அத்தியாயம்: 1, பாடம்: 68, ஹதீஸ் எண்: 214

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ :‏
قَسَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَسْمًا فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَعْطِ فُلاَنًا فَإِنَّهُ مُؤْمِنٌ ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ أَوْ مُسْلِمٌ ‏”‏ أَقُولُهَا ثَلاَثًا ‏.‏ وَيُرَدِّدُهَا عَلَىَّ ثَلاَثًا ‏”‏ أَوْ مُسْلِمٌ ‏”‏ ثُمَّ قَالَ ‏”‏ إِنِّي لأُعْطِي الرَّجُلَ وَغَيْرُهُ أَحَبُّ إِلَىَّ مِنْهُ مَخَافَةَ أَنْ يَكُبَّهُ اللَّهُ فِي النَّارِ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பங்கிட்டுக் கொண்டிருந்த ஒரு பங்கீட்டின்போது, “அல்லாஹ்வின் தூதரே! அவருக்குக் கொடுங்கள். அவர் ஒரு முஃமின்” என்று (ஒருவரைச் சுட்டிச்) சொன்னேன். “அவரை முஸ்லிம் என்று சொல்லுங்கள்” என்று நபி (ஸல்) (திருத்தம்) கூறினார்கள். நான் கூறியதையே மும்முறை கூறினேன். நபி (ஸல்) அவர்களும் திருத்தியதைப் போன்றே மும்முறை திருத்தினார்கள்.

பின்னர், “நான் அதிகம் விரும்புகின்ற ஒருவரை விடுத்து வேறொருவருக்குக் (காரணத்தோடுதான்) கொடுக்கிறேன். ஏனெனில், (வறுமையினால் குற்றமிழைத்து, அதனால்) அவரை அல்லாஹ் நரகத்தில் குப்புறத் தள்ளி விடுவானோ எனும் அச்சத்தினால்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment