பதிவு செய்கின்றான். ஒரு தீமையைச் செய்ய நினைத்து, (அல்லாஹ்வின் அச்சமேற்பட்டு) அதைச் செய்யாதவருக்கு அதை ஒரு முழு நன்மையாகப் பதிவு செய்கிறான். நினைத்தவாறு அவர் செய்து முடித்தால் ஒரு தீமையாக (மட்டுமே) பதிவு செய்கின்றான்” என்று மிக்குயர்ந்தோனும் வளங்களுக்கு உரியவனுமான தம் இறைவனைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)
குறிப்பு:
அப்துல் வாரிஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “விரிந்து-பரந்து கிடக்கும் அல்லாஹ்வின் அருளை அள்ளிக் கொள்ளாமல் அலட்சியப் படுத்தியவன் அழிந்து விடுவான்” என்று அவரது கருத்துப் பதிவாகியுள்ளது.