அத்தியாயம்: 1, பாடம்: 81, ஹதீஸ் எண்: 269

و حَدَّثَنِي ‏ ‏سُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏حَفْصُ بْنُ مَيْسَرَةَ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏
‏أَنَّ نَاسًا فِي زَمَنِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالُوا يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَعَمْ قَالَ ‏ ‏هَلْ ‏ ‏تُضَارُّونَ ‏ ‏فِي رُؤْيَةِ الشَّمْسِ بِالظَّهِيرَةِ صَحْوًا لَيْسَ مَعَهَا سَحَابٌ وَهَلْ ‏ ‏تُضَارُّونَ ‏ ‏فِي رُؤْيَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ صَحْوًا لَيْسَ فِيهَا سَحَابٌ قَالُوا لَا يَا رَسُولَ اللَّهِ قَالَ مَا ‏ ‏تُضَارُّونَ ‏ ‏فِي رُؤْيَةِ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى يَوْمَ الْقِيَامَةِ إِلَّا كَمَا ‏ ‏تُضَارُّونَ ‏ ‏فِي رُؤْيَةِ أَحَدِهِمَا إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ أَذَّنَ مُؤَذِّنٌ لِيَتَّبِعْ كُلُّ أُمَّةٍ مَا كَانَتْ تَعْبُدُ فَلَا يَبْقَى أَحَدٌ كَانَ يَعْبُدُ غَيْرَ اللَّهِ سُبْحَانَهُ مِنْ الْأَصْنَامِ وَالْأَنْصَابِ إِلَّا يَتَسَاقَطُونَ فِي النَّارِ حَتَّى إِذَا لَمْ يَبْقَ إِلَّا مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ مِنْ بَرٍّ وَفَاجِرٍ وَغُبَّرِ ‏ ‏أَهْلِ الْكِتَابِ ‏ ‏فَيُدْعَى ‏ ‏الْيَهُودُ ‏ ‏فَيُقَالُ لَهُمْ مَا كُنْتُمْ تَعْبُدُونَ قَالُوا كُنَّا نَعْبُدُ ‏ ‏عُزَيْرَ ‏ ‏ابْنَ اللَّهِ فَيُقَالُ كَذَبْتُمْ مَا اتَّخَذَ اللَّهُ مِنْ صَاحِبَةٍ وَلَا وَلَدٍ فَمَاذَا ‏ ‏تَبْغُونَ ‏ ‏قَالُوا عَطِشْنَا يَا رَبَّنَا فَاسْقِنَا فَيُشَارُ إِلَيْهِمْ أَلَا تَرِدُونَ فَيُحْشَرُونَ إِلَى النَّارِ كَأَنَّهَا سَرَابٌ ‏ ‏يَحْطِمُ ‏ ‏بَعْضُهَا بَعْضًا فَيَتَسَاقَطُونَ فِي النَّارِ ثُمَّ يُدْعَى ‏ ‏النَّصَارَى ‏ ‏فَيُقَالُ لَهُمْ مَا كُنْتُمْ تَعْبُدُونَ قَالُوا كُنَّا نَعْبُدُ ‏ ‏الْمَسِيحَ ‏ ‏ابْنَ اللَّهِ فَيُقَالُ لَهُمْ كَذَبْتُمْ مَا اتَّخَذَ اللَّهُ مِنْ صَاحِبَةٍ وَلَا وَلَدٍ فَيُقَالُ لَهُمْ مَاذَا تَبْغُونَ فَيَقُولُونَ عَطِشْنَا يَا رَبَّنَا فَاسْقِنَا قَالَ فَيُشَارُ إِلَيْهِمْ أَلَا تَرِدُونَ فَيُحْشَرُونَ إِلَى جَهَنَّمَ كَأَنَّهَا سَرَابٌ يَحْطِمُ بَعْضُهَا بَعْضًا فَيَتَسَاقَطُونَ فِي النَّارِ حَتَّى إِذَا لَمْ يَبْقَ إِلَّا مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ تَعَالَى مِنْ ‏ ‏بَرٍّ ‏ ‏وَفَاجِرٍ أَتَاهُمْ رَبُّ الْعَالَمِينَ سُبْحَانَهُ وَتَعَالَى فِي أَدْنَى صُورَةٍ مِنْ الَّتِي رَأَوْهُ فِيهَا قَالَ فَمَا تَنْتَظِرُونَ تَتْبَعُ كُلُّ أُمَّةٍ مَا كَانَتْ تَعْبُدُ قَالُوا يَا رَبَّنَا فَارَقْنَا النَّاسَ فِي الدُّنْيَا أَفْقَرَ مَا كُنَّا إِلَيْهِمْ وَلَمْ نُصَاحِبْهُمْ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ فَيَقُولُونَ نَعُوذُ بِاللَّهِ مِنْكَ لَا نُشْرِكُ بِاللَّهِ شَيْئًا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا حَتَّى إِنَّ بَعْضَهُمْ لَيَكَادُ أَنْ ‏ ‏يَنْقَلِبَ ‏ ‏فَيَقُولُ هَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُ ‏ ‏آيَةٌ ‏ ‏فَتَعْرِفُونَهُ بِهَا فَيَقُولُونَ نَعَمْ فَيُكْشَفُ عَنْ سَاقٍ فَلَا يَبْقَى مَنْ كَانَ يَسْجُدُ لِلَّهِ مِنْ تِلْقَاءِ نَفْسِهِ إِلَّا أَذِنَ اللَّهُ لَهُ بِالسُّجُودِ وَلَا يَبْقَى مَنْ كَانَ يَسْجُدُ اتِّقَاءً وَرِيَاءً إِلَّا جَعَلَ اللَّهُ ظَهْرَهُ ‏ ‏طَبَقَةً ‏ ‏وَاحِدَةً كُلَّمَا أَرَادَ أَنْ يَسْجُدَ ‏ ‏خَرَّ ‏ ‏عَلَى ‏ ‏قَفَاهُ ‏ ‏ثُمَّ يَرْفَعُونَ رُءُوسَهُمْ وَقَدْ تَحَوَّلَ فِي صُورَتِهِ الَّتِي رَأَوْهُ فِيهَا أَوَّلَ مَرَّةٍ فَقَالَ أَنَا رَبُّكُمْ فَيَقُولُونَ أَنْتَ رَبُّنَا ثُمَّ ‏ ‏يُضْرَبُ ‏ ‏الْجِسْرُ عَلَى جَهَنَّمَ ‏ ‏وَتَحِلُّ ‏ ‏الشَّفَاعَةُ وَيَقُولُونَ اللَّهُمَّ سَلِّمْ سَلِّمْ قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْجِسْرُ قَالَ ‏ ‏دَحْضٌ ‏ ‏مَزِلَّةٌ فِيهِ ‏ ‏خَطَاطِيفُ ‏ ‏وَكَلَالِيبُ ‏ ‏وَحَسَكٌ ‏ ‏تَكُونُ ‏ ‏بِنَجْدٍ ‏ ‏فِيهَا ‏ ‏شُوَيْكَةٌ يُقَالُ لَهَا ‏ ‏السَّعْدَانُ ‏ ‏فَيَمُرُّ الْمُؤْمِنُونَ كَطَرْفِ الْعَيْنِ وَكَالْبَرْقِ وَكَالرِّيحِ وَكَالطَّيْرِ ‏ ‏وَكَأَجَاوِيدِ ‏ ‏الْخَيْلِ ‏ ‏وَالرِّكَابِ ‏ ‏فَنَاجٍ مُسَلَّمٌ وَمَخْدُوشٌ مُرْسَلٌ ‏ ‏وَمَكْدُوسٌ ‏ ‏فِي نَارِ جَهَنَّمَ حَتَّى إِذَا خَلَصَ الْمُؤْمِنُونَ مِنْ النَّارِ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ بِأَشَدَّ مُنَاشَدَةً لِلَّهِ فِي ‏ ‏اسْتِقْصَاءِ ‏ ‏الْحَقِّ مِنْ الْمُؤْمِنِينَ لِلَّهِ يَوْمَ الْقِيَامَةِ لِإِخْوَانِهِمْ الَّذِينَ فِي النَّارِ يَقُولُونَ رَبَّنَا كَانُوا يَصُومُونَ مَعَنَا وَيُصَلُّونَ وَيَحُجُّونَ فَيُقَالُ لَهُمْ أَخْرِجُوا مَنْ عَرَفْتُمْ فَتُحَرَّمُ صُوَرُهُمْ عَلَى النَّارِ فَيُخْرِجُونَ خَلْقًا كَثِيرًا قَدْ أَخَذَتْ النَّارُ إِلَى نِصْفِ سَاقَيْهِ وَإِلَى رُكْبَتَيْهِ ثُمَّ يَقُولُونَ رَبَّنَا مَا بَقِيَ فِيهَا أَحَدٌ مِمَّنْ أَمَرْتَنَا بِهِ فَيَقُولُ ارْجِعُوا فَمَنْ وَجَدْتُمْ فِي قَلْبِهِ مِثْقَالَ دِينَارٍ مِنْ خَيْرٍ فَأَخْرِجُوهُ فَيُخْرِجُونَ خَلْقًا كَثِيرًا ثُمَّ يَقُولُونَ رَبَّنَا لَمْ ‏ ‏نَذَرْ ‏ ‏فِيهَا أَحَدًا مِمَّنْ أَمَرْتَنَا ثُمَّ يَقُولُ ارْجِعُوا فَمَنْ وَجَدْتُمْ فِي قَلْبِهِ مِثْقَالَ نِصْفِ دِينَارٍ مِنْ خَيْرٍ فَأَخْرِجُوهُ فَيُخْرِجُونَ خَلْقًا كَثِيرًا ثُمَّ يَقُولُونَ رَبَّنَا لَمْ ‏ ‏نَذَرْ ‏ ‏فِيهَا مِمَّنْ أَمَرْتَنَا أَحَدًا ثُمَّ يَقُولُ ارْجِعُوا فَمَنْ وَجَدْتُمْ فِي قَلْبِهِ مِثْقَالَ ذَرَّةٍ مِنْ خَيْرٍ فَأَخْرِجُوهُ فَيُخْرِجُونَ خَلْقًا كَثِيرًا ثُمَّ يَقُولُونَ رَبَّنَا لَمْ ‏ ‏نَذَرْ ‏ ‏فِيهَا خَيْرًا وَكَانَ ‏ ‏أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ ‏ ‏يَقُولُ إِنْ لَمْ تُصَدِّقُونِي بِهَذَا الْحَدِيثِ فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ ‏
‏إِنَّ اللَّهَ لَا يَظْلِمُ مِثْقَالَ ذَرَّةٍ وَإِنْ تَكُ حَسَنَةً يُضَاعِفْهَا وَيُؤْتِ مِنْ لَدُنْهُ أَجْرًا عَظِيمًا ‏

‏فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ شَفَعَتْ الْمَلَائِكَةُ وَشَفَعَ النَّبِيُّونَ وَشَفَعَ الْمُؤْمِنُونَ وَلَمْ يَبْقَ إِلَّا أَرْحَمُ الرَّاحِمِينَ فَيَقْبِضُ قَبْضَةً مِنْ النَّارِ فَيُخْرِجُ مِنْهَا قَوْمًا لَمْ يَعْمَلُوا خَيْرًا قَطُّ قَدْ ‏ ‏عَادُوا ‏ ‏حُمَمًا ‏ ‏فَيُلْقِيهِمْ فِي نَهَرٍ فِي أَفْوَاهِ الْجَنَّةِ يُقَالُ لَهُ نَهَرُ الْحَيَاةِ فَيَخْرُجُونَ كَمَا تَخْرُجُ الْحِبَّةُ فِي ‏ ‏حَمِيلِ ‏ ‏السَّيْلِ أَلَا تَرَوْنَهَا تَكُونُ إِلَى الْحَجَرِ أَوْ إِلَى الشَّجَرِ مَا يَكُونُ إِلَى الشَّمْسِ ‏ ‏أُصَيْفِرُ وَأُخَيْضِرُ وَمَا يَكُونُ مِنْهَا إِلَى الظِّلِّ يَكُونُ أَبْيَضَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ كَأَنَّكَ كُنْتَ ‏ ‏تَرْعَى بِالْبَادِيَةِ قَالَ فَيَخْرُجُونَ كَاللُّؤْلُؤِ فِي رِقَابِهِمْ الْخَوَاتِمُ يَعْرِفُهُمْ أَهْلُ الْجَنَّةِ هَؤُلَاءِ عُتَقَاءُ اللَّهِ الَّذِينَ أَدْخَلَهُمْ اللَّهُ الْجَنَّةَ بِغَيْرِ عَمَلٍ عَمِلُوهُ وَلَا خَيْرٍ قَدَّمُوهُ ثُمَّ يَقُولُ ادْخُلُوا الْجَنَّةَ فَمَا رَأَيْتُمُوهُ فَهُوَ لَكُمْ فَيَقُولُونَ رَبَّنَا أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ الْعَالَمِينَ فَيَقُولُ لَكُمْ عِنْدِي أَفْضَلُ مِنْ هَذَا فَيَقُولُونَ يَا رَبَّنَا أَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ هَذَا فَيَقُولُ رِضَايَ فَلَا أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا ‏
‏قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏قَرَأْتُ عَلَى ‏ ‏عِيسَى بْنِ حَمَّادٍ زُغْبَةَ الْمِصْرِيِّ ‏ ‏هَذَا الْحَدِيثَ فِي الشَّفَاعَةِ وَقُلْتُ لَهُ أُحَدِّثُ بِهَذَا الْحَدِيثِ عَنْكَ أَنَّكَ ‏ ‏سَمِعْتَ مِنَ ‏ ‏اللَّيْثِ بْنِ سَعْدٍ ‏ ‏فَقَالَ نَعَمْ قُلْتُ ‏ ‏لِعِيسَى بْنِ حَمَّادٍ ‏ ‏أَخْبَرَكُمُ ‏ ‏اللَّيْثُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدِ بْنِ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏أَنَّهُ قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ ‏ ‏أَنَرَى رَبَّنَا قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏هَلْ ‏ ‏تُضَارُّونَ ‏ ‏فِي رُؤْيَةِ الشَّمْسِ إِذَا كَانَ يَوْمٌ صَحْوٌ قُلْنَا لَا وَسُقْتُ الْحَدِيثَ حَتَّى انْقَضَى آخِرُهُ وَهُوَ نَحْوُ حَدِيثِ ‏ ‏حَفْصِ بْنِ مَيْسَرَةَ ‏ ‏وَزَادَ بَعْدَ قَوْلِهِ بِغَيْرِ عَمَلٍ عَمِلُوهُ وَلَا قَدَمٍ قَدَّمُوهُ فَيُقَالُ لَهُمْ لَكُمْ مَا رَأَيْتُمْ وَمِثْلُهُ مَعَهُ قَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏بَلَغَنِي أَنَّ الْجِسْرَ أَدَقُّ مِنْ الشَّعْرَةِ وَأَحَدُّ مِنْ السَّيْفِ وَلَيْسَ فِي حَدِيثِ ‏ ‏اللَّيْثِ ‏ ‏فَيَقُولُونَ رَبَّنَا أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ الْعَالَمِينَ وَمَا بَعْدَهُ فَأَقَرَّ بِهِ ‏ ‏عِيسَى بْنُ حَمَّادٍ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَعْفَرُ بْنُ عَوْنٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَيْدُ بْنُ أَسْلَمَ ‏ ‏بِإِسْنَادِهِمَا ‏ ‏نَحْوَ حَدِيثِ ‏ ‏حَفْصِ بْنِ مَيْسَرَةَ ‏ ‏إِلَى آخِرِهِ وَقَدْ زَادَ وَنَقَصَ شَيْئًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் சிலர், “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம் (காண்பீர்கள்); மேகமே இல்லாத தெளிவான நண்பகல் நேரத்தில் சூரியனைப் பார்ப்பதில் நீங்கள் சிரமப்படுவீர்களா? மேகமே இல்லாத தெளிவான பௌர்ணமி இரவில் முழுநிலவைப் பார்ப்பதில் நீங்கள் சிரமப்படுவீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “(சிரமப்பட) மாட்டோம், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர்.

“இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே மறுமை நாளில், நற்பேறுகளுக்கு உரியவனும் மிக்குயந்தோனுமாகிய அல்லாஹ்வைக் காண நீங்கள் சிரமப்படமாட்டீர்கள். மறுமை நாள் ஏற்படும்போது, (அல்லாஹ்வின் அறிவிப்பை) அறிவிப்பவர், ‘ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகத்தில்) தாம் வணங்கியவற்றைப் பின்தொடர்ந்து செல்லட்டும்’ என்று அறிவிப்பார். அப்போது, அல்லாஹ்வை விடுத்து கற்பனை தெய்வங்களையும் கற்சிலைகளையும் வணங்கிக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர்கூட மிச்சமின்றி அனைவரும் நரக நெருப்பில் விழுவர். முடிவில் அல்லாஹ்வை மட்டும் வழிபட்டு (நன்மைகளும் புரிந்து) கொண்டிருந்த நல்லவர்களும் (அல்லாஹ்வை வழிபட்டுப் பாவங்களும் புரிந்து வந்த) பாவிகளும் வேதக்காரர்களில் கொஞ்சம் பேருமே எஞ்சியிருப்பர்.

அப்போது (வேதக்காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்களிடம், ‘நீங்கள் வழிபட்டது எது?’ என்று கேட்கப்படும். அவர்கள், ‘அல்லாஹ்வின் மகன் உஸைரை வழிபட்டுக் கொண்டிருந்தோம்’ என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், ‘பொய் சொல்கிறீர்கள். தனக்கு எவரையும் துணைவியாகவோ மகனாகவோ அல்லாஹ் எடுத்துக் கொள்ளவில்லை’ என்று கூறப்படும். அதற்கு அவர்கள், ‘எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக இருக்கிறது, (தண்ணீர்) புகட்டுவாயாக!’ எனக் கேட்பார்கள். உடனே, ‘நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் சென்றாலென்ன?’ என (ஒரு திசை) சுட்டிக் காட்டப்பட்டு, (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானல் நீர் போன்று காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்படியே அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.

பிறகு, கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டு, ‘நீங்கள் வழிபட்டது எது?’ என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள், ‘நாங்கள் அல்லாஹ்வின் மகன் மஸீஹை (ஈசாவை) வழிபட்டுக் கொண்டிருந்தோம்’ என்று கூறுவர். அப்போது அவர்களிடம், ‘பொய் சொல்கிறீர்கள். தனக்கு எவரையும் துணைவியாகவோ மகனாகவோ அல்லாஹ் எடுத்துக் கொள்ளவில்லை’ என்று கூறப்படும். அதற்கு அவர்கள், ‘எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக இருக்கிறது, (தண்ணீர்) புகட்டுவாயாக!’ எனக் கேட்பார்கள். உடனே, ‘நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் சென்றாலென்ன?’ என (ஒரு திசை) சுட்டிக் காட்டப்பட்டு, (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள். அது கானல் நீர் போன்று காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அப்படியே அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.

இறுதியில் அல்லாஹ்வை வழிபட்டு(க்கொண்டு நன்மைகளும் புரிந்து)வந்த நல்லோரும் (அல்லாஹ்வை வழிபட்டுக் கொண்டு பாவங்களும் புரிந்து வந்த) தீயோரும் எஞ்சியிருப்பர். அல்லாஹ்வைப் பற்றி அவர்கள் (தம் உள்ளத்தில்) எண்ணி வைத்திருந்த தோற்றங்களில் (இல்லாமல்) மிக ஒத்தவொரு தோற்றத்தில் அனைத்துலகின் இறைவன் அவர்களிடம் வருவான். அப்போது ‘நீங்கள் எதை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றீர்கள்? ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகில்) தாம் வழிபட்டுக் கொண்டிருந்தவற்றைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றார்களே!’ என்று அவன் கேட்பான். அவர்கள், ‘உலக வாழ்வில் நாங்கள் அந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுடையவர்களாக இருந்தும் அவர்களுடன் தோழமை கொள்ளாமல் பிரிந்திருந்தோம் (அவர்களுக்காக நாங்கள் காத்திருக்கவில்லை; எங்கள் இறைவனுக்காகக் காத்திருக்கிறோம்)’ என்று பதிலளிப்பார்கள்.

அப்போது இறைவன், ‘நான்தான் உங்கள் இறைவன்’ என்று கூறுவான். அதற்கு, ‘(இல்லை!) உன்னை விட்டும் அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம்; நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டோம்’ என்று இரண்டு அல்லது மூன்று தடவைகள் கூறுவார்கள். (அந்தச் சோதனையில்) அவர்களில் சிலர் (சத்தியத்திலிருந்து) பிறழ்ந்து விடும் அளவுக்குப் போய் விடுவார்கள். அப்போது, ‘அவனை இனங்கண்டு கொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?’ என்று இறைவன் கேட்பான். அவர்கள், ‘உண்டு’ என்று கூறுவார்கள். உடனே, (திரையுடனிருக்கும் இறைவனின்) கணுக்கால் திறந்து காட்டப் படும். அப்போது (உலகத்தில்) மனப்பூர்வமாக அல்லாஹ்வுக்குச் சிரம் பணிந்துக் கொண்டிருந்தவர் (அங்கும்) சிரம் பணிய இறைவன் அனுமதிப்பான். தற்காப்புக்காகவோ பாராட்டுக்காகவோ சிரம்பணிந்து வாழ்ந்து கொண்டிருந்தவருடைய முதுகை (நெடும் பலகையைப் போன்று) ஒரே நீட்டெலும்பாக அல்லாஹ் ஆக்கி விடுவான். அவர் சிரம் பணிய முற்படும்போதெல்லாம் மல்லாந்து விழுந்து விடுவார் (அவரால் சிரம் பணிய முடியாது).

பின்னர் அனைவரும் தலையை உயர்த்துவார்கள். அப்போது அவர்கள் பார்த்த முதல் தோற்றத்தில் இறைவன் காட்சியளித்து, ‘நான்தான் உங்கள் இறைவன்’ என்று கூறுவான். அதற்கு அவர்கள், ‘நீயே எங்கள் இறைவன்’ என்று கூறுவார்கள். (பாவம் புரிந்த இறை நம்பிக்கையாளர்களுக்காகப்) பரிந்துரை செய்ய அனுமதி கிடைக்கும்; நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும். அப்போது மக்கள், ‘அல்லாஹ்வே! காப்பாற்று!; காப்பாற்று!’ என்று பிரார்த்திப்பார்கள்”

என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிக் கொண்டு வந்தபோது, “அல்லாஹ்வின் தூதரே! பாலம் என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “(கால்கள்) வழுக்கி விடக் கூடிய ஓர் இடமாகும். அ(ந்தப் பாலத்)தில் நஜ்துப் பகுதியில் முளைக்கும் ‘சஅதான்’ எனப்படும் (முட்)செடியின் முற்களைப் போன்ற கொக்கிகள் இருக்கும்” என்று பதிலளித்தார்கள். தொடர்ந்து,

“இறைநம்பிக்கையாளர்கள் கண் சிமிட்டும் நேரத்தில் மின்னலைப் போன்று, காற்றைப் போன்று, பறவையைப் போன்று, ஜாதிக் குதிரைகளைப் போன்று, ஒட்டகங்களைப் போன்று (விரைந்து அந்தப் பாலத்தைக்) கடந்து விடுவார்கள். (அதைக் கடப்பவர்களுள் கொக்கிப் பிடியின்) காயங்களின்றித் தப்பித்துக் கொள்வோரும் காயங்களுடன் தப்புவோரும் உண்டு. பின்புறத்திலிருந்து தள்ளப்பட்டு நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் இறைநம்பிக்கையாளர்கள் (அந்தப் பாலத்தைக் கடந்து) நரக நெருப்பிலிருந்து தப்பி விடுவார்கள்.

என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! மறுமை நாளில் நரகத்தில் கிடக்கும் தம் சகோதரர்களின் நன்மையை வலியுறுத்தி இறைவனிடம் மிகவும் மன்றாடி வேண்டுபவர்கள் இறைநம்பிக்கையாளர்களைவிட வேறெவருமில்லை. அவர்கள் கூறுவார்கள்: ‘எங்கள் இறைவா! இவர்கள் எங்களுடன் நோன்பு நோற்றார்கள்; தொழுதார்கள்; ஹஜ் செய்தார்கள் (எனவே இவர்களை நீ நரகத்திலிருந்து விடுதலை செய்வாயாக!)’. அப்போது அவர்களிடம், ‘நீங்கள் (சென்று) உங்களுக்குத் தெரிந்தவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்’ என்று கூறப்படும். மேலும், (அடையாளம் காண்பதற்கு வசதியாக) அவர்களது உடலைத் தீண்டக்கூடாதென நரகத்திற்குத் தடை விதிக்கப்படும். இவர்கள் (நரகத்திற்குச் சென்று) ஏராளமான மக்களை வெளியே கொண்டு வருவார்கள். அப்போது (நரகத்தில் இருந்த) அவர்களில் சிலருடைய கணுக்கால்களில் பாதிவரையும் (இன்னும் சிலருடைய) முழங்கால்கள் வரையும் நரக நெருப்புத் தீண்டியிருக்கும். பிறகு, ‘எங்கள் இறைவா! நீ வெளியேற்றுமாறு கட்டளையிட்டவர்களுள் ஒருவர்கூட நரகத்தில் எஞ்சவில்லை (நாங்கள் வெளியேற்றிவிட்டோம்)’ என்று கூறுவார்கள்.

அப்போது இறைவன், ‘நீங்கள் திரும்பிச் சென்று, உள்ளத்தில் ஒரு தீனார் நிறைக்கு அளவு நன்மையைக் உடையவரையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்’ என்று கூறுவான். அவ்வாறே அவர்களும் (இன்னும்) ஏராளமான மக்களை வெளியேற்றிவிட்டு, ‘எங்கள் இறைவா! நீ உத்தரவிட்ட யாரையும் அதில் நாங்கள் விட்டு வைக்கவில்லை (வெளியேற்றி விட்டோம்)’ என்று கூறுவார்கள்.

‘நீங்கள் திரும்பிச் சென்று, உள்ளத்தில் அரை தீனார் நிறைக்கு அளவு நன்மையை உடையவரையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்’ என்று மீண்டும் இறைவன் கூறுவான். அவ்வாறே அவர்களும் (இன்னும்) ஏராளமான மக்களை வெளியேற்றிவிட்டு, ‘எங்கள் இறைவா! நீ உத்தரவிட்ட யாரையும் அதில் நாங்கள் விட்டு வைக்கவில்லை (வெளியேற்றி விட்டோம்)’ என்று கூறுவார்கள்.

‘நீங்கள் திரும்பிச் சென்று, உள்ளத்தில் அணுவளவு நன்மையை உடையவரையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்’ என்று பின்னரும் கூறுவான். அவ்வாறே அவர்களும் (இன்னும்) ஏராளமான மக்களை வெளியேற்றிவிட்டு, ‘எங்கள் இறைவா! நீ உத்தரவிட்ட யாரையும் அதில் நாங்கள் விட்டு வைக்கவில்லை (வெளியேற்றி விட்டோம்)’ என்று கூறுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

இவ்விடத்தில், “நான் கூறும் இந்த ஹதீஸை நீங்கள் நம்பாவிடின், விரும்பினால் ‘திண்ணமாக அல்லாஹ் (எவருக்கும்) அணுவளவும் அநீதி இழைக்கமாட்டான். (எவரும்) அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதை அவன் பன்மடங்காக்கி, அதற்கு மகத்தான சன்மானத்தைத் தன்னிடமிருந்து வழங்குவான்’ எனும் (4:40ஆவது) இறைவசனத்தை நீங்கள் ஓதி(அதன் மூலம் விளக்கம் பெற்று)க் கொள்ளலாம்” என்று அறிவிப்பாளர் அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி) கூறிய பின்னர் ஹதீஸ் தொடர்கிறது:

“வானவர்களும் நபிமார்களும் இறை நம்பிக்கையாளர்களும் பரிந்துரைத்து விட்டார்கள். இப்போது கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் மட்டுமே எஞ்சியிருக்கிறான்” என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறிவிட்டு, அறவே எந்த நன்மையும் செய்திராத ஒரு கூட்டத்தை, நரகத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவில் அள்ளியெடுத்து வெளியேற்றுவான். அவர்கள் கரிக்கட்டை போன்று மாறியிருப்பார்கள். எனவே, அவர்களைச் சொர்க்கத்தில் நுழைவாயில்களில் உள்ள ‘ஜீவநதி’ என்ற பெயருள்ள ஒரு நதியில் போடுவான். உழுநிலத்தில் விதைப்பயிர் முளைத்தெழுவதைப்போல் (பசுமையாக) வெளியேறுவார்கள். நீங்கள் பாறையோரங்களில் அல்லது மரங்களுக்கு அருகில் வளரும் விதைப்பயிரைப் பார்த்திருக்கின்றீர்கள் அல்லவா? அவற்றில் வெயில் படுமிடத்தில் வளர்பவை மஞ்சளாகவும் பச்சையாகவும் இருக்கும். நிழலில் வளர்பவை (வெளிறிப்போய்) வெள்ளை நிறத்தில் இருக்கும் அல்லவா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கிராமப் புறங்களில் (கால்நடைகளை) மேய்த்துக் கொண்டிருந்தீர்கள் போலும்” என்றார்கள்.

(தொடர்ந்து) “அவர்கள் (ஜீவநதியிலிருந்து) முத்துகளைப் போன்று (ஒளிர்ந்தவர்களாக) வெளியேறுவார்கள். அவர்களது கழுத்தில் (‘நரக விடுதலை பெற்றோர்’ எனும்) முத்திரை இருக்கும். (அதை வைத்து) அவர்களைச் சொர்க்கவாசிகள் அடையாளம் கண்டுகொள்வார்கள். ‘இவர்கள் அல்லாஹ்வால் (நரகத்திலிருந்து) விடுதலை செய்யப்பட்டவர்கள்; (உலகில்) எந்த நற்செயலும் செய்யாமல், எந்த நன்மையும் செய்து சேர்த்துக் கொள்ளாமல் இருந்த இவர்களை அல்லாஹ்வே (தனது தனிப்பெரும் கருணையால்) சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறான்’ என்று பேசிக் கொள்வார்கள்.

பிறகு (அவர்களிடம்) இறைவன், ‘சொர்க்கத்திற்குள் செல்லுங்கள்; அங்கு நீங்கள் காண்பதெல்லாம் உங்களுக்கே உரியன’ என்று கூறுவான். அதற்கு அவர்கள், ‘எங்கள் இறைவா! அகிலத்தாரில் யாருக்கும் வழங்காத(பாக்கியத்)தை எங்களுக்கு வழங்கி விட்டாய்’ என்று (நன்றியுடன்) கூறுவார்கள். அதற்கு இறைவன், ‘உங்களுக்கு இதையும்விடச் சிறந்த வேறொன்று இருக்கிறது” என்று கூறுவான். அதற்கு அவர்கள், ‘எங்கள் இறைவா! இதைவிடச் சிறந்த அந்த ஒன்று எது?’ என்று கேட்பார்கள். அதற்கு, ‘எனது திருப்தி!; இனி ஒருபோதும் உங்கள் மீது நான் கோபம் கொள்ள மாட்டேன்’ என்பான் இறைவன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி).

நூலாசிரியர் (முஸ்லிம்-ரஹ்) அவர்களது குறிப்பு:

ஷஃபா அத் எனும் பரிந்துரை தொடர்பான இந்த ஹதீஸை ஈஸா பின் ஹம்மாத் (ரஹ்) அவர்களிடம் வாசித்துக் காட்டி, “இந்த ஹதீஸை லைஸ் பின் ஸஅத் (ரஹ்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்று, எனக்குச் சொன்னதாக நான் அறிவிக்கலாமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்(அறிவியுங்கள்)” என்றார்கள்.

நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே!, நாங்கள் (மறுமையில்) எங்கள் இறைவனைக் காண்போமா?’ என்று கேட்டபோது, “(மேகமூட்டமில்லாத) தெளிவான நண்பகல் நேரத்தில் சூரியனைப் பார்க்க நீங்கள் சிரமப்படுவீர்களா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்டார்கள் என்று தொடங்கும் அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்களது ஹதீஸ், லைஸ் பின் ஸஅத் (ரஹ்) வழி அறிவிப்பில் “(உலகில்) எந்த நற்செயலும் செய்யாமல், எந்த நன்மையும் செய்து சேர்த்துக் கொள்ளாமல் இருந்த இவர்களை அல்லாஹ்வே (தனது தனிப்பெரும் கருணையால்) சொர்க்கத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறான்’ என்பதை அடுத்து, “நீங்கள் காணக்கூடிய இதுவும் இதைப் போன்று இன்னொரு மடங்கும் உங்களுக்கே உரியது என அவர்களிடம் கூறப்படும்” எனும் வாசகத்தை அதிகப்படியாக அறிவித்துள்ளார்கள். மேலும், “அந்தப் பாலம் முடியை விட மெலிதானது; வாளைவிடக் கூர்மையானது எனும் செய்தி எனக்கு எட்டியது” என்று அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்கள் கூறுவதாக அதில் இடம்பெற்றுள்ளது.

“(நரகத்திலிருந்து விடுதலை பெற்று சொர்க்கம் சென்ற) மக்கள், ‘எங்கள் இறைவா! அகிலத்தாரில் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை எங்களுக்கு நீ வழங்கி விட்டாய்’ என்று கூறுவார்கள் எனும் வாசகமும் அதற்குப் பிறகு வருபவையும் லைஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இடம்பெறவில்லை.

மேலும், “இந்த ஹதீஸைத் தங்களுக்கு லைஸ் பின் ஸஅத் (ரஹ்), காலித் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்தும் காலித் (ரஹ்), ஸயீத் பின் அபீஹிலால் (ரஹ்) அவர்களிடமிருந்தும் ஸயீத் (ரஹ்), ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களிடமிருந்தும் ஸைத் (ரஹ்), அதாஉ பின் யஸார்(ரஹ்) அவர்களிடமிருந்தும் அதாஉ (ரஹ்), அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தும் அபூஸயீத் (ரலி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்தும் அறிவித்தார்கள். சரிதானா?” என்று நான் ஈஸா பின் ஹம்மாத் அவர்களிடம் கேட்டேன். நான் கூறியதை ஈஸா பின் ஹம்மாத் அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.

மேற்கண்ட ஹதீஸ், அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழியாக அறிவிக்கப் படும்போது, சற்றே கூடுதல்-குறைவோடு காணப்படுகிறது.

Share this Hadith:

Leave a Comment