அத்தியாயம்: 10, பாடம்: 03, ஹதீஸ் எண்: 1510

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مَنْصُورُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّهِ ‏ ‏صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏

‏فَزِعَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَوْمًا قَالَتْ تَعْنِي يَوْمَ كَسَفَتْ الشَّمْسُ فَأَخَذَ دِرْعًا حَتَّى ‏ ‏أُدْرِكَ ‏ ‏بِرِدَائِهِ فَقَامَ لِلنَّاسِ قِيَامًا طَوِيلًا لَوْ أَنَّ إِنْسَانًا أَتَى لَمْ يَشْعُرْ أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَكَعَ مَا حَدَّثَ أَنَّهُ رَكَعَ مِنْ طُولِ الْقِيَامِ ‏

‏و حَدَّثَنِي ‏ ‏سَعِيدُ بْنُ يَحْيَى الْأُمَوِيُّ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ وَقَالَ قِيَامًا طَوِيلًا يَقُومُ ثُمَّ يَرْكَعُ وَزَادَ فَجَعَلْتُ أَنْظُرُ إِلَى الْمَرْأَةِ ‏ ‏أَسَنَّ ‏ ‏مِنِّي وَإِلَى الْأُخْرَى هِيَ ‏ ‏أَسْقَمُ ‏ ‏مِنِّي

ஒரு நாள் (சூரிய கிரகணம் ஏற்பட்ட தினத்தில்) நபி (ஸல்) பதற்றமடைந்தவர்களாக (தமது மேல்துண்டுக்குப் பதிலாகத் தம் மனைவியின்) திரைத் துணியை எடுத்து(த் தோளில்) போட்டிருந்தார்கள். பிறகு, அவர்களிடம் அவர்களது மேல்துண்டு கொண்டுபோய் சேர்க்கப்பட்டது. (புதிதாக) ஒருவர் அங்கு வந்தால், நபி (ஸல்) ருகூஉச் செய்தார்கள் என்பதை அவர் அறிய மாட்டார்; ‘ருகூஉச் செய்தார்கள்’ என அவர் சொல்லவுமாட்டார் எனும் நபி (ஸல்)அளவுக்கு நபி (ஸல்) மக்களுக்கு நீண்ட நேரம் நின்று தொழுவித்தார்கள்.

அறிவிப்பாளர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி).

குறிப்பு : ஸயீதுல் அமவீ (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர்கள் நிற்பதும் பிறகு ருகூஉச் செய்வதுமாக நீண்ட நேரம் நின்றிருந்தார்கள்” என்றும், “நான் என்னைவிட வயதில் மூத்த ஒரு பெண்ணும் என்னைவிட உடல் நலிவுற்ற மற்றோர் பெண்ணும் (நின்று தொழுவதைப்) பார்த்தேன். (எனவே உட்கார்ந்துவிடலாமா என்ற எனது எண்ணத்தை நான் மாற்றிக்கொண்டேன்)” என்றும் அஸ்மா (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment